வாசமான ஜாதிமல்லி – பாகம் 11 61

ஒரு ஆறுதலான கையை அவள் மீது வைக்க விரும்பி சரவணன் அவள் அருகில் சென்றான். அவன் அவளைத் தொடுவதற்குள் அவள் திகிலுடன் அவனிடமிருந்து விலகிச் சென்றாள். இப்படி அவள் செய்யும் போது அவள் கணவரின் கண்களில் ஏற்பட்ட காயத்தை அவள் பார்த்தபோது, அவள் துக்கத்துடன் பதறி போனாள். அவர் தன்னை தொட கூட பிடிக்காமல் அவள் அவர் மேல் வெறுப்பு இருக்கு என்ற தவறாக நினைத்துவிட்டாரோ என்று துடித்துப்போனாள். அவள் மேல் அவர் கணவனின் விறல் பட கூடாது என்று அவர் விரும்பினாள் அனால் அதன் காரணமே வேற. அவரின் புனிதமான விரல்கள் அவளை போன்ற பெரும் பாவம் புரிந்த ஆள் மீது பட கூடாது. அது அவர் புனித்ததைய கெடுத்துவிடும் என்று மனதில் குமுறினாள்.

இல்லை… இல்லை .. நீங்கள் என்னைத் தொடக்கூடாது. உங்கள் விரல்கள் இந்த அசுத்தமான உடலை மீண்டும் ஒருபோதும் தொடக்கூடாது, “என்று அவள் கெஞ்சினாள்.

“மீரா அப்படி சொல்லாதே….” சரவணன் சொல்ல ஆரம்பித்தான் , ஆனால் அவள் மேலும் தொடர்ந்து பேசி அவன் வார்த்தைகளை நிறுத்தினாள்.

“இல்லை .. இல்லை…,” என்று கெஞ்சினாள், “என் பாவப்பட்ட துர்நாற்றம் உங்களுக்கும் ஒட்டிக்கொள்ளும். நீங்க எனக்கு எந்த அனுதாபமும் ப்டுவதுக்கு நான் தகுதியற்றவள். நான் உங்களை எவ்வளவு ஆழமாக காயப்படுத்தினேன் என்று நான் நினைக்கும் ஒவ்வொரு முறையும் என் இதயத்தில் ஈட்டு குத்துவது போல வலியை ஏற்படுத்துகிறது.”

1 Comment

  1. Wish them all the best and retrieve their life with happiness……

Comments are closed.