வாழ்க்கையில் வரும் சில நாட்கள் அல்லது குறிப்பிட்ட ஒரு நாள் சிலருக்கு சந்தோஷத்தை தரலாம். சிலருக்கு துக்கத்தை தரலாம். இன்னும் சிலருக்கு ஏன் அந்த குறிப்பிட்ட நாள் நம் வாழ்வில் வருகிறது என்று அதிகபடியான வேதனை கூட தரலாம். நானும் அந்த கடைசி ரகத்தை சேர்ந்தவன் தான். என் வாழ்வில் அந்த குறிப்பிட்ட ஒரு நாளை நான் இருக்கும் இடத்தில் எதிர் கொள்ள முடியாமல் சொந்த ஊரான மதுரைக்கு வந்து கொண்டு இருக்கும் சிறிய அளவிலான கான்செஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஒன்றில் வேலை செய்யும் ஒரு தனி மனிதன்..
மே மாதம் 23ம் நாள்..
இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை எல்லா மனிதர்களையும் போல நானும் என் வாழ்வில் யாரும் அனுபவித்திராத எல்லா மனிதரும் பொறாமை படுக்கிற அளவுக்கு உச்சகட்ட சந்தோஷத்தை அனுபவித்து கொண்டிருந்த ஒரு அதிசய மனிதரில் நானும் ஒருவன். அதுவும் ஒரு பெண்ணினால் கிடைத்தது அந்த சந்தோஷம், மகிழ்ச்சி, இன்னும் எத்தனை வார்த்தை இருக்கிறதோ அத்தனையும் பொருந்தும். ஒரு பெண்ணால் ஒரு ஆண் மகனுக்கு, தான் மனதில் இடம் கொடுத்து, அவனை மனத்துக்குள் நிலை நிறுத்திய பின், அவனுக்கு எல்லா விதத்திலும் மகிழ்ச்சியையும், சுகத்தையும் எப்படி அவன் நினைத்து பார்த்திராத அளவுக்கு கொடுக்க முடிகிறது.. என் வாழ்விலும் அந்த மகிழ்ச்சியை, சுகத்தை திகட்ட திகட்ட அள்ளி கொடுத்தாள் அவள்.. ஆனால் இப்போது எனக்கு அதை அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை..
இதையெல்லாம் நினைத்து கொண்டே அன்று இரவு என் வீட்டிலிருந்து கிளம்பி சென்னை கோயம்பேடு பக்கத்தில் இருக்கும் எஸ் ஆர் எஸ் டிராவல்ஸ் மதுரை போவதற்கு சிக்கெட் புக் பண்ணியிருந்தேன். நான் அந்த இடத்துக்கு சரியாக 8.45மணிக்கு வந்து சேர்ந்தேன். நான் புக் செய்திருந்த என் டிக்கெட் காட்டி 4s சீட்டில் ஏறி உட்காந்தேன். அது ஒருவர் மட்டும் படுக்கும் sleeper சீட். பஸ் கிளம்ப இன்னும் 15நிமிஷம் இருந்தது. அதற்குள் என் மனம் மறுநாள் உன்னுடைய நாளை எப்படி எதிர்கொள்ள போகிறாய்? என்ற கேள்வியை கேக்க ஆரம்பித்தது. இதை எல்லாம் நினைக்காமல் இருக்க ஏற்கெனவே ஒரு தூக்க மாத்திரை கை வசம் கொண்டிருந்தேன்.. அதை போட்டுகிட்டேன். பஸ் கிளம்ப ஆரம்பித்தது. நானும் அதை பற்றி நினைக்காமல் வெளியே வேடிக்கை பார்த்து கொண்டே அந்த பயணத்தை தொடங்கினேன்.. சென்னையை தாண்டியதும் எனக்கும் தூக்கம் வந்தது. நானும் அந்த நிகழ்வை மறந்து ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் தூங்க ஆரம்பித்தேன். நல்ல வேலை இடையில் முழிப்பு எதுவும் வரவில்லை. பஸ் மாட்டுதாவணி பஸ் ஸ்டாண்ட் நெருங்க இன்னும் சில நிமிடங்கள் இருந்த சமயத்தில் தான் முழிப்பு வந்தது. நான் எழுந்து கீழே இறங்கி ஆள் இல்லாத சீட்டில் உட்காந்து கொண்டேன். பஸ் மாட்டுதாவணிக்கு காலை 6.30 மணிக்கு வந்தது..
