வழிமறியவள் – Part 11 61

இவளும் எப்பவாவது வீட்டுக்கு போய் வருவாள்.

ஆனால் தங்க மாட்டாள். குழந்தைகளை பார்த்து கொள்ள வேண்டும் என்று உடனே கிளம்பி
விடுவாள்.

பெத்தவங்க முன்பு பாலாஜியிடம் ரொம்ப பாசமாக நெருக்கமாக இருந்ததை பார்த்த செல்வி
அம்மா சந்தேகப்பட,

அது பெரிய பிரச்சனையாக வெடித்தது.

செல்வியை வேலை வேண்டாம் என்று உடனே வீட்டுக்கு வர சொன்னாங்க,.

பயந்து போன செல்வி, பாலாஜியிடம் சொல்லி அழ

பாலாஜி அவளுக்கு ஆறுதல் கூறினார்.

என்னைக்கி இருந்தாலும் இந்த சூழ்நிலையை நாம் சந்திச்சிதான் ஆக வேண்டும்.

தைரியமா இருடா.

குழந்தைகளை நான் எப்படியாவது ஆள் வைத்து பார்த்து கொள்வேன்.

அம்மா அப்பா மனசை நாம் கஷ்ட படுத்த கூடாது என்று ஆறுதல் கூறினார்.

செல்வி, வீட்டுல வந்த என்னை பொண்ணு கேளுங்க னு பாலாஜியிடம் கூற அவர்
மறுத்துவிட்டார்.

இல்லடா, கண்டிப்பா உன்னை இரண்டாதாரமா கொடுக்க மாட்டாங்க.

உனக்கு கல்யாணம் முடிஞ்சா பிறகு, உன் புருஷனை கைகுள்ள போட்டுக்கோ.

கண்டிப்பா நாமே ஒன்னு சேரலாம்.

எப்படி னு செல்வி கேட்க

அவருடைய திட்டத்தை அவளுக்கு விவரிக்க ஆரம்பித்தார்.

அதை கேட்ட செல்வி, சிறிது நம்பிக்கையுடன் அவரை விட்டு தன்னுடைய வீட்டுக்கு வந்தாள்.

பெத்தவங்க கூட சண்டை போடாமல், வந்தது ரொம்ப சந்தோசம் னு காண்பிச்சிகிட்டா.

தம்பி சதிஷ் கூட எப்போதும் போல சண்டை போட்டுக்கிட்டு ஜாலியா வீட்டுல இருந்தா.

பெத்தவங்க இவளை நம்பினாங்க.

அவளுக்கு மாப்பிளை பார்க்க ஆரம்பிச்சாங்க.

அவளோ இரவு தின்தோறும் அவளுடைய ரூமில் பாலாஜியுடன் போனில் தொடர்பில் இருந்தாள்.

நாட்கள் ஓடின.

தெரிஞ்ச தரகர் மூலமா மாப்பிளை தேட, அந்த தரகர் பாலாஜிக்கு ரொம்ப வேண்டியவர்.

புரிஞ்சிருக்கும் னு நினைக்கிறன்.

பாலாஜியுடைய விருப்பப்படி, செல்விக்கு வெங்கட் மாப்பிளையா தேர்வு செய்தார்கள்.

ஆனா, செல்வி பாலாஜி தொடர்பு வெங்கட்டுக்கு தெரியாது. நேரம் வரும் போது சொல்ல
வேண்டிய கடமை செல்வி கரத்தில் இருந்தது.

1 Comment

  1. Super Bron.. please continue

Comments are closed.