விஷயத்தை சொல்லு, மனசு பதறுது, அவர் பதற
பாலு கண்களை துடைத்து கொண்டே, அப்பா நீங்க பதறாதீங்க, உங்களுக்கு ஏதாவது
ஆகிட போகுது,
நீ விஷயத்தால் சொல்லுப்பா,
அவன் பொறுமையா, பவித்ரா விஷயத்தை அவரிடம் சொல்ல,
அவர் தலை மேல கையை வைத்து சோபாவில் சாய்ந்துவிட்டார்,
அவர் கண்களிலும் கண்ணீர்.
பாலு அவரை சமாதான படுத்தி, பின்பு இருவரும் மௌனமா இருந்தனர்.
அப்பா தான் முதல பேசுனார்,
பாலு, இக்கட்டான சூழ்நிலை.
இப்போதைக்கு அம்மாகிட்ட சொல்ல வேண்டாம்.
சரிங்கப்பா, பாலு சொல்ல,
எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடு, நாளைக்கு இரவு, நாம இங்க கூடி பேசலாம்.
அப்போ நான் சொல்றேன், அதன்படி செய்யலாம்,
அதுவரைக்கும் அம்மாவுக்கு கண்டிப்பா தெரிய வேண்டாம்னு சொல்லி அவர் உள்ள
சென்று விட,
பாலு விட்டத்தை பார்த்து கொண்டே அதிக நேரம் உட்கார்ந்து இருந்தான். பின்பு
அப்படியே தூங்கி விட்டான்.
மறுநாள்,
பாலு, செல்விக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னான்.
பவித்ராவிடம் இப்போதைக்கு ஏதும் சொல்ல வேண்டாம்னு கண்டிப்பா சொல்லி
போனை வைத்தான்.
அன்று இரவு,
பாலு அப்பா மகேந்திரனும் பாலுவும் அதே சோபாவில்,
பாலு, சொல்லுங்கப்பா ஏதாவது யோசிச்சீங்களா,
மகேந்திரன் மௌனமா இருக்க,
சொல்லுங்கப்பா,
மகேந்திரன், யோசிச்சண்டா, ஆனா எப்படி சொல்றதுன்னு தெரியல,
அவ நான் பெத்த மக, நீ என்னுடைய மகன்.
எப்படி சொல்றது, இந்த நிலைமை எந்த பெத்த தகப்பனுக்கும் வர கூடாது னு சொல்லி
கண்கலங்க.
பாலு, அப்பா உங்க நிலைமை எனக்கு நல்லா புரியுது. என்ன பண்றது.
நம்ம வீட்டு முண்டை அப்படி பண்ணிட்டா.
என்னை ஒரு நண்பனா நினைச்சிட்டு பேசுங்க, பாலு சொல்ல
மகேந்திரன், அவளை பத்தி நீ என்னப்பா நினைக்கிற,
நீ கொஞ்சம் ஓப்பனா பேசுனா தான், நானும் பேசமுடியும்.
பாலு, அப்பா நான் அவகிட்ட பேசி பார்த்தேன். அவ சொன்னதையே தான் திரும்ப
திரும்ப சொல்றா.