வழிமறியவள் – Part 39 80

ஓட்டுனரின் குரல் அவன் நினைவுகளை கலைக்க

ஓட்டுனருக்கு, அந்த கேட் பக்கத்துல நிப்பாட்டிக்கோங்க

அவருக்கு தன்னுடைய வீட்டை அடையாளம் காண்பிக்க

வண்டி வேகத்தை இழந்து

ஊர்ந்து கொண்டு அவன் காட்டிய வீட்டுக்கு முன்னாள் நின்றது.

அவன் இறங்கி அணைத்து சாமான்களையும் இறக்கி விட்டு

ஓட்டுனருக்கு பணத்தை கொடுத்து ஒரு நன்றியை உதிர்த்தான்.

ஓட்டுநர் சந்தோசத்துடன் பணத்தை பெற்றுக்கொண்டு, தன்னுடைய

முதல் சவாரி கொடுத்த பணத்தை சந்தோசத்துடன் தன்னுடைய

சட்டை பையில் வைத்து, இந்த நாள் நல்ல நாளாக அமைய கடவுளை வேண்டினான்.

ஆனா, இந்த நாள் சதீசுக்கு எப்படி இருக்கும்.

வீட்டு இரும்பு கேட்டை திறந்து, எல்லாத்தையும் உள்ள

எடுத்து வைத்து விட்டு, இரும்பு கேட்டை மூடி கொண்டு இருக்கும்போது

ராஜா வந்துடியாடா, அம்மாவின் அன்பு குரல் சதிஷ் காதில் நுழைய

சதிஷ் வேகமா திரும்ப

அம்மா இரண்டு கரங்களையும் விரித்து தள்ளாத வயதிலும் ஓடி

வந்து அவனை இருக்க கட்டி பிடிச்சி அவன் கன்னத்தில் முத்தம் கொடுக்க

ஒரே நொடியில் தன்னுடைய கவலைகளை எல்லாம் மறந்த சதிஷ்

அம்மாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்து பின்பு

அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான்.

உள்ள செல்ல அப்பா வர

அவர் காலிலும் விழுந்து வணங்கினான்.

இவன் குரல் கேட்டு செல்வியும் வெங்கட்டும் தூக்கத்துடன் வெளியில் வர

சதிஷ் அவர்கள் இருவர் காலிலும் விழுந்து வணங்க

வெங்கட் அவனை கட்டி பிடிச்சி தன்னுடைய அன்பை தெரிவிச்சான்.

செல்வி அவனை செல்லமா முதுகில் அடிச்சி, எப்படிடா இருக்கே

நல்ல இருக்கேன் கா.

சொல்லி கொண்டே முக்கிய ஜீவன் வருகையை எதிர்பார்த்து

அவன் கண்கள் அவன் ரூமை நோக்கி நகர

அதை பார்த்த செல்வியின் முகம் மாறியது.

செல்வியின் நெஞ்சி நெஞ்சி பதை பதைக்க

பவித்ரா எங்கக்கா

ஐயோ கேட்டுட்டானே,

என்ன சொல்றது, செல்வி யோசிக்க

மீண்டும் அதே கேள்வி

பவித்ரா எங்க

இந்த முறை கொஞ்சம் வார்த்தை கடினமா வந்த மாதிரி செல்விக்கு தெரிஞ்சது.

அப்போது அவர்கள் அம்மா அங்கே வர