வழி பிறந்தது

” ம்…சரி.” என்றுவிட்டு அவளைக் கேட்டான். ”உங்க ஆரோக்யத்துக்குக்கூட அதான் காரணமோ..?”

அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

” ஆமாப்பா..”

” இப்பயும் கன்டினியூ பண்றீங்களா..?”

” ரெகுலரா பண்றதில்ல..! நேரம் கெடைக்கறப்ப கண்டிப்பா பண்ணிருவேன்..! அதிகமா… யோகா பண்ணுவேன்..” எனப் புன்னகையுடன் சொல்லிவிட்டு. சூடாகிவிட்ட காபியை. .. டம்ளரில் ஊற்றி…அவனுக்கு ஆற்றிக் கொடுத்தாள்..!

” நாளைலருந்து உன்கிட்ட ஒரு டிசிப்ளினை எதிர்பாக்கறேன்..”

பரிதாபமாகச் சிரித்தான் நந்தா. காபிக்குப் பின் தன் அறைக்கு போய்.. காலைக்கடன்களை முடித்துவிட்டு. . குளித்துப் புத்துணர்ச்சியோடு கிளம்பிக் கீழே போனான் நந்தா.

காலைச் சிற்றுண்டி தயாராக இருந்தது.! தினசரியை எடுத்துக்கொண்டு. . அவன்.. உணவு மேஜைமுன்உட்கார்ந்தான்.

”சாப்பிடலாமா..?” எனக் கேட்டபடி அறைக்குள்ளிருந்து வெளியே வந்த மிருதுளா.. மிக நேர்த்தியாக ஆடை உடுத்தி.. அற்புதமாகத் தோன்றினாள்.

” ம்.. ம்..” தலையாட்டினான்.

அவள் அருகில் வந்தபோது… அவளிடமிருந்து பரவின நறுமணம் அவனை… உற்சாகமடையச் செய்தது. ஆண்ட்டி உணவைப் பறிமாற.. அவளையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘ இந்த வயதிலும் எத்தனை அழகு..? ‘ என வியக்காமல் இருக்க முடியவில்லை அவனால். ‘இப்போதே இத்தனை அழகென்றால்… இளமையில் எப்படி ஜொலித்திருப்பாள்.?’

” ம்.. சாப்பிடு..” அவள் சொல்ல..
” அங்கிள் இல்லையா.. ஆண்ட்டி. .?” எனக் கேட்டான்.
” போயாச்சு..”
” எப்ப போனார்…?”
” நீ… குளிக்கப் போனப்பறம்..”
” டிபன் சாப்பிடலை..?”
” இல்லை. .”

அதற்கு மேல் அவரைப் பற்றிக் கேள்வி கேட்க அவன் விரும்பவில்லை. அது அவளது மனநிலையைக் கெடுத்துவிடக் கூடும்..! எக்காரணத்தாலும் அதைச் செய்து விடக்கூடாது என நினைத்தான் நந்தா. பறிமாறியபின்… மிருதுளாவும் அவன் அருகில் உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினாள்.!!!

[b]அன்று மாலை..! நந்தா வேலை முடிந்து… வீடு போனதும் அவனுக்குக் காபி கொடுத்து உபசரித்தாள் மிருதுளா !
[/b]
”வேலை எப்படி இருந்துச்சு நந்தா. .?”

” பைன் ஆண்ட்டி. .! ரொம்ப புடிச்சிருக்கு..”
” பிராப்ளம் எதும் இல்லையே.?”
” நோ பிராப்ளம்.! புதுசா ஒரு எடத்துல வேலை செய்ற உணர்வே இல்ல ஆண்ட்டி. ரொம்ப நாள் பழகின மாதிரிதான் இருநதுச்சு..”
” நல்லது..! இன்னும் ஒரு வாரம் போனா எல்லாமே பழகிரும்..” என்றாள்.

அன்று இரவு.. பத்து மணியிகியும் அவளது கணவர் வரக்காணோம். டிவிபார்த்துக் கொண்டிருந்த நந்தா கேட்டான்.
” அங்கிள் இன்னும் வல்லையே ஆண்ட்டி. .?”
” வரமாட்டார்னு நெனைக்கறேன். ” என்றாள் மிருதுளா.
” வரமாட்டாரா..?”
” வாரத்துல ரெண்டு நாள் வந்தா.. அதுவே பெருசு..”
” ஓ..” ஒரு பெருமூச்சுடன் சொன்னாள்.
”இதெல்லாம் வெளில சொல்லக்கூடிய விசயமில்லை சிவா..! ஆனா நெருக்கமானவங்களுக்கெல்லாம் ஓரளவுக்கு தெரியும். .”
” ஓ..” என அவளையே பார்த்தான்.

கசப்பாகச் சிரித்தாள். பிறகு மௌனமாகி டிவியை வெறித்தாள்.
சிறிது இடைவெளி விட்டு..
” ஸாரி ஆண்ட்டி. .” என்றான்.

சிறுவயது முதலே… அவரது குணம் அவனுக்குத் தெரியும். மறுபடி ஒரு பெருமூச்சுடன் அவனைப் பார்த்தாள். வேதனை மிகுந்த குரலில் சொன்னாள்.
” இது.. இன்னிக்கு. . நேத்தைய கதை இல்ல. .”
” எத்தனை நாள் இப்படி ஆண்ட்டி. .?”
” நாளா… ஹூம்..” அதே வேதனையுடன் சிரித்தாள். ”வருசக்கணக்கா நடக்குது..”
” ரொம்ப. . வருத்தமா இருக்கு ஆண்ட்டி. .”

” உனக்கே இத்தனை வருத்தம் இருந்தா.. அவரோட பொண்டாட்டி நான். .! எனக்கு எத்தனை வருத்தம் இருந்திருக்கும்..? மொதல்ல எனக்கு தெரிய வந்தப்ப.. தாங்க முடியாம எப்படி துடிச்சேன் தெரியுமா..? அந்தாளுமேல அந்தளவுக