அவளுக்கும் ஆசை வருமா வராதா Part 5

“ஆமாங்க.. இருந்தாலும் எனக்கு என்னமோ நீங்க பேசினது பிடிச்சிருக்குங்க.”

“என்னமோ போ நீ ஒருத்தி தான் என்னைய ரொம்ப நல்லவன் சொல்ற. பேசினது கூட பிடிச்சிருக்கு சொல்ற..
ஆனா அகல்யாக்கு ரொம்ப நேரம் கால் பேசினாலே கோவம் வரும்.”

“அது வரதாங்க செய்யும்.. ஏன்னா எந்த பொண்ணுமே தன் மனசுக்கு பிடிச்ச ஆம்பள தன்னோட மட்டும் தான் பேசிட்டே இருக்கனும் நெனைப்பாங்க.”

“ஓ.. அப்போ நீயும் அப்படி தான் போல.”

“அய்யோ நா உங்கள எதும் சொல்லமாட்டேன்ங்க.. நீ யாரோட வேணாலும் எவ்வளவு நேரம் வேணாலும் பேசுக்கோங்க.”

“ஏன் தாமரை என்னைய உனக்கு பிடிக்காதா?” சும்மா வம்பிழுக்கும் விதமாக கேட்க அவள் உடனே பதறி

“அய்யோ அப்படி எல்லாம் இல்லீங்க. இந்த உலகத்துல உங்கள தவிர வேற ஆம்பளய என் மனசுக்கு பிடிக்காதுங்க.” உணர்ச்சி பூர்வமாக சொல்ல அதற்கு மேலும் அவளை பேசி கஷ்டபடுத்த விரும்பாமல்

“சரி தாமரை நா வேலை விசயாம கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன். நீ அதுவரை பாத்திர இரு. கதவ பூட்டியே வச்சிரு..”

“சரிங்க.. நீங்க பாத்து போய்ட்டு வாங்க.”

“ம்ம்.. சரி தாமரை. மதியம் வரும் போது சாப்பாடு வாங்கிட்டு வந்திடுறேன்.
நீ எதுவும் பண்ண வேணாம்..”

“சரிங்க” அவள் சொல்ல அங்கிருந்து கிளம்பி அடுத்த அரை மணி நேரத்தில் அந்த கான்வென்டை அடைந்தேன்.

அகல்யாவின் இறப்பிற்கு பின் நான் இந்த பக்கம் வரவே இல்லை. அவர்களும் என் நிலையை புரிந்துக் கொண்டு எந்த வித தொந்தரவும் கொடுக்கவில்லை. கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இன்று தான் இந்த கான்வென்ட்டில் இருந்து கால் செய்து இருக்கிறார்கள். அதிலும் ஒரு தயக்கம், கலக்கம், வேதனை எல்லாம் நிறைந்து தான் இருந்தது.

அந்த கான்வென்ட்டின் மெயின் கதவை திறந்து உள்ளே சென்றேன். இந்த இடத்தில் தான் எனக்கும் அகல்யாவுக்கும் ஆன மலரும் காதல் நினைவுகள் நிறைந்திருக்கின்றன. இங்கு இருக்கின்ற ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு மலரும் நினைவுகளை எடுத்துச் சொல்லும்.
இதோ என் முன்னால் தெரிக்கின்ற இரண்டடுக்கு கட்டிடடம் தான் எங்களின் காதல் நினைவுகளுக்கு ஆரம்பம். இந்த கட்டிடடத்தை கட்டும் போது ஏற்பட்ட சுவாரஸ்யமான சம்பவங்கள் நிறைய இருக்கின்றது. இப்போது அந்த கட்டடத்தை பார்க்கும் போது என் கண் முன்னால் அந்த நினைவுகள் நிழலாக வருகின்றது.

புதிதாக கட்டப்பட்ட நிலையில் இருக்கும் இந்த கட்டிடத்திற்கு முன்பு இருந்த கட்டிடடம் கொஞ்சம் சிதிலமடைந்த நிலையில் பழைய கட்டிடடமாக இருந்தது. அதனை இடித்துவிட்டு புதிதாக கட்டி தரச் சொன்னார்கள். இது அந்த கான்ட்ராக்டில் கடைசியாக சேர்க்கப்பட்டது. ஆனால் இதனை செய்து முடிக்க நாட்கள் அதிகமாகும் என்பதால் முதலில் இந்த வேலையை ஆரம்பிக்க சொன்னேன். அந்த பழைய கட்டிடடத்தை இடிக்க இரண்டு ஆண்களையும் இடித்த கற்களை அள்ளி செல்ல இரண்டு பெண்களையும் நியமித்துவிட்டேன். அவர்களும் நான் சொன்ன வேலையை செய்துக் கொண்டிருந்தனர்.

