கடைசி பந்தியில் திருமண வீட்டார் உட்கார உணவு பரிமாற்ற பட்டது..
மணமக்கள் இருவரும் சாப்பிடும் போது, நண்பர்கள், தோழிகள் எல்லாரும் சூழ்ந்து
நின்று இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஊட்டி கொள்ள கோஷமிட,
பவிக்கு வெட்கம். மெதுவாக சதிஷ்கு ஊட்ட அவன் கையை கடிக்க, பவி முறைக்க,
சதிஷ் நண்பர்களின் விசில் பறந்தது.
பவித்ராவின் பெற்றோர், மண்டபத்துக்கு செட்டில் பண்ணிட்டு கிளம்ப,
மண்டபத்தை காலி செய்து அனைவரும் வீட்டுக்கு புறப்பட்டனர். முதலில் மணமக்களை பவித்ரா
வீட்டுக்கு அழைத்து சென்று பாலும் பழமும் கொடுக்க, இருவரும் குடித்தார்கள்,
அன்று இரவு மணமக்களை, மாப்பிளை சதிஷ் வீட்டுக்கு முதல் இரவு சடங்கிற்காக அழைத்து சென்றனர்.
சதீஷின் வீட்டில்………….
பாலு, தங்கையின் பயந்த முகத்தை கண்டு, அருகில் சென்று, என்னடி உம்முனு இருக்க,
பவி, ஒன்னு இல்லடா
சொல்லுடி, பயமா இருக்கா
ஆமாடா, அண்ணனிடம் சொல்ல
பாலு, நா வேணும்னா நைட் புள்ளா உன் கூடவே இருக்கட்டா செல்லம்.
பவி தன் அண்ணனை முறைத்து பார்க்க,
பாலு, மாமா உன்னை தொடாம பத்திரமா பார்த்துகிறேன்.
பவி சிரித்து விட்டாள்.
பாலுவும் சிரிக்க…………….
அந்த சமயத்தில், சதிஷ் அக்கா செல்வி வந்து, என்ன அண்ணன் தங்கச்சி குசு குசு னு பேசுறீங்க
பாலு, தன் அண்ணி செல்வியை சைட் அடித்து கொண்டே, ஒன்னும் இல்லை அண்ணி
இல்ல அண்ணி, நைட் முழுவதும் அண்ணா என் கூடவே இருந்து, அவங்கள தொடாம பார்த்துக்க போறானாம்.
செல்வி, பாலுவை பார்த்து ஏன்டா சதிகாரா, என் தம்பி பாவம்டா
பயந்து போன பாலு, சாரி அண்ணி, சும்மாதான்,
செல்வி, எதுக்குடா சாரி சொல்லிட்டு சிரிக்க
பவி, தன் அண்ணனை பார்த்து, அண்ணா, அண்ணி ரொம்ப ஜாலிடைப், ரொம்ப நல்லவங்க
கல்யாணத்திற்கு முன்னாடியே அவங்க என்கிட்ட அதிக நேரம் பேசிருக்காங்க.
அவங்க இருக்கிற தைரியத்தில் தான் நானே இருக்கேன்.
பாலு, அப்படியா செல்வி
செல்வி, அட பாவி, பேர் சொல்றான் பாரு, பாலு மண்டையில் கொட்ட
பாலு, ஏண்டி கொட்டுற
செல்வி, என்னது டீயா, பாலுவை அடிக்க வர
பவி, இவர்களது கூத்தை பார்த்து சிரிக்க
பாலு, ஆ, பவி குட்டி சிரிச்சிட்டா, தங்கையின் சிரிப்பில் சந்தோச பட்டான்.
அங்கு வந்த செல்வியின் கணவன் வெங்கட், என்ன இங்கே மீட்டிங்
செல்வி, பாருங்க, பாலு என்னை டி போட்டு கூப்பிடுறான்.
வெங்கட், நீ அவனுக்கு முறை பொண்ணு தானே, அந்த உரிமையில் கூப்பிட்டுருப்பான்.
செல்வி, ஐயோ உங்க கிட்ட சொன்னேன் பாருங்க.
சதிஷ், என்ன இங்க கலாட்டா, நான் எவ்வளவு நேரம் தான் வெயிட் பண்றது.
புதுமாப்பிள்ளை தன்னுடைய ஆதங்கத்தை கொட்ட
அனைவரும் அவனை பார்த்து சிரிக்க
சதிஷ் முழிக்க,
வெங்கட், இல்ல சதிஷ், பாலு என் பொண்டாட்டியை டி போட்டு கூப்பிடறானாம்.
அதனாலே நானும் உன் புது பொண்டாட்டி பவித்ராவை டி போட்டு கூப்பிட போறேன்.
மாமா, நீங்க டி போட்டு கூப்பிடுங்க இல்ல என்ன வேணா பண்ணிக்கோங்க,
முதல்ல அவளை உள்ள அனுப்பி விடுங்க, சதிஷ் சொல்ல
புது கணவன் சொன்னதை பார்த்து பவி முழிக்க,
வெங்கட் புது மாப்பிளையை பார்த்து, நீ போ சதிஷ், நான் அழைத்து வரேன்னு சொல்லி,
பவித்ராவின் தோள் மீது கை போடு, அணைத்து கொண்டு,
நீ வாடி பவித்ரா நாம போகலாம்னு அழைத்து கொண்டு போக,

Supero super congratulations
Story spr next part sekiram podunga boss