ஸாரி டீச்சர் அதெல்லாம் எனக்கு தெரியாது! 188

நான் என் அம்மா முன்பு அந்த அளவுக்கு குரலை உயர்த்தி பேசியதே கிடையாது. டீச்சரை பற்றி அவள் தப்பாக பேச, எங்கிருந்துதான் வந்தது என்று தெரியாமலே அப்படி ஒரு துணிச்சல் எனக்குள் வந்திருந்தது. அம்மாவும் அதை பார்த்து அதிர்ந்து போயிருந்தாள். ஆனால் கொஞ்சம் கூட அறிவில்லாமல், தன் வக்கிரப் பேச்சை தொடர்ந்தாள்.

“என்னடா.. அம்மா முன்னாடி கையை நீட்டி பேசுற..? அந்த அளவுக்கு உனக்கு திமிராயிடுச்சா..? அவதான் எல்லாம் தூண்டி விடுறாளா..? காசுக்காக கண்டவன்கிட்டலாம் பல்லை காட்ற சிறுக்கி.. அவளுக்காக பெத்த அம்மாவையே எதுத்து பேச துணிஞ்சிட்டியா..?”

“அம்மா.. போதும்…!!”

“என்னடா போதும்..? அப்டித்தாண்டா பேசுவேன்..!! அவ காசுக்காக பல்லை மட்டுந்தான் காட்றாளோ.. இல்லை.. வேற என்னல்லாம் காட்றாளோ..?”

அவ்வளவுதான்..!! என்னால் அதற்குமேலும் பொங்கிவந்த ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ‘போளேர்ர்ர்…’ என்று அம்மாவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டேன். அவள் பொறி கலங்கிப் போனாள். அடிவிழுந்த கன்னத்தை அழுத்தி பிடித்தவாறு, என்னையே அதிர்ச்சியாய் பார்த்தாள். நான் அம்மாவை எரித்துவிடுவது போல ஒரு பார்வை பார்த்து, அவளை எச்சரிக்கும் குரலில் சொன்னேன்.

“உன் அசிங்கம் புடிச்ச பேச்செல்லாம்.. அப்பாவோட வச்சிக்கோ..!! இனிமே டீச்சரை பத்தி தப்பா பேசுன.. பெத்த அம்மான்னு கூட பாக்க மாட்டேன்.. கழுத்தை நெறிச்சு கொன்னுருவேன்..!!”

சொல்லிவிட்டு நான் திரும்பி, விடுவிடுவென உள்ளே நடந்தேன். அம்மா மீது கோபம், மனதுக்குள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. ச்சே..!! எப்படியெல்லாம் வக்கிரமாக பேசுகிறாள்..? இவளும் ஒரு பொம்பளைதானே..? இன்னொரு பெண்ணை பற்றி தப்பாக பேச எப்படித்தான் இவளுக்கு நாக்கு வளைகிறதோ..?

அப்புறம் நான் அவசரமாக குளித்து ஸ்கூல் கிளம்பினேன். ஹாலை கடந்தபோது, அம்மா இன்னும் பிரம்மை பிடித்தவள் மாதிரி அமர்ந்திருந்ததை பார்த்தேன். அவள் மேல எனக்கு இரக்கம் வரவில்லை. அந்த மாதிரி அறை அவளுக்கு தேவைதான் என்று தோன்றியது. அப்பா இந்த மாதிரி நாலு அறை விட்டிருந்தால், அம்மா எப்போதோ திருந்தியிருப்பாள் என்று தோன்றியது. ஆனால், அவள் எந்த காலத்திலும் திருந்தாத ஒரு ஜென்மம் என்று, அன்றே எனக்கு காட்டிவிட்டாள்.

அன்று பிற்பகல் பதினோரு மணி இருக்கும். நான் வாலிபால் கிரவுண்டில் இருந்தேன். பாலை எடுத்துக் கொண்டு சர்வீஸ் போடுவதற்காக கார்னர் சென்ற நான், தூரத்தில் முரளி ஓடிவருவதை பார்த்தேன். முரளி என்னுடைய க்ளாஸ்மேட். அவன் என்னை நோக்கித்தான் வருவது மாதிரி தெரிய, சர்வீஸ் போடாமல் அவனையே குழப்பமாக பார்த்தபடி நின்றிருந்தேன். அவன் மூச்சிரைக்க என் முன்னால் வந்து நின்றபடி சொன்னான்.

“அசோக்.. உன் அம்மா அங்க வந்து பிரச்னை பண்ணிட்டு இருக்காங்கடா..!!”

“எ..என்னடா சொல்ற..? எங்க..?”

“ஸ்டாஃப் ரூம் முன்னால.. ஜெனிஃபர் டீச்சரை.. அசிங்க அசிங்கமா திட்டிட்டு இருக்காங்க..!!”

5 Comments

  1. Romba bayandhute padiche ‘English teacher’le siva’ve savadicha madhiri jeni teacher ah savadichuruvingalonnu… positive ending… sex story padikura feel illa nalla love story padikura madhiri erundhuchu…???

  2. Yes romba super ahh irunthuchi antha mari story ahh ve therila romba nalla irunthuchi konjma kan kalangavum vachiruchi but unmaiya ipdi yarachum iruntha evolo nalla irukum cha semma bro super…. sollite polam

  3. Nejamave romba naala erunthuchu… Last varaikum padicha… Oru oru word um super… Ithu sex story nu sollave mudiyathu… Write panna ungaluku theriyum na yen ipdi sonnen nu…romba touching ah erunthuchu…paarata words ey illa ponga…padikum pothu apdiye kannu munnadi vanthu ninnuchu… Athan unga success.

  4. Super story, heart melting, I felt little incomplete, I’m expecting her return and upto their marriage or even more?!!

  5. ராக்கி

    Super story ji but innum eluthi irukalam.

Comments are closed.