கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 38 9

“என் லவ்வர் செல்வாவுக்கு என் மேல உங்களுக்கு இருக்கற ஆசை தெரிஞ்சா.. காதல் தெரிஞ்சா, அவனோட உடனடியான ரியாக்ஷன் எப்படி இருக்கும்? ஏற்கனவே நீங்க எங்க லவ் லைஃப்ல ஒரு குழப்பத்தை உண்டாக்கியிருக்கீங்க… அதுக்காக அவன் கிட்ட நீங்க மன்னிப்பும் கேட்டு இருக்கீங்க… அதுக்கு மேல இப்ப நீங்க என்னை லவ் பண்ணறீங்கன்னு அவனுக்குத் தெரிஞ்சா அவன் எங்கிட்ட எப்படி நார்மலா பழகுவான்…? அவனும் ஒரு சராசரி ஆண்… என் எதிர்கால வாழ்க்கையை நீங்க யோசனை பண்ணுங்களேன்.” சுகன்யா நிதானமாக பேசினாள்.

“என் மனசுல எது சரின்னு படுதோ அதைத்தான் நான் என் வாழ்க்கையில, இதுவரைக்கும் செய்துகிட்டு வந்திருக்கேன். உனக்கும், செல்வாவுக்கும், ஆப்பு வெக்கணும்ன்னு என் மனசு சொல்லுச்சு; உடனே அதைப் பண்ணேன்…”

“அடுத்தவங்களும் அவங்க மனசுக்கு சரின்னு படறதைத்தானே செய்வாங்க…இதை நீங்களும் புரிஞ்சுக்கணும்..” சுகன்யாவும் விடாமல் பேசினாள்.

“சுகா… நீ சொல்றதும் உண்மை… நான் பண்ணது தப்புடான்னு என் அம்மா என்னை ஓங்கி அறைஞ்சா… அம்மா செய்யறது சரின்னு புரிஞ்சுது; பேசாம அந்த அடியை நான் வாங்கிக்கிட்டேன்..”

“கடைசியில உன்னைப் புரிஞ்சுகிட்டு, நான் பண்ணது தப்புன்னு உணர்ந்தேன்.. நட்ட நடுரோடுல, முன்னே பின்னே பாத்திராத உன் செல்வாகிட்ட, என் கவுரவத்தைப் பாக்காம, என் தப்புக்காக, அவன் கையைப் பிடிச்சு மன்னிப்பு கேட்டேன்… சுகன்யா..”

“அத்தான் இது எப்ப நடந்தது…? செல்வாகிட்ட வேற என்ன சொன்னீங்க…? என்னை நீங்க காதலிக்கறதையும், ஆசைப்படறதையும், அவன் கிட்டவும் சொல்லிடீங்களா?” அதிர்ச்சியுடன் அவசர அவசரமாக குரல் குளறக் கேட்டாள், சுகன்யா.

“உங்க நிச்சயதார்த்ததுக்கு மொதல் நாள் ராத்திரி, உன் செல்வாவை நான் தனியா மீட் பண்ணேன். ஆனா நான் உன்னை காதலிக்கறது உன் செல்வாவுக்கு தெரியாது…”

“ம்ம்ம்… அப்பாடா..” சுகன்யா ஒரு வினாடி நிம்மதி பெருமூச்செறிந்தாள்.

“சுகன்யா… நான் என்ன மடையனா? உன்னை காதலிக்கற விஷயத்தை நான் உன் கிட்டதானே சொல்லுவேன்… செல்வாகிட்ட ஏன் சொல்லணும்..?”

“அத்தான்… நாம சீரியஸா ஒரு விஷயத்தைப் பேசறோம்.. நீங்க இப்ப எதுக்கு நடுவுல காமெடி பண்றீங்க…”

“சுகா… நான் உன்னை உண்மையா காதலிக்கறேம்மா.. அது காமெடி இல்லே..”

3 Comments

  1. அவ்வளவுதானா, பத்மா ராகவன் லாம் யாருங்க, சுகன்யா, தமிழ்செல்வன் கல்யாணம் என்னாச்சு

  2. Kathai avalauthu thana

    1. Please complete the marriage of Meena and seenu and also the marriage of suganya and selva. Then only the story will come to the end. Please complete the story accordingly.

Comments are closed.