அந்த ஆள் தவறான இடத்தில் உட்காந்துக் கொண்டு கட்டிடடத்தை இடித்துக் கொண்டிருந்தான். அதை பார்த்ததும் அவனிடம் சென்று கோவமாக

“ஏய் எங்க உட்காந்து எப்படி இடிச்சிட்டு இருக்க? அங்க இருந்து கீழ விழுந்தா உடம்புல இருக்குற உயிர் ஊசலாடிடும் பாத்துக்க. பின்ன உன் குடும்பத்துக்கு யார் பதில் சொல்றது.?” நான் கத்த

அவன் இறங்கி வந்து “இல்ல சார் உயரம் பத்தல அதான்” இழுக்க

“உயரம் பத்தலைனா கோக்காலி வாங்கிக்க வேண்டிய தான” சத்தம் போட்டுக் கொண்டிருக்க அதற்குள் இடித்த பகுதி கீழே விழும் போது சுதாரித்து விலகினாலும் அதில் கூர்மையாக நீட்டிக் கொண்டிருந்த சென்டிங் கம்பி என் உள்ளங்கையை பதம் பார்த்து ரத்தம் கொட்டியது. அதற்குள் கான்வெட்டில் விசயம் தெரிந்து அனைவரும் அந்த இடத்திற்கு வந்துவிட்டனர். அகல்யாவும் அங்கு வந்துவிட்டாள். ஆனால் அவளால் எதையும் வெளிக்காட்டி கொள்ள முடியாத ஒரு இக்கட்டான நிலையில் இருந்தாள். பின் அங்கேயே கைக்கு தேவையான முதலுதவி செய்துவிட்டனர். இருந்தாலும் கையில் வலி கொஞ்சம் இருந்தது.

என் நிலையை பார்த்த அந்த கான்வென்ட் சிஸ்டர் அகல்யாவிடம் சொல்லி என்னை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து செல்ல சொன்னார். அகல்யாவும் வேகமாக சரி என ஆட்டோவிற்கு கால் செய்து வர சொல்லி அதில் இருவரும் சென்றோம். என்னை நெருங்கி பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அடிப்பட்ட கையை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டாள்.. அவளின் முகம் இன்னும் சோகமாக தான் இருந்தது. கிட்டதட்ட அழும் நிலையில் இருந்தாள்.

நான் அகல்யாவை பார்த்து “ஏய் அம்மு இப்போ என்ன ஆச்சு?” கேட்க அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகையை கண்ணீர் சிந்தி வெளியிட்டாள். என் அடிபட்ட கையை பிடித்துக் கொண்டு அழுதாள்.

“என்னால தான இப்போ உங்கள் கையில இப்படி அடிப்பட்டியிருக்கு” சொல்ல எனக்கு சிரிப்பு தான் வந்தது.

நான் சிரித்துக் கொண்டே “அய்யோ அதெல்லாம் அம்மு. நான் கம்பி நீட்டிட்டு இருக்கிறத பாக்காம விட்டுட்டேன்.”

“இல்ல. இல்ல.. நீங்க என்ன சொன்னாலும் நா தான் காரணம்.. நான் தான இந்த கான்ட்ராக்ட் வாங்கி குடுத்தேன். அதான் இங்க வந்து வேலை பாத்தீங்க. இப்ப பாருங்க வந்த முதல் நாளே எவ்வளவு பெரிய அடியா பட்டியிருக்கு. எல்லாம் என்னால தான்” ஹாஸ்பிட்டல் வரும் வரை அழுகையுடன் புலம்பிக் கொண்டே வந்தாள்..

ஹாஸ்பிட்டலில் டாக்டர் கையை பார்த்துவிட்டு இரு கையிலும் அன்டி செப்டிக் இன்ஜங்சன் போட்டு மருந்து வைத்து கட்டு போட்டுவிட்டார். கையில் போடப்பட்ட கட்டு கொஞ்சம் பெரிதாக இருந்தது. பின் டாக்டர் ரத்தம் கொஞ்சம் அதிகம் போனதால் இரண்டு பாட்டில் குளுக்கோஸ் போட்டுக் கொள்ள சொன்னார்.

உடனே நான் “டாக்டர் அதலாம் வேணாம். ஐயம் ஆல்ரைட்” சொல்ல

டாக்டர் அகல்யாவை பார்த்து “என்னம்மா உங்க ஹஸ்பண்ட் நா சொல்றத கேட்கமாட்டிங்கிறார். நீயாச்சும் கொஞ்சம் எடுத்து சொல்லும்மா. ரத்தம் நிறைய போயிருக்கு” சொல்ல அப்போதைக்கு அது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

நான் சட்டென்று வாயை திறந்து “டாக்டர் அது வந்து” சொல்ல ஆரம்பிக்கும் முன்பே
அகல்யா குறுக்கே வந்து டாக்டரிடம் “நீங்க குளுக்கோஸ் போடுங்க டாக்டர். அவங்க அப்படி தான் சொல்லுவாங்க. எப்ப பாத்தாலும் வேலை வேலைனு உடம்ப கவனிக்கிறதே இல்ல” கடிந்துக் கொண்டாள்.. டாக்டரும் நர்ஸை கூப்பிட்டு குளுக்கோஸ் ஏற்ற சொல்ல நர்ஸ் எங்களை பக்கத்து அறைக்கு அழைத்து சென்று குளுக்கோஸ் போட்டுவிட்டு போனாள். இரண்டு பாட்டில் குளுக்கோஸ் ஏற்றி முடிக்க கிட்டதட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனது. எல்லாம் முடித்து மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு ஹாஸ்பிட்டலில் இருந்து ஆட்டோவில் கிளம்பினோம்.

ஆட்டோ கான்வென்ட் இருக்கும் ரூட்டில் செல்லாமல் நேராக என் அபார்மெண்ட் இருக்கும் ரோட்டில் சென்றது. நான் அகல்யாவை பார்த்து,

“என்ன அம்மு கான்வென்ட்க்கு போகலீயா?” கேட்க

“இல்ல.. இப்ப நாம நம்ம வீட்டுக்கு தான் போறோம்..” சொல்லிவிட்டு ஆட்டோகாரனை ஒரு உயர்தர அசைவ ஹோட்டலின் முன் ஆட்டோவை நிறுத்த சொல்லிவிட்டு இறங்கி சென்று பத்து நிமிடம் கழித்து ஒரு கையில் பெரிய பார்சலுடன் வந்தாள். அவள் மீண்டும் ஏறியதும் ஆட்டோ நேராக என் அபார்மெண்டை நோக்கி சென்றது.

அந்த கான்வென்ட் சிஸ்டர் வந்து என்னை தம்பி கூப்பிட அதுவரை மூழ்கியிருந்த காதல் நினைவுகளில் இருந்து மீண்டு வெளியே வந்தேன்.. அகல்யா இல்லாததால் அவரே சரி செய்ய வேண்டிய இடங்களுக்கு எல்லாம் அழைத்து சென்று என்னென்ன மாற்றம் செய்ய வேண்டும் என சொல்ல அதை கேட்டுக் கொண்ட பின் அங்கிருக்க மனம் லயிக்காமல் அங்கிருந்து கிளம்ப முடிவு செய்தேன். அதனாலே அந்த சிஸ்டரிடம்

“சரி சிஸ்டர் நா கிளம்புறேன். ஆட்கள் ரெடி பண்ணிட்டு வந்து வேலைய முடிச்சு குடுக்கிறேன்” என்றேன்..

அதற்கு அவர் “இருங்க தம்பி மதியம் ஆகிடுச்சு. இங்கேயே இருந்து சாப்பிட்டு போகலாம்” சொல்ல

“இல்ல.. பரவாயில்ல இருக்கட்டும் சிஸ்டர்” சொன்னாலும் அவர் என்னை சாப்பிட வைப்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்ததால் நானும் வேறு வழியில்லாமல் அன்று மதியம் அங்கு சாப்பிட ஒப்புக் கொண்டேன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *