கார்த்திக் காலையிலே சாப்பிட்டுட்டு காலஜிக்கு போய்ட்டான்.
மூன்று பேறும் சாப்பிட்டுட்டு இருக்க
கனகு, ஏங்க இன்னும் ரெண்டு மாசத்துல இவா காலேஜ்
முடிக்க போறா
நம்ம கல்யாண புரோக்கர் கிட்ட சொல்லி இவளுக்கு
நல்ல மாப்பிள்ளையா பார்க்க சொல்லுங்க.
குமரவேல் டிவி மேல இருந்த கண்ணை எடுக்காமலே
சரி என்று தலையை ஆட
வினிதா, அப்பா, எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்பா
கனகு, ஏண்டி கல்யாணம் வேண்டாம்னு சொல்ற,
குமரவேல், ஏண்டி அவளை திட்டுற,
தன் மகளை பார்த்து,
ஏன்டா அப்படி சொல்ற
வினிதா, நான் மேல படிக்கணும்பா,
கனகு, நீ படிச்சி கிழிச்சது போதும்,
குமரவேல் தன் மனைவியை பார்த்து முறைக்க
அவள் அமைதியாக சாப்பிட ஆரம்பிச்சா.
குமரவேல், தன் மகளை பார்த்து
படிச்சது போதுமா,
நல்ல வரனா பார்த்து உனக்கு கல்யாணம்
பண்ணி வச்சிட்டா
எங்க கடமை முடியும்.
ப்ளீஸ் டா,
வேறு வழி இல்லாம வினிதா தலையை ஆட்டினா.
என்னங்க, அப்பா சொன்னா உடனே தலையை
ஆடிட்டானு பார்க்கறீங்களா
வினிதாவுக்கு இந்த காதல்
கத்திரிக்காய் எல்லாம் சுத்தமா பிடிக்காது.
ரொம்ப ஸ்ட்ரெய்ட் பார்வேர்ட்.
இப்படித்தான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி,
வினிதா காலேஜ் முடிச்சிட்டு காண்டீனில்
தோழிகளுடன் உட்கார்ந்து அன்னைக்கு
போட்ட சூடான சமோசாவை பேசிக்கிட்டே சாப்பிட்டிட்டு
இருந்தா.
சமோசாவை ஒரு துண்டு பிச்சி தக்காளி சாஸில் முக்கி
தன் வாய்க்கு கொண்டு போய் கடிச்சி சுவைக்க ஆரம்பிச்சா.
தோழிகள் நால்வரும் அரட்டை அடிச்சிட்டு
இருக்க
பக்கத்து டேபிளில் யாரோ தன்னை பார்ப்பதை
உணர்ந்த வினிதா
திரும்பி பார்க்க
தன்னுடன் படிக்கும் பையன்
இவளை முறைச்சு பார்த்துட்டு இருந்தான்.
அவன் பார்வையில் காமம் இருந்தது.
பெரிய இடத்து பையன்.
பணக்காரன்.
அவனை சுத்தி ஒரு பெரிய பட்டாளமே
சுத்திகிட்டு இருக்கும்.
எல்லாம் தறுதலை.
அப்பன் காசுல குடிச்சிட்டு சுத்துற கூட்டம்.
பெண்களை கண்டால் அவ்வளவுதான்.