மாட்டுதாவணியில் பஸ் விட்டு இறங்கி என் கிராமத்திற்கு செல்வதற்கு அடுத்த பஸ்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். பஸ் வர ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆனது. அதுவரை, அங்கிருந்த மக்கள் தங்கள் வியாபாரத்தை காலையில் சுறுசுறுப்பாக பார்த்து கொண்டிருந்தனர். காபி மற்றம் டீ கடையில் ஆட்கள் கூட்டமாக இருந்த வண்ணமாக தான் கண்ணில் பட்டனர். நானும் அவர்களில் ஒருவனாக போய் அங்கிருந்த சுறு சுறுபான மனிதர்களை பார்த்து கொண்டே ஒரு காபி வாங்கி குடித்தேன்.
காபி குடித்து முடித்த சில நிமிடங்களிலே நான் செல்ல வேண்டிய பேருந்து வந்து நின்றது. அதில் ஏறி உட்காந்தேன். அந்த பேருந்தும் நேரம் எடுக்காமல் சீக்கிரம் கிளம்பியது. நானும் என் கிராமத்திற்கு ஒரு டிக்கெட் வாங்கி அன்றைய நாளை எதிர் கொள்ள தயாராக இருந்தேன்.. இதுவரை எல்லாம் நன்றாக தான் இருந்தது.. ஆனால் நாம் ஒரு விசயத்தை தைரியத்தோடு எதிர் கொள்ள தயாராக இருந்தாலும் இடையில் விதி புகுந்து வீணை வாசித்து கெடுத்து விடும். அது தான் என் வாழ்விலும் நடந்தது. நான் என் வாழ்வில் எந்த பெயர் இடம் பெற்றிட கூடாது இருந்தேனோ அந்த பெயர் ஊருக்கு சென்று சேருவதற்குள் மூன்று முறை இந்த முறையும் உனக்கு இந்த நாள் சரியாக அமையாது என்று நடுமண்டையில் அடித்து தீர்ப்பு சொன்னது போல் என் காதில் வந்து விழுந்தது.. மறக்க நினைத்தாலும் விதி விடாது… அந்த சம்பவம் மீண்டும் என் மனதில் கிளற ஆரம்பித்தது. நானும் அந்த சம்பவத்துக்குள்ளே கொஞ்சம் கொஞ்சமாக மூழ்க ஆரம்பித்தேன். கண்டக்டர் ஊரின் பெயரை சொன்னதும் தான் கொஞ்சம் சுதாரித்து வெளியே வந்து பஸ்ஸை விட்டு இறங்கினேன்.
இன்று மே 24.
வாழ்வில் இந்த நாள் ஏன் வருகிறது என்று யோசிக்கும் அளவுக்கு என் வாழ்க்கை ஒரே ஒரு நொடியில் மாற்றிவிட்டது. இந்த நாளை, சென்னையில் என் வீட்டில் எதிர்
கொள்ள முடியாமல் தான் இங்கு வந்திருக்கிறேன். இங்கு வந்திறங்கும் போதும் அவ்வளவு துக்கம், சோகம், ஏமாற்றம், அழுகை, வருத்தம், இழப்பு ஏன் வியப்பாக கூட தான் இன்னும் இருக்கிறது. அதை வியப்பு என்று சொல்வதா? அல்லது ஏமாற்றம் என்று எடுத்து கொள்வதா? இழப்பு என்று எடுத்து கொள்வதா? தெரியவில்லை.
இந்த நாள் என் வாழ்வில் ஒரு கருப்பு நாள் கூட சொல்லலாம். என் ஒட்டு மொத்த வாழ்க்கை புரட்டி போட்ட நாள். என் வாழ்க்கையின் சந்தோஷத்தை பறித்து கொண்ட நாள். அந்த சந்தோஷம் பறி போக சூழ்நிலை மட்டும் காரணம் இல்லை நானும் கூட தான். இன்னும் சொல்ல போனால் நான் தான் அந்த வாய்ப்பை சூழ்நிலைக்கு கொடுத்தேன் என்று சொல்லலாம்… அந்த குற்ற உணர்வு தான் என்னை இன்னும் அந்த நாளை எதிர் கொள்ள முடியாமல் செய்கிறது என்று நினைக்கிறேன்.
காலை 11 மணி…
இந்த ஒரு கொடிய நாளில் நடந்த அந்த சம்பவம் என்னை வாட்டியது. இங்கு வந்தும் என்னால் அந்த நிகழ்வை மறக்க முடியவில்லை. வீட்டில் இருந்து கிளம்பி நேராக ஆத்துக்கு செல்லும் பாதையில் வண்டியை விட்டேன். அந்த பாதையில் கடைசியில் இருந்த ஒரு ஒயின் ஷாப் வண்டியை நிறுத்தி 3பீர் வாங்கினேன். ஏற்கெனவே சென்னையில் இருந்து கொண்டு வந்த ஒரு புல் ரெட் ஒயின் இருந்தது. அதையும் எடுத்து கொண்டு அந்த ஊரின் வழியே செல்லும் வைகை ஆற்றின் கரையில் போய் உட்காந்தேன்…
