வாசமான ஜாதிமல்லி – பாகம் 11 61

டாக்டர் என்ன சொல்கிறார் என்று சரவணன் யோசித்துக்கொண்டிருந்தான். மீரா இருக்கும் மன அழுத்தத்தை அவன் அறிந்திருந்தான். அவள் எப்போதும் சோகமாக, எதோ பறிகொடுத்து போல இருப்பாள். குழந்தைகள் அல்லது அவன் இருக்கும் போது அந்த பாதிப்பு குறைவதை அறிந்தான். சில நேரத்தில் அவள் அழுது இருக்கிறாள் என்று அவள் முகத்தை பார்த்தால் தெரியும். ஒரு முறை அவள் முன்பு போல பிரபுவுக்கு தான் ஏங்கி இருக்காள் என்று நினைத்து அதை கேட்டும் செய்துவிட்டான். அவன் அவளை அறைந்தது போல் அவள் முகம் சுளித்தது. அவள் முகம் வாடி போனது. அவளது வேதனையான தோற்றம் அவன் கேட்டதற்கு உடனடியாக அவனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

“அவனை மறுபடியும் பற்பத்துக்கு பதிலாக நான் செத்து போய்விடுவேன். இப்படி நீங்க நினைப்பதுக்கு நான் எப்படி குற்றம் சொல்ல முடியும். நான் முன்பு அவ்வளவு கீழ் தரமாக நடந்து கொண்டேன் இல்லையா,” என்று கூறிய மீரா தேம்பி தேம்பி அழுதாள்.

நான் ஏன் இப்படி கேட்டேன் என்று சரவணன் தன்னை திட்டிக்கொண்டான். அவனது வார்த்தைகளால் ஏற்பட்ட வலியிலிருந்து அவள் மீண்டு வர சில நாட்கள் ஆனது. பிரபுவுடனான மீராவின் உறவு நிரந்தரமாக முடிவடைந்த பின்னர் அவன் எதிர்பார்த்ததைப் போல அவர்களின் வாழ்க்கை மீண்டும் முன்பு போல சந்தோஷமாக மாறவில்லை. இன்னும் என்ன தான் அவன் செய்ய முடியும் என்று வருந்தினான்.

“டாக்டர் நான் இப்போ என்ன செய்ய வேண்டும்?”

“எனக்கு ஒரு சக ஊழியர் இருக்கிறார், இது போன்ற பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் திறமமைசாலி. உங்களுக்காக அவருடன் ஒரு அப்பொய்ண்ட்மென்ட் செய்கிறேன். அடுத்த வாரம் உங்களுக்கு சரியாக இருக்கும்மா?”

சரவணன் தனது ஆழமான எண்ணங்களில் மூழ்கியபடி தனது காரை ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டான். மீரா ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக அவனருகில் அமர்ந்தாள் (சரவணன் அங்கே உட்கார வலியுறுத்தினான்). மாலை நேரம் ரொம்ப ஓடிவிட்டதால் இருட்டாகிவிட்டது.

1 Comment

  1. Wish them all the best and retrieve their life with happiness……

Comments are closed.