வாசமான ஜாதிமல்லி – பாகம் 11 61

அதற்க்கு அடுத்த வாரத்தில் சரவணன் மீராவுக்கு இப்போதைக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவரால் சொன்ன அந்த மனநல நிபுணரான டாக்டர் அருள் பிரபாகரனுடன் சந்திப்புக்காக மீராவை அழைத்துச் சென்றான். மீரா அவர்கள் முன்பு சென்ற மருத்துவமனை இல்லாமல் விட வேறு மருத்துவமனைக்குச் செல்வதைக் பார்த்து பீதியடைந்தாள்.

மீரா இப்போது எல்லாம் ரொம்ப அமைதியாக இருப்பவள். பெரும்பாலும் யாரிடமும் பேச மாட்டாள் அதுவும் பேசினால் அளவோடு தான் பேசுவாள். அவள் பிள்ளைகளுடன் பேசும் போது மட்டும் கொஞ்சம் சாதாரணமாக பேசுவாள். அவள் செய்த துரோகத்துக்காக அவள் சரவணனிடம் சாதாரணமாக பேச வெட்கப்படுவாள் அனால் இப்போது அவளாகவே பேசினாள்.

“நாம் எங்கே போகிறோம்? ஏன் இந்த மருத்துவமனை? ” அவள் கேட்டாள்.

“கவலைப்படதே மீரா, நாம இப்போது ஒரு புதிய மருத்துவரைப் பார்க்க போறோம். நம்ம பழைய மருத்துவர் அவரைப் பார்க்க பரிந்துரைத்தார், ”சரவணன் அவளுக்கு ஆறுதலாக கூறினான்.

“இது எதற்கு, நான் நல்ல தான் இருக்கேன். எனக்கு ஒன்னும் இல்லை.”

அவளுக்கு ஆறுதலாக பேசியபடியே அவர்கள் ரிசெப்ஷனுக்கு வந்து சேர்ந்தார்கள். டாக்டர் அருலைக் பற்றி கேட்டதும், அவர்கள் மருத்துவமனையின் 2 வது மாடியில் உள்ள டாக்டரின் சிகிச்சை அறைக்கு அனுப்பப்பட்டனர். டர். அருள் ரிசப்ஷனில், டாக்டர் தற்போது மற்றொரு நோயாளியுடன் இருப்பதால் அவர்களை காத்திருக்கச் சொன்னாள் அங்கே இருக்கும் நேர்ஸ் கம் ரிஷப்ஷனிஸ்ட். அவர்கள் அப்பொய்ண்ட்மென்டுக்கு சுமார் 15 நிமிடங்கள் முன்னதாகவே வந்துவிட்டார்கள். மீரா அங்கேயே காத்திருக்கும்போது மேலும் மேலும் பதற்றமடைவதை சரவணன் பார்க்க முடிந்தது. இறுதியாக, ஒரு ஜோடி மருத்துவரின் அறையிலிருந்து அவர்கள் சிகிச்சை முடிந்து வெளியே வந்தார்கள்.

சரவணனையும் மீராவையும் உள்ளே செல்லச் சொல்ல அவர்கள் டாக்டர் அறை உள்ளே போனார்கள். டாக்டர் அருள் ஒரு 45 தில் இருந்து 48 வயதுடையர் போல தோன்றியது. ஒரு நோயாளியை அமைதிப்படுத்தும் ஒரு கனிவான முகம் அவருக்கு இருந்தது. அவர் சார்ந்த மருத்துவ நிபுணத்துவத்துக்கு அது ஒரு பிளஸ் பாயிண்டாக இருக்கலாம்.

1 Comment

  1. Wish them all the best and retrieve their life with happiness……

Comments are closed.