அங்கே ராஜா கையில் கத்தியை வைத்து தன் கையை அறுத்துக் கொள்ள முயற்சி பண்ணிக் கொண்ட்டிருந்தான்.
ராணிக்கு நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது.
“டேய் ராஜா!!!!! என்னடா பண்ணிட்டு இருக்க?? என்னடா கண்ணா ஆச்சு??”, கண்களில் தாரை தாரையாக கண்ணீர் ஊத்த மகனின் கையில் இருந்த கத்தியை தட்டிவிட்டு அவனை கட்டிப் பிடித்து அழுதாள்.
கூடவே ராஜாவும் அழுதான்.
மகனின் அழுகையை நிறுத்தி அவனை கட்டிலில் அமரவைத்தாள் ராணி. அவளும் பக்கத்தில் அமர்ந்து அவன் முதுகை தடவி விட்டுக் கொண்டே பேசினாள்.
“டேய் கண்ணா, உனக்கு அம்மா என்னடா குறை வச்சுருக்கேன்??; ஏன்டா இப்படி பண்ண பார்த்தே??”
ராஜா பதில் ஏதும் பேசவில்லை.
“உனக்கு படிக்க புடிக்கலையா? காலேஜ் போயிட்டு சந்தோசமா வருவேன்னு நான் உனக்கு புடிச்சதெல்லாம் சமைச்சு வெச்சேன், நீ என்னடான்னா இப்படி பண்ணிட்டு இருக்கே?”
ராஜா மௌனம் கலையாமல் சிலை போல அமர்ந்திருந்தான்.
“உங்கப்பா கேட்டா நான் என்னடா சொல்றது?, இது தெரிஞ்சா அவர் என்னடா நினைப்பாரு?, கொஞ்சமாவது யோசிச்சியாடா கண்ணா?”
இப்போது ராஜாவின் கண்கள் மீண்டும் கலங்கின.
“ராஜா ஏன்டா அழுவுறே? என்ன ஆச்சு அம்மாகிட்ட சொல்லுடா கண்ணா”, ராணி அவனை தடவிக் கொடுத்து பாசமாக கேட்டாள்.
“இல்லம்மா நான் வாழவே தகுதி இல்லாதவன், இனிமே நான் உயிரோட இருக்க கூடாது, நான் சாவுறதுதான் சரி.”
SEMMA STORY …..CONTINUE NEXT PART …..SUPER….