செல்வி, அ………..ம்மா………………. அடிக்காதே டா, வலிக்கிது.
அவ கூடயே இருந்து அவளை இப்படி ஆக்கிட்டே, பாலு
என்னையே சொல்லாதே , செல்வி
அன்று மூவரும் தூங்க ஆரம்பிக்க, பவி அழுது கொண்டே இருந்தா,
அன்றைய பொழுது கழிந்தது.
மறுநாள் காலை பவித்ராவும் செல்வியும் வீட்டுக்கு கிளம்பினாங்க,.
நேரம் பார்த்து அப்பாகிட்ட பேசிட்டு சொல்வதாக பாலு உறுதி அளித்து அவர்களை
அனுப்பி வைத்தான்.
வீட்டுக்கு வந்த இரு பெண்களிடம் வெங்கட் நடந்ததை கேட்க,
எண்ணத்தை சொல்ல, போய் இரண்டு பேரும் செமத்தியா அடி வாங்கிட்டு வர்றோம்.
பாலு எருமை, எங்களை நல்ல அடிச்சிட்டான்.செல்வி சொல்ல,
வெங்கட்டுக்கு செம சிரிப்பு, பின்ன உங்களை கொஞ்சுவாங்களா,
உங்களை அடிக்கிறதோடு விட்டானே, சந்தோச பட்டுக்கோங்க வெங்கட் சொல்ல,
அடிக்கிறதோடு எங்க விட்டான் என்னை, செல்வி முனங்கினா.
வெங்கட் காதுல விழ வில்லை.
பாலு வீட்டில்,
பாலுவிற்கு ஒன்றும் புரியல, எப்படி இந்த விசயத்த அப்பாகிட்ட சொல்றது.
அம்மாகிட்ட சொன்ன தாங்க மாட்டாங்க.
அப்பாகிட்ட தான் பக்குவமா சொல்லணும்.
நான்கு நாட்கள் கழிந்தன.
இரவு நேரம்.
மெதுவா அப்பா ரூமிற்கு போனான் பாலு.
அம்மா நல்லா தூங்கிட்டு இருந்தாங்க.
உள்ள வா, என்னப்பா இந்த நேரத்துல, அப்பா அழைத்தார்.
இல்லப்பா, ஒரு விஷயம் பேசணும்,
கொஞ்சம் வெளியில் வாங்க, பாலு சொல்ல
யோசனையோடு வெளியில வந்தார், பாலுவின் அப்பா
என்னப்பா, ஏதும் பிரச்சனையா, அப்பா முக கவலையோடு கேட்க,
பாலுவின் கண்களில் கண்ணீர்
அப்பா பதறி விட்டார்,என்னப்பா ஏன் அழுற,