வெள்ளக் கட்டி 3 85

ஆனா அதுதான் கடைசி கல்யாணம்.” “உங்க கல்யாணம் தான் ஊரறிய நடந்திருக்கு. இன்னாருக்கு இன்னார்தான் பொண்டாட்டி,புருசன்னு எல்லாருக்கும் தெரியும். அப்படி இருக்கிறப்போ எப்படி இன்னொரு கல்யாணம்?” “சார்…பாஸ்ட்டா போயிட்டிருக்கிற இந்த காலத்துலே அதை எல்லாம் நெனைச்சு பாக்க மனுஷனுக்கு நேரமில்லை. பக்கத்து வீட்டிலே இருக்கிரவனுக்கே அவன் பக்கத்து வீட்டு ஆளுங்க யாருன்னு தெரிஞ்சுக்காமே வாழ்க்கை நடத்துற காலம். சவுத் இந்திய விட்டா நோர்த் இந்திய. வெஸ்ட் இந்திய விட்டா ஈஸ்ட் இந்தியா.வாழறதுக்கு இடமா இல்லை. எங்களை யாருக்கும் தெரியாத இடத்துலே வாழ்ந்துட்டு போறோம். அதுவுமில்லாமே,ரஞ்சனிக்கி 21 வயசாகுது. எனக்கு 23 வயசாகுது. இளமைக்கு என்ன குறைச்சல். எங்க அப்பா, அம்மா, அண்ணனுங்க விருப்பப் பட்ட அடுத்த கல்யாணம் செஞ்சுக்குவோம்” “சரி….எந்த மாதிரி அல்லையன்ஸ் நீங்க எதிர் பாக்கறீங்க?” “சுருக்கமா சொன்னா,எங்க கல்ச்சருக்கு ஏத்த மாதிரி மாப்பிள்ளையும், பொண்ணும் வேணும். இருந்தா சொல்லுங்க.”