மாற்றங்கள்.
போதா குறைக்கு வெங்கட்டின் நல்ல உபதேசம், அவள் மனசை மாற்றியது.
தன்னுடைய புருஷனை டிவோர்ஸ் பண்ணனும் என்ற நினைவு அவளை விட்டு அகன்றது.
அதன் நிமித்தமாக சதிஷ் மீது கொஞ்சமும் இரக்கமும் அன்பும் வர
இது தான் அவளின் கலக்கத்துக்கு காரணம்.
ஆனாலும் ஹசனின் அளவுக்கு அதிகமான அன்பு அவளை நிலை குலைய செய்தது.
இங்கே, செல்விக்கு மனசு கேக்காம மீண்டும் பவித்ராவுக்கு போன் போட
அவ உடனே அட்டென்ட் பண்ணினா.
பவித்ரா, நீ என்ன லூசாடி, என் நிலைமை தெரியாம கோப படுகிற
செல்வி, முழிச்சா, நான் சொல்ல வேண்டியதை இவ சொல்றா
இந்த இடத்துலே, நான்தானே கோப படனும், இவ எதுக்கு கோப படுறா,
யோசிச்ச செல்வி, ஏண்டி, நான் தான் உன்னை திட்டனும்
நீ ஏண்டி என்னை திட்டுறே
பவி, நான் எல்ல காரியத்தையும் துணிஞ்சி பண்ணினது நீயும்
வெங்கட் அண்ணனும் இருக்கிற தைரியத்துல தான்.
இப்போ மையிரா போச்சுன்னு என்னை டீல்லே விடுறீங்க
செல்வி, எல்லாம் சரிதாண்டி, நீ ஏன் இங்கே வரல
நேத்து சாய்ந்திரமே வந்து இருக்கணும்லே,
பவித்ரா, லூசு மாதிரி பேசாதடி
நான் அவர் கிட்ட என்ன சொல்லிட்டு வரணும், சொல்லு
செல்வி, எவர் கிட்ட
பவித்ரா, என் வாயில நல்லா வந்துரும், ஹசன் கிட்ட நான்
எண்ணத்தை சொல்லிட்டு வர முடியும்படி
என் புருஷன் வந்துருக்கான், நான் அவனை கொஞ்ச போறேன் னு
சொல்லிட்டு வர சொல்றியா, பவித்ரா அழ
இதை கேட்ட செல்விக்கு சிரிப்பு வந்தது.
அவ சிரிக்கிற சத்தத்தை கேட்ட பவித்ரா இன்னும் அழ
செல்வி, அட செல்லம், இதுக்குதான் வராம இருந்துயா
இது ஒரு மேட்டர இல்லை டி
பவித்ரா, அழுகையை நிப்பாட்டிட்டு, எப்படிடி, தெளிவா சொல்லு
செல்வி, ஹசனை நீ புரிஞ்சிக்கிட்டது அவ்வளவுதான்
நீ சொல்ல தயங்கினா, நான் அவர்கிட்ட பேசுறேன்.
ஆனா, நீ வராததுனாலே உன் புருஷன் அங்கே உன்னை பார்க்க கிளம்பி வந்துட்டு
இருக்கான்.
பவித்ரா, ஐயோ, என்ன காரியம் பண்ணி வச்சிருக்கேடி
செல்வி, நான் என்ன டி பண்றது,
நேத்து இங்கே நீ வந்து இருந்தீனா இவ்வளவு தூரம் போய் இருக்காது.
எப்படியோ சமாளி.
இப்ப போனை வை,
நான் ஹசனிடம் பேசுறேன், சொல்லிட்டு செல்வி போனை வைக்க
கொஞ்சம் சந்தோசமா இருந்த பவித்ரா மனதில்
திக் திக்………………
செல்வி ஹசனிடம் போன் செய்து விவரத்தை கூற,
அவரும் பவித்ராவின் செயலுக்காக வருத்த பட்டார்.
ஒரு வார்த்தை சொல்லிருந்தா நான் அவளை அனுப்பி இருப்பேனே,
சரி பரவா இல்லை,
சதிஷ் வரட்டும், நான் பார்த்துகிறேன் என்று செல்வியிடம் சொல்லி போனை வைக்க
செல்வியும் போனை வைச்சுட்டா.
இங்கே, டாக்சியில் பவித்ராவை பார்ப்பதற்காக பயணம் பண்ற சதீசுக்கு ஏக பட்ட
யோசனைகள்.
ஒரு பக்கம் நெடு நாள் கழிச்சி தன்னுடைய
அன்பு மனைவியை பார்க்க போகிற சந்தோசம்.