அகல்யா முதலில் சிதலடைந்து இருந்த கட்டிடத்தை காட்டி அதை இடித்துவிட்டு எப்படி மாற்றியமைக்கலாம் என கேட்க நானும் அங்கிருந்த கட்டிடத்தை பார்த்துவிட்டு அதை மாற்றி கட்ட சில வழிமுறைகளை சொன்னேன். அவளும் அதை கவனமாக கேட்டுக் கொண்டு இறுதியில் எப்படி செய்தால் சரியாக இருக்குமோ அதை செய்ய சொன்னாள். அடுத்து சின்ன சின்ன பூச்சு வேலைகள் இருக்கும் இடத்தை ஒவ்வொன்றாக காட்டிக் கொண்டே வந்தாள். இறுதியாக ஒரு அறை போன்று இருந்த இடத்திற்கு அழைத்து வந்து அங்கு பூச வேண்டிய இடத்தை எல்லாம் காட்டிக் கொண்டிருந்தாள்.
நான் அகல்யா சொல்வதை கேட்காமல் சுற்றிலும் யாரும் இருக்கிறார்களா என பார்த்துவிட்டு அவளை முகத்தையும், அழகான வழவழப்பான உதட்டையும் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் சொல்வதை கவனிக்காமல் இருப்பதை கண்டுபிடித்து
“ஹலோ சார் என்ன நா சொல்றத கேக்காம என்னையவே பாத்திட்டு இருக்கீங்க?”
“ம்ம் என்ன பண்ண? இவ்வளவு நேரம் கேட்க முடிஞ்சது. இப்ப முடியலையே”
“ஏன் முடியல?”
“அழகான பொண்ணு சொல்றத எவ்வளவு நேரம் தான் கேக்க முடியும்? அப்படி அவ சொல்றத மட்டும் கேட்டுட்டே இருந்தா அவன்லா மனுசனே இல்ல.”
“ஏன் அப்டி சொல்றிங்க?”
“பின்ன என்ன இந்த அகல்யான்ற பொண்ணு அப்சரஸ் மாதிரி இருக்கா. அவள ரசிக்கிறத விட்டுட்டு அவ சொல்றத கேட்டுட்டே இருந்தா மனுசா எப்படி இருக்க முடியும். மனுசா பிறந்தா கண்ணுக்கு முன்ன அழகான அப்சரஸ் இருந்தா அவள ரசிக்கனும்” சொல்ல
“அய்யோ நீங்க இன்னும் அத விடலையா? அத விடுங்கப்பா.”
“நீ சொல்றதுனால அப்படியெல்லாம் விட்டுற முடியாது.”
“சரி அப்போ நீங்க என்னைய பாத்து ரசிச்சு முடிங்க. அடுத்து நா சொல்ல வேண்டியத சொல்றேன்.” என்றாள்.
“ம்ம் தட்ஸ் குட்.” சொல்லி அவளை நோக்கி சென்று நெருங்கி நின்றேன். அவளின் பளிச்சென்ற முகத்தில் இருந்து வீசிய ஒளி என் முகத்தில் பட்டு எதிரொளித்தது. அவள் விடும் மூச்சுக்காற்றை கூட என்னால் உணர முடிந்தது.
அவளின் அந்த அழகிய முகத்தை இரு கையிலும் ஏந்தியபடி உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் இரு கைகளும் அவளின் இரு கன்னங்களை மென்மையாக தடவியது. அது அவளின் கண்ணை மூடி ரசித்து அனுபவிக்கும் அளவிற்கு இருந்திருக்கிறது. அதனாலே அவளின் கண்கள் மூடியிருந்தன. வலக் கையின் கட்டை விரலால் அவளின் செர்ரிபழ உதட்டை அழுத்தி தடவ அவள் விடும் மூச்சுக்காற்றும் அதிகமானது.
என் உதட்டை அவளின் உதட்டுக்கு அருகில் கொண்டு மெதுவாக கொண்டு சென்றேன். எங்கள் இருவரின் மூச்சுக் காற்றும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டது. என் உதட்டால் அவளின் உதட்டில் பட்டும் படாமல் உரச அவளின் உதடுகள் விரிந்து வழிவிட அப்படியே என் உதட்டை அவளின் உதட்டின் மேல் அதிகம் அழுத்தம் குடுக்காமல் மென்மையான பொருத்தி எடுத்தேன்.
அகல்யாவும் அவளின் உதட்டை என் உதட்டின் மேல் பொருத்தி எடுக்க அதுவரை கட்டுபாட்டிற்குள் இருந்த உணர்ச்சிகள் எல்லாம் வெடித்து சிதற அவளின் தலையை இரு கையால் இறுக்க பிடித்து உதட்டை கவ்வி உறுஞ்சினேன். அவளும் உணர்ச்சியில் தன் கைகளால் என் இரு கையை இருக்கப் பற்றிக் கொண்டாள். எங்கள் இருவரின் உதடுகளும் யாராவது ஒருவரின் வாய்களுக்கு இடையில் மாட்டிக் கொண்டு சுகத்தை வாரி வழங்கிக் கொண்டிருந்தது. இருவருக்கும் மூச்சு விட சிரமமாக இருந்ததால் எங்களின் உதட்டை விடுவித்து பிரிந்தோம்.
அகல்யாவின் முகத்தில் வியர்வை துளிகள் முத்துக்கள் போல் படிந்திருந்தது. இருவரின் மூச்சுக்காற்றும் சீரான நிலைக்கு வரும் வரை ஒருவரை ஒருவர் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தோம். பின் அவள் தன் துப்பட்டாவால் முகத்தில் இருந்த வியர்வை துளிகளை துடைத்தபடி என்னை விட்டு விலகி அந்த அறையிலிருந்தும் வெளியே சென்றாள். இவளுக்கு என்ன ஆச்சு என ஒன்றும் புரியாமல் தொடர்ந்து நானும் வெளியே சென்று அவள் எங்கு இருக்கிறாள் என பார்த்தேன். அவள் ஒரு மரத்தடியில் இருந்த ஸ்டோன் பெஞ்சில் தன் முகத்தை கையால் தாங்கியபடி உட்காந்திருந்தாள்.
நான் அவளின் அருகில் சென்று நின்றபடி, “என்ன ஆச்சு அம்மு? ஒரு மாதிரியா இருக்க” கேட்டவுடன்
அவள் “அதலெல்லாம் ஒன்னுமில்லப்பா. நா நார்மலா தான் இருக்கேன்.”
“நார்மலா தான் இருக்கேன் உன் வாய் தான் சொல்லுது. ஆனா உன் முகம் அப்படி சொல்லலேயே.” சொல்லிவிட்டு இருவருக்கும் இடையே சிறிது நேரம் மௌனம் நிலவியது.
பின் நானே மீண்டும் அவளிடம் “நா கிஸ் பண்ணது பிடிக்கலையா? அது உனக்கு கஷ்டமா இருந்துச்சா? இல்ல உன் மனச காயபடுத்தியிருச்சா?” என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டேன். அப்போது கூட அவள் பதில் எதும் சொல்லாமல் மௌனமாகவே இருந்தாள்.
“நா உன்ன கேட்காம கிஸ் பண்ணது தப்பு தான். உன்னைய அது காயபடுத்தியிருந்தா ரியலி சாரி.” சொல்லிவிட்டு “நாளைக்கு இல்ல அதுக்கு மறுநாள் வேலைய பாக்க ஆள் அனுப்பிவிடுறேன்” என்ற தகவலை அவளின் சொன்னவுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்ல ஆரம்பித்தேன்.
அப்போது அகல்யா “கொஞ்சம் நில்லுங்கப்பா” என்றவுடன் அவளை பார்க்காமலே அப்படியே நின்றேன்.
