வாசமான ஜாதிமல்லி – பாகம் 11 61

அவள் மெதுவாக திரும்பி அவன் முகத்தைப் பார்க்க சில நிமிடங்கள் ஆனது. இந்த அரை மணி நேர இடைவெளியில் அவள் முகம் வியப்பு அடையும் அளவில் ரொம்ப மாறிப்போய்விட்டது. எப்போதும் அவளுக்கு பிரகாசமான, அழகான முகம். அதற்கு பதிலாக அவள் கண்கள் எந்த ஒளி இல்லாமல் வெற்று குளம் போல் தெரிந்தது. அவள் அழுது அழுது அவள் முகம் வீங்கி இருந்தது. அவளுடைய முக தசைகள் கூட அவற்றின் உறுதியை இழந்துவிட்டதாகத் தோன்றியது. அவள் அவன் முகத்தைப் பார்த்ததும், அவளுக்குள் இது வரைக்கும் இருந்த கட்டுப்பாட்டை இழந்தாள். பிரபு இங்கே இருந்தபோது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள அவள் ஒரு மிக பெரிய முயற்சியை மேற்கொண்டிருந்தாள், ஆனால் இப்போது அவள் உள்ளே இருந்த அவளுடைய எல்லா துக்கமான உணர்ச்சிகளும் அவள் கட்டுப்படுத்த முடியாமல் போனது.

அவள் கூச்சலிட்டாள், வேதனையில் அலறினாள், அவள் உடல் கட்டுக்கடங்காமல் தூக்கி தூக்கி போட்டது, அவள் அன்பான கணவனை பார்க்க முடியாமல் துடித்தாள். இப்போது கூட அவன் அவள் முகத்தைப் பார்த்தபோது அந்தக் கண்களில் கோபமோ, அறிவுறுத்தலோ இல்லை. அவளுடைய மோசமான மற்றும் வெட்கக்கேடான நடத்தை தெரிந்து இருந்தபோதிலும் அங்கே தென்பட்டது அவளுக்கு இரக்கமும் அக்கறையும் மட்டுமே. இத்தனை ஆண்டுகளில், திருமணத்தில் அவர்களை ஒன்றிணைத்த பாசத்தோடு வாழ்ந்த அந்த புனித உறவை அவள் சீரழித்துவிட்டாள். அவள் வாழ்க்கையில் கற்பித்த எல்லா ஒழுக்கமும் அவளை பற்றிக்கொண்ட காமம் அவளை எல்லாம் மறக்க செய்து இந்த தலைகுனியும் நிலைமைக்கு கொண்டுவந்து விட்டது.

ஏன்… ஏன்… ஏன்… .எப்படி உங்களால் தாங்க முடிந்தது .. அவள் அழுதபடி எதோ பேய் பிடித்தது போல தலையை வேகமாக ஆட்டினாள்.

1 Comment

  1. Wish them all the best and retrieve their life with happiness……

Comments are closed.