வாசமான ஜாதிமல்லி – பாகம் 11 61

டாக்டர் அருளுக்கு சரவணனின் தயக்கத்தைக் காண முடிந்தது. அவருக்கு இது நல்லாவே புரிந்தது. அவர் சிகிச்சையளிப்பதில் அவரது 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தில், மக்கள் மனம் திறந்து எல்லாம் சொல்வது எவ்வளவு கடினம் என்பதை அவர் அறிந்திருந்தார். இது பொதுவாக வலிமிகுந்த நினைவுகளைத் மீண்டும் கிளறிவிடும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அதைப் பற்றி மீண்டும் பேச சங்கடம் படுவது புரிந்துகொள்ள முடிந்தது. இது போன்ற விஷயங்கள் பொதுவாக மிகவும் தனிப்பட்ட விஷயம் மற்றும் உணர்வுகள் பாதிப்பை கொண்டவை. அவர் பொறுமையாக இருக்க வேண்டியிருந்தது, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தனது உதவியை நாடுகிற மக்களுக்கு அவர் நம்பிக்கை கொடுக்க வேண்டியிருந்தது.

“சரவணன், என்ன நடந்தது என்பதைப் பற்றி பேசுவது உங்களுக்கு கடினம் என்று எனக்குத் தெரியும், ஆனால் உங்கள் இருவருக்கும் நான் உதவுவதற்கு எனக்கு முன்பு நடந்த விஷயங்கள் தெளிவாக அறிவது அவசியம். நீங்கள் இங்கே வெளிப்படுத்துவது கண்டிப்பாக மருத்துவர் / நோயாளியின் இரகசியத்தன்மையைக் கொண்டிருக்கும். அது வேறு யாருக்கும் தெரியாது, ஏன்,எனக்கு வேலை செய்யும் செவிலியர்கள் கூட தெரிய வராது என்றும் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நான் பரிந்துரைக்கும் சிகிச்சை / மருந்து மட்டுமே அவர்களுக்குத் தெரியும், ஆனால் நோயாளியின் வரலாற்றின் விவரங்கள் எதுவும் கிடையாது. அது எனது தனிப்பட்ட ரகசிய குறிப்புகளில் மட்டுமே இருக்கும்.”

டாக்டர் அருள், சரவணன் அவர் பேசியபின் சற்று அமைதி அடைவதை கண்டார், ஆனாலும் இந்த விஷயத்தைத் திறந்து வெளிப்படுத்த சரவணனின் மன போராட்டத்தைக் காண முடிந்தது. அவர் வெளிப்படுத்த வேண்டியது தனிப்பட்ட முறையில் மிகவும் சங்கடமாக இருந்த ஒரு விஷயமாக இருக்க வேண்டும். அது என்னவாக இருக்கக்கூடும் என்று அவர் ஓரளவு யூகிக்க முடியும், ஆனால் அவர் தானாக முடிவுகளுக்கு செல்ல விரும்பவில்லை, சரவணன் பேசுவதற்காக காத்திருந்தார்.

1 Comment

  1. Wish them all the best and retrieve their life with happiness……

Comments are closed.