வாசமான ஜாதிமல்லி – பாகம் 11 61

“உள்ளே வாங்க, திரு. சரவணன் மற்றும் திருமதி மீரா,” அவர் ஒரு புன்னகையுடன் அவர்களை அன்புடன் வரவேற்றார். “டாக்டர். கணேஷ் (முன்னதாக மீராவுக்கு சிகிச்சையளித்த நிபுணர்) உங்களைப் பற்றி எனக்கு விளக்கி இருக்கார் . தயவு செய்து உட்காருங்கள்.”

பின்னர் அவர் பொதுவாக வயது, கல்விப் பின்னணி, வீடு மற்றும் குடும்பம், தொழில் போன்ற அவர்களின் பின்னணியைப் பற்றி சில கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். அவர் பேசும் விதத்தில் ரொம்ப கனிவு இருந்தது. மீரா மெதுவாக அவளது பீதியை இழக்கத் தொடங்கினாள். மீராவை இந்த அறைக்கு இணைக்கப்பட்ட அறைக்கு அழைத்துச் செல்ல டாக்டர் அருள் மற்றொரு செவிலியரை அழைத்தார். மீராவின் எடை, உயரம் மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை மீராவுக்கு எடுக்க சொன்னார். மீரா சிறிது நேரம் அங்கே இருக்கும் ஒரு படுக்கையில் படுத்துக் கொஞ்சம் ஓவ்வு எடுக்க சொன்னார். இப்போது சில விஷயங்கள் தெரிந்த கொள்ள, சரவணனிடம் தனியாக பேச விருமினார்.

மீரா தயக்கத்துடன் செவிலியர்ருடன் போனாள் (அவள் சரவணனின் பக்கத்தை விட்டு செல்ல விரும்பவில்லை). டாக்டர் அருள் இப்போது தனது கவனத்தை சரவணன் பக்கம் திருப்பினார்.

“திரு. சரவணன், நான் உங்களை சரவணன் என்று பெயர் சொல்லி அழைக்கலாமா? நம்ம ரொம்ப போர்மலாக இருக்க வேண்டாம் என்று நான் நினைக்கிறேன். ”

“நிச்சயமாக டாக்டர், அப்படியே கூப்பிடுங்க, எந்த பிரச்சனையும் இல்லை.”

“நல்லது நல்லது. சரவணன், டாக்டர் கணேஷ் உங்கள் மனைவியிடம் அவர் நடத்திய அனைத்து சோதனைகள் மற்றும் ரிசல்ட் பற்றி என்னிடம் கூறினார். இப்போதைய நிலைமை ஏற்படுத்திய பிரச்சினைகள் அல்லது சிக்கல்கள் என்னவென்று நீங்கள் என்னிடம் சொல்லுங்கள். நான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். ”

1 Comment

  1. Wish them all the best and retrieve their life with happiness……

Comments are closed.