“ம்ம்.. போலாம்” என்றேன். நான் அதை சொன்ன அடுத்த வினாடி என்னிடம் இருந்து பிரிந்து சென்றாள். அது தற்காலிகமான பிரிவு என்றாலும் ஏனோ என் மனதை வருத்தி வாட்டியது.
மதிய சாப்பாட்டிற்கு பின் அவள் என் கண்ணில் படவே இல்லை. அது கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது. இருந்தாலும் நாளை எப்படியும் என் கண்ணில் படுவாள். பேசுவாள் என்ற சிறு நம்பிக்கையில் இருந்து முதல் நாளை வேலை முடிந்தவுடன் அந்த சிஸ்டரிடம் மட்டும் சொல்லிவிட்டு என் வீட்டிற்கு கிளம்பினேன். காரில் வரும் போது அவளின் நினைவாக தான் இருந்தது.
அப்போது தான் ஒன்று புரிந்தது. எப்போதுமே பெண் என்பவள் விசித்திரமானவள் வித்தியாசமனாவள். இந்த உலகில் பெண் என்பவள் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும் தெரிந்தாலும் இந்த சமுதாயத்தில் அவர்களுக்கு பல பெயர்கள் இருக்கின்றன. இந்த சமுதாயம் தான் அந்த பெண்களுக்கு ஒரு தகுதியில்லாத சூழ்நிலையை அமைத்து அதற்கு தகுதியில்லாத ஒரு பெயரையும் வைத்து அல்லாடவிட்டு வேடிக்கை பார்க்கிறது. அவர்களும் இந்த சமுதாயம் கட்டாயபடுத்தி குடுக்கின்ற வாழ்க்கை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் வாழ வேண்டும் என்ற கட்டாயத்தில் வாழ்கின்றனர்.
அவளை பற்றி சிந்தனைகள் வந்தவுடன் ஏனோ தெரியவில்லை இந்த சமுதாயத்தில் இருக்கின்ற ஒட்டு மொத்த பெண்களையும் பற்றிய சிந்தனை வந்துவிடுகிறது. அது ஏன் என்ற கேள்விக்கு இதுவரை விடை புலபடவில்லை. ஒருவேளை வாழ்க்கை இனி எதாவது ஒரு தருணத்தில் தெரியபடுத்தலாம். இது மாதிரியான பல சிந்தனைகள் அவளை பற்றியும் பொதுவாக பெண்களை பற்றியும் வந்துக் கொண்டே இருந்தது. அந்த சிந்தனையில் மூழ்கியபடியே வீடு வந்து சேர்ந்தேன்.
அதன்பின் அன்றைய தினம் அவளின் நினைப்பில் கழிந்தது. அன்றைய தினம் மட்டுமல்ல அடுத்து வந்த தினங்களும் தான். காரணம் அவளுடான சாதாரண பேச்சுக்கள். அந்த பேச்சுகளே ஏதோ ஒரு வாழ்க்கை அவளுடன் வாழுகின்ற மாதிரி பிம்பத்தை ஏற்படுத்தியது. கட்டிட வேலையை சரியாக நடக்கிறதா என்பதை வாரத்திற்கு ஒரு முறை பார்த்தால் கூட போதுமானது தான். ஆனால் இவளை பார்த்து பேச வேண்டும் என்பதற்காகவே நான் தினமும் அந்த ஹோமிற்கு சென்று வேலையை பார்ப்பது போல் இவளை பார்த்துக் கொண்டிருந்தேன். இதுவே என் அன்றாட வேலையாக மாறியது.
இதற்கிடையில் என் மனதில் இருப்பதை அவளிடம் வெளிப்படுத்த தக்க சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன். இதுவரை நான் பார்த்து பழகி ருசித்த பெண்களுக்கு எல்லாம் சந்தர்ப்பம் அமையவில்லை என்றால் ஏதோ ஒருவகையில் நானே அந்த சந்தர்பத்தை ஏற்படுத்தி என் காரியத்தை சாதித்து கொள்வேன். ஆனால் இவள் மட்டுமே வித்தியாசமானவள். அதாவது மாயம் செய்யும் மாயக்காரி. என்னிடம் எதும் சொல்லாமலே ஏதோ ஒன்றை செய்துக் கொண்டிருக்கிறாள். அதற்கு நானும் கட்டுபட்டுக் கொண்டே இருக்கிறேன். ஆனால் இந்த கட்டிட வேலையை முடிப்பதற்குள் என் மனதில் இருப்பதை தெரியப்படுத்தி விட வேண்டும் என உறுதியாக இருந்தேன்.
