எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 5 89

சுரேஷ் : இப்போ எதுக்குடா?

ராஜா : அன்னிக்கு கிப்ட் வாங்கணும் டா

மணி : டேய் எல்லாரும் போலாம் டா

சுரேஷ் : ஆமாடா

ராஜா : மூணு பேரு எப்படிடா ஒரு பைக்ல

மணி : இரு நான் சேகருக்கு கால் பண்றேன் என்று சொல்லி கால் செய்தான். அவன் காலை எடுக்கவில்லை.

மணி : என்னடா எடுக்க மாட்றான்

ராஜா : நானும் பன்னேன்டா அவன் எடுக்கல

சுரேஷ் : டேய் நான் ஓட்டுறேன் மூணு பேரும் போலாம் டா

மணி : ஆமாடா அவன் ஒட்டுவான் போலாம்

ராஜா : சரி ஓகே என்று சொல்லிவிட்டு மூவரும் பொள்ளாச்சிக்கு கிளம்பினார்கள்.

அங்கே சேகர் வீட்டில்,
சேகர் குளித்து முடித்துவிட்டு வந்து போனைப் பார்த்தான். அதில் ராஜா மணி இருவரும் கால் செய்திருந்தார்கள். “இவனுங்க எதுக்கு கால் பண்ணிருக்கானுங்க” என்று மனதில் யோசித்துக்கொண்டு டிரஸ்சை போட்டுக்கொண்டான். பின் ராஜாவுக்கு கால் செய்தான் அவன் போனை எடுக்கவில்லை, பின் மணிக்கு கால் செய்தான் அவனும் போனை எடுக்கவில்லை. சரி வீட்டில் போய் பார்ப்போம் என்று நினைத்துக்கொண்டு பைக்கை எடுத்துக்கொண்டு மணி வீட்டிற்கு சென்றான். மணி வீடு சேகர் வீட்டிலிருந்து பக்கம்தான். அங்கே கேட்டில் நின்றுகொண்டு ஹாரன் அடி மணி என்று கூப்பிட்டான். உள்ளிருந்து மாலதி வெளியே வந்தாள் .

மாலதி : என்னடா வெளியவே நிற்கிற உள்ள வா

சேகர் : மணி எங்க? கால் பண்ணா எடுக்க மாட்றான்

மாலதி : அவன சுரேஷ் வந்து கூட்டிட்டு போனான். எங்க போறேன்னு சொல்லல

சேகர் : சரி நான் பாத்துக்குறேன் என்று சொல்லி பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

மாலதி : ஏன் சார் உள்ளே வர மாட்டீங்களோ?

சேகர் : அப்படி எல்லாம் இல்ல .அத்தை மாமா எங்க?

மாலதி : அவங்க நம்ம ஊர் பிரசிடெண்ட் பேத்தி வயசுக்கு வந்து இருக்கா. அந்த பங்ஷனுக்கு போயிருக்காங்க.

11 Comments

  1. Next update please , I am waiting

    1. Next part eppo varum

  2. Oh… why not continue? !!

  3. When u update the next part

    1. Un mail id sollu

  4. Super waiting for update

  5. Plzzzzzz next part update sema story very nice plzzzzzzzz next part update

  6. Next part update epo plzz update

  7. Un mail id sollu

  8. Un mail id sollu

Comments are closed.