“டேய் என்னடா இப்படியெல்லாம் பேசுறே?? எனக்கு பயமா இருக்குடா ராஜா, நான் உங்கப்பாவுக்கு போன் பண்ணி உடனே வீட்டுக்கு கிளம்பி வர சொல்ல போறேன்”, ராணி எழுந்து தன் போனை எடுக்க போனாள்.
“அம்மா ப்ளீஸ் மா!!! ப்ளீஸ்ஸ்ஸ்ஸ் அப்பா கிட்ட சொல்லாதிங்கம்மா இந்த அவமானத்தை அவர் கிட்ட சொன்னா அவரே என்னை கொன்னுடுவாரும்மா”, ராஜாவின் கண்களில் ஒரு மரண பயம் இருந்தது.
ஏதோ நடக்கக் கூடாதது நடந்திருக்க வேண்டும், மகனுக்கு என்னவோ ஆகியிருக்கிறது, அவன் மனதளவில் பாதிக்கப் பட்டிருக்கிறான் என்பதை புரிந்து கொண்டாள் ராணி.
ராணி மீண்டும் வந்து ராஜா பக்கத்தில் அமர்ந்தாள்.
“சொல்லுடா கண்ணா, என்னாச்சு?”, மிகவும் அமைதியாக நிதானமாக கேட்டாள்.
அம்மாவின் பாசம் பொங்கும் முகத்தை பார்த்த ராஜா, ஒரு கணம் யோசித்துவிட்டு சொல்ல ஆரம்பித்தான்.
“அம்மா நான் இன்னைக்கு காலேஜ் போனேனா?!!”
“சரி”, ராணி ராஜாவை பார்த்து தலையாட்டிக் கொண்டே கேட்டாள்.
“அங்க சீனியர்ஸ் எல்லாம் ராகிங் பண்ணாங்க”
“சரி”
“அதுல என்னை ரொம்ப அவமானப் படுத்திட்டாங்கம்மா, அதான் நான் இப்படி பண்ணிக்கிட்டேன்”, ராஜா மீண்டும் கண்களில் கண்ணீர் ததும்ப சொன்னான்.
“ச்ச்சே!!! இவ்வளவு தானா??!! இதுக்கு போயாடா நீ இப்படி அசம்பாவிதம் பண்ண இருந்த? நாளைக்கு நான் உங்க காலேஜுக்கு வரேன்டா, எவன் எவனெல்லாம் உன்னை ராகிங் பண்ணினான்னு சொல்லு, நாக்கை புடுங்கிக்கற மாதிரி கேட்டுட்டு வரேன்; அதுக்கப்பறம் உன்னை ஒன்னும் பண்ண மாட்டானுங்க.”
“அவனுங்க இல்லம்மா!!”, ராஜா கூனிக் குறுகி அம்மாவுக்கு கேட்காத மாதிரி சொன்னான்.
“என்னடா கண்ணா?”, ராணி திருப்பி கேட்டாள்.
“அவனுங்க இல்லம்மா”.
SEMMA STORY …..CONTINUE NEXT PART …..SUPER….