இதோ நான் வந்த வேலையை முடிவதற்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள் தான் இருக்கின்றன. அவளிடம் என் மன ஓட்டத்தை தெரியபடுத்த வீட்டில் இருந்து கிளம்புகிறேன். நான் சொல்வதை ஏற்றுக் கொள்வாளா? இல்லை மறுத்து விடுவாளா என தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அதை நான் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் என மனதில் நினைத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டேன். நாம் வேண்டுமானால் அவளின் மனதை நல்வழியில் மாற்ற முயற்சி மட்டும் செய்து பார்க்கலாம் என நினைத்திருந்தேன். அதை மீறி இவளின் மனதை மாற்ற வேறு எதுவும் செய்ய எனக்கு தோன்றவில்லை. இன்று அவளிடம் எப்படியும் தெரியபடுத்தி விட வேண்டும் என்ற உறுதியோடு காரில் சென்று கொண்டிருக்கிறேன்.. நான் நினைத்ததை விட வேகமாகவே அந்த ஹோமை வந்து அடைந்துவிட்டேன்.
முதல் வேலையாக என் கண்கள் அகல்யாவை தான் தேடியது. இல்லை இல்லை தேடி அலைந்தது. சில நிமிட அலைச்சலுக்கு பின் நானே அவளை அகல்யா முதன்முறையாக பெயரை சொல்லி கூப்பிட்டேன். அவள் பெயரை சொன்ன போது என் மனதில் ஒரு சிறு சந்தோஷம் ஏற்பட்டது. எனக்கு ஏற்பட்ட மாதிரி அவளுக்கு ஏற்பட்டதா என தெரியவில்லை. இப்போது அதை எல்லாம் பார்த்து தெரிந்து கொள்ளக் கூடிய மனநிலையில் நானில்லை. முதலில் என் மனதில் இருப்பவைகளை அவளிடம் தெரியபடுத்தி விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருந்தது.
அவளே “என்ன சார் அதிசயமா இருக்கு. நீங்களே கூப்பிட்டு இருக்கீங்க. அதுவும் பேர சொல்லி என்ன விசயம்?” கேட்க
“இல்ல.. இல்ல.. அது வந்து..”
“ம்ம்.. என்ன?”
“உன்கிட்ட ஒன்னு சொல்லனும்”
“ம்ம்.. சொல்லுங்க.”
“இல்ல. அது வந்து எப்படி சொல்றது தெரியல என வார்த்தைகளை மென்று முழுங்கினேன்.”
“அட பரவாயில்ல சார். சும்மா சொல்லுங்க.”
“இல்ல.. அது.. வந்து..”
“அட சும்மா சொல்லுங்க..”
“நீ என்னைய பத்தி என்ன நெனக்கிற?”
“உங்கள பத்தியா? ம்ம்.. உங்களுக்கு என்ன சார்?” சொல்லவிட்டு என்னை மேலிருந்து ஒரு நோட்டம் விட்டு
“பாக்க நல்லவரா தான் தெரியுறிங்க.. எங்களுக்கு கட்டடம் கம்மியான பட்ஜெட்டில கட்டிக் கொடுத்து இருக்கீங்க.”
“ம்ம்.. அப்போ உன்னோட பார்வையில நா நல்லவன். அப்படி தான.”
“ம்ம். ஆமா சார். அதுல என்ன சந்தேகம்?”
“அப்போ இந்த நல்லவன நீ கல்யாணம் பண்ணிப்பியா?” என அவள் பார்த்த நாளிலிருந்து என் மனதில் தோன்றியதை இப்போது ஒரு வழியாக அகல்யாவடம் சொல்லிவிட்டேன்.
இனி அவளின் பதிலுக்காக காத்திருக்கிறேன்..
நான் அகல்யாவிடம் என் மனதில் இருந்த ஆசை ஒரு வழியாக சொல்லிவிட்டு அவளின் பதிலுக்காக அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளும் என்னை போன்றே ஒரு குழப்பமான சூழ்நிலையில் இருக்கிறாள் என்பது அவளின் முகத்தை பார்க்கும் போதே நன்றாக தெரிந்தது.
“இப்பவே உங்க பதில்ல சொல்லனும் இல்ல அகல்யா. நல்லா டைம் எடுத்து யோசித்து சொன்ன கூட போதும்.” என்றேன்.
“பதில் யோசிக்க வேண்டியதில்ல. ஆனா அந்த பதில்ல எப்படி சொல்றது. அத சொன்னா நீங்க எப்படி எடுத்துப்பீங்க தெரியல.”
“பதில்ல பாசிட்டிவ் இருந்தாலும் ஓகே நெகட்டிவ் இருந்தாலும் ஓகே தான் அகல்யா. உங்கட்ட பதில் இருந்தா இப்பவே சொல்லிடுங்க..”
“சாரி மிஸ்டர்” அவள் இழுக்க நான் என் பெயரை சொல்ல
“ம்ம் மிஸ்டர்” உடன் என் பெயரை சேர்த்து சொல்லி
