வாசமான ஜாதிமல்லி – பாகம் 4 65

ஆனால் ஒரு ஜோடி கண்களில் இருந்து அது தப்பவில்லை, சரவணனின் கண்கள். ஏனென்றால் சாதாரணமாக பார்க்கும் மற்றவர்களைப் போல இல்லாமல், அவர்கள் இருவரையும் அவன் முதலில் இருந்து கவனித்துக்கொண்டு இருந்தான்.

மிகக் சிறிய சில நொடிகள் மட்டுமே நம் கண்கள் சந்தித்தபோது ஏன் தீப்பொறிகள் நம் கண்கள் இடையே பறந்தன, மீராவின் இதயம் ஒரு பரபரப்பான உணர்வில் படபடவென்று நினைத்தது. அந்தச் சுருக்கமான இரண்டு வினாடிகள் கூட மீராவுக்கு அவன் கண்களில் இருந்த ஆசையை உணர்ந்துகொள்ள போதுமானதாக இருந்தது. அந்தக் கண்களில் அந்த நேரம் அவள் பார்த்த பார்வை அவளுக்கு பழக்கமான ஒன்று. பல முறை அவள் முழு நிர்வாணமாக அவளின் காட்டில் மெத்தையில் படுத்திருந்து, எப்போ அவன் என் கற்புக் குலைக்க போகிறான் என்று ஆவலுடன் அவனை பார்க்கையில், இதே போல தான் அவன் கண்கள் மின்னும். அப்போ, அவனுக்கும் என் மேல் ஏக்கம் குறையாமல் இருக்கு. அவளுக்கு மட்டும் தான் அந்த ஆசைகள் இருக்கு என்றிருந்தால் அது அவளை காயப்படுத்தியிருக்கும்.

அப்படி மட்டும் இருந்திருந்தால், அவன் அவளை வெறும் பயன்படுத்தினான் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கும். அப்படி என்றால் அவனுக்கு தேவைபட்ட எல்லா இன்பங்களும் அவள் உடலில் இருந்து கிடைத்த பிறகு அவள் அவனுக்கு ஒன்றுமே இல்லாதது போல அவளை தூக்கி எறிந்துவிட்டான் என்று அர்த்தம் ஆகியிருக்கும். அனால் அவனது கண்களில் தெரிந்த ஆசை. இந்த பார்வை தானே அவள் சொந்த ஆசைகளை தூண்டி எலிப்பியத்துக்கு காரணம். அதே அப்பட்டமான ஆசை இன்றும் இருக்கு என்று அவள் மகிழ்ந்தாள். ஒரு ஆண் தன்னை இவ்வளவு ஆசையோடு பார்த்தால், எந்த பெண்ணும் பெருமைப்படுவாள்.

அவன் தன் மனைவியையும் இவ்வாறு பார்த்திருப்பானா? மீரா அப்படி இருக்கும் என்று நினைக்கவில்லை. அல்லது அது அப்படி இருக்க கூடாது என்ற ஆசையில் அப்படி அவள் நினைத்தாலோ? அவன் மனைவியையும் இப்படி ஆசையுடன் அவன் பார்த்தால், அவன் முன்பு அவளை மயக்குவதுக்கு முயற்சிக்கும் போது சொன்னது போல, அவள் (மீரா) பிறப்புக்கு ஒன்னும் ஸ்பெஷெல் இல்லை என்று ஆகிவிடும். இது ஒரு பக்கம் இருக்க, பிரபுவுக்கு தன் மேல் உள்ள ஆசை சற்றும் குறையாமல் இன்னும் இருந்தால் அவன் ஏன் திடீரென்று, ஒரு வார்த்தை கூட என்னிடம் சொல்லாமல் போனான் என்று மீரா யோசித்தாள்.
பிரபுவின் திருமணத்தைப் பொருத்தவரை, அவன் தன் மாமாவின் மகளை திருமணம் செய்ய நிர்பந்திக்கப்பட்டிருக்கலாம், ஆனால் அவன் அதை குறைந்தபட்சம் என்னிடம் சொல்லியிருக்கலாம் இல்லையா. அவன் கல்யாணம் செய்துகொள்வதை பற்றி எனக்கு தெரிந்தால் நான் மோசமாக நடந்துகொள்வேன் என்று அவன் பயந்தானா? அல்லது நான் ரொம்ப வருத்தத்தில் ஏதாவது செய்வேன் என்று நினைத்தானோ. அது எப்படி சாத்தியும். நான் கல்யாணம் ஆனவள், நான் என்ன செய்திருப்பேன். மிஞ்சி மிஞ்சி போனால் கொஞ்சம் கண்ணீர் வந்திருக்கும். எனக்கு பிரபு மேல் எந்தவிதமான பிடிப்பும் இல்லை என்பது எனக்கு நல்லாவே தெரியும், என்று மீரா தன்னுள் நினைத்துக் கொண்டாள். அவர்கள் இந்த உறவில் எந்தவித எதிர்காலமும் இல்லை எம்பதும் தெளிவாக புரியும். நான் கல்யாணம் ஆனவள், மேலும் இரண்டு பிள்ளைகளுக்கு தாய். நான் என்ன எதிர்பார்க்க முடியும்.