“தப்பு உங்க மேல எதுவும் இல்ல. எல்லா தப்பும் என் மேல தான். நீங்க முத்தம் குடுக்க வந்தப்ப நா வேணாம் சொல்லியிருந்தா அப்பவே எதுவும் நடந்திருக்காது. அத பண்ணாம விட்டுட்டேன். நீங்களும் கிஸ் பண்ணிட்டிங்க. நீங்க பண்றப்ப நல்லா இருந்துச்சு. ஆனா இப்ப அத நெனச்சு பாக்குறப்ப ஏதோ தேவையில்லாத சிந்தனைகள், எண்ணங்கள் எல்லாம் மனசுக்குள்ள ஓடிட்டே இருக்கு. அதான் ஒரு மாதிரியாவே இருக்கேன். மத்தபடி நீங்க பண்ணதையோ இல்ல உங்களையோ தப்பா நெனக்கல.” என அவளின் மன குழப்பத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்தினாள்.
நான் அவளை நோக்கி சென்று அவளின் பக்கத்திலே உட்கார்ந்து, “ஏய் அம்மு என்ன ஆச்சு? ஏன் ஏதோ ஏதோ பேசுற?” கேட்டேன்.
“ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க. நா இப்ப நார்மலா ஆகிட்டேன்” என தன்னை தானே ஆசுவாசபடுத்த முயற்சி செய்துக் கொண்டிருந்தாள்.
“சரி கேட்காம கிஸ் பண்ணது உனக்கு பிடிக்கலையா?” திரும்பி ஒருமுறை கேட்க
“ஐயோ அதெல்லாம் இல்லீங்க. பிடிச்சு இருந்துச்சுப்பா. என்னமோ தீடிர்னு மனசுல ஒரு குழப்பம் வந்திடுச்சு. அதான் ஒருமாதிரி ஆயிட்டேன்.” என்றாள்.
“என்ன குழப்பம் அம்மு.? நா நல்லவனா? கெட்டவனா?” என்ற குழப்பம் தானே
“ஐயோ அதெல்லாம் இல்லப்பா. என்னை பொறுத்தவரைக்கும் இப்ப நல்லவரா இருந்தா போதும். இது முன்ன எப்படி இருந்தீங்க தேவையில்லாத ஒன்னு. அப்படி பாஸ்ட் யோசிச்சிட்டே இருந்தா இந்த நிமிஷத்த சந்தோஷமா வாழ முடியாது.”
“ம்ம்.. கரெக்டா சொன்ன அம்மு.. நீயும் எதுவும் மனச போட்டு குழப்பிக்காம ஹேப்பியா இரு..”
“ம்ம்.. சரிப்பா.”
“இப்போ ப்ராப்ளம் சால்வ்டு தான.” அவளை கேட்க
அவளும் “ம்ம்.. ஆமா” வெட்க சிரிப்புடன் தலையசைக்க நானும் அவளை சிரிப்பை பார்த்து ரசித்தவாறு அங்கிருந்து கிளம்பினேன்..
நான் அந்த கான்வென்ட் சிஸ்டரிடம் பேசி முடிக்கும் வரை என்னையே மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள் தாமரை. அவள் அப்படி பார்ப்பதை பார்த்தவுடன்
“என்ன தாமரை என்னைய அப்படியே மெய்மறந்து பாக்குற?”
“ஆமாங்க. அது என்னமோ தெரியலீங்க.? நீங்க ரொம்ப நல்லவருங்க. அதனாலே உங்கள ரொம்ப பிடிச்சிருக்குங்க. நீங்க என்ன பண்ணினாலும் பிடிச்சு இருக்குங்க.”
“ம்ம்..” சிறிது யோசித்து விட்டு “அப்படியா சொல்ற தாமரை?”
“அட ஆமாங்க. இப்ப போன் பேசினிங்கல அது கூட பிடிச்சிருக்குங்க..”
“நிஜமா தான் சொல்றியா.? அப்படி என்ன புதுசா பேசிட்டேன். எல்லாரும் பேசுற மாதிரி தான் பேசினேன்.”