இருப்பினும், அவர்கள் ஒன்றாக இருந்த அந்த விலைமதிப்பற்ற நாட்களில் அவள் மிகவும் சந்தோஷமாக புத்துணர்வுடன் இருப்பதாக உணர்ந்தாள். அவள் எதுவும் பெரிதாக அனுபவிக்காத மற்றும் இழந்த பருவத்தை மீண்டும் வாழ்ந்து கொண்டிருந்தாள். ஒரு ஆனால் ஒரு பெண் எப்படி காதல்புரியப் படுவாள் என்பதை முதல் முறையாக அறிந்தாள். அவளுடைய கண்டிப்பான வளர்ப்பின் காரணமாக அவளுக்கு இந்த அனுபவம் கிடைத்ததில்லை. காதல் கேலிப்பேச்சு, உணர்ச்சிவசப்பட்ட உடலுறவுக்கு முன்பு இருக்கும் ஆர்வத் தழுவல்கல் எல்லாம் புதுமையாக இருந்தது. காதலில் இருப்பது இவ்வளவு இனிமையாக இருக்கும் என்று அவன் ஒருபோதும் நினைக்கவில்லை. அவள் ரொம்ப அழகாக இருப்பதாக அப்போது தான் உண்மையில் உணர்ந்தாள். அவள் தனக்காக கட்டியெழுப்பிய, வாழ்ந்து கொண்டிருந்த அந்த இனிமையான கற்பனை உலகம் இன்னும் சிறிது காலம் நீடிக்கும் என்று அவள் நம்பியிருந்தாள்.

எங்களுக்கு நீண்ட கால எதிர்காலம் இல்லை என்று எனக்குத் தெரியும், மீரா தன் மனதில் ஒப்புக் கொண்டாள். இந்த உண்மையை அவள் ஏற்றுக்கொண்டால், பிரபுவிடமிருந்து நடந்த முடிவை விட அவள் வேற என்ன எதிர்பார்த்தாள்? அவள் தனுக்கு என்ன சொல்லிக்கொண்டாள். அவள் பிரபுவை பார்க்க விருப்பும் நோக்கம், அவனின் அவ்வாறு செய்கை அவளை வேதனை படுத்தும் என்று தெரிந்தும், அவன் ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் போனான் என்ற காரணத்தை அறிவதுக்கு மட்டுமே என்று தானே தனுக்கு சொல்லிக்கொண்டாள். இப்போது அவனை பார்க்கும் போது ஏன் இந்த பழைய ஆசை நினைவுகள்.

“ஏய் அற்ப பெண்ணே, நீ யாரை ஏமாற்ற பார்க்குற. அவன் ஒரு பார்வை போதும், உடனே உன் இதயம் சிறகடிக்க துவங்கியது, உன் உடலில் நடுக்கும் ஏற்பட்டது, அவன் மட்டும் உன்னை தழுவ அவன் கரங்களை நீட்டி இருந்தால் நீ அங்கே தஞ்சம் அடைந்திருப்ப,” என்று தன்னை திட்டிக்கொண்டாள்.

4 Comments

  1. 5,6 vendum kadnai

  2. Super update pannunga Bro

Comments are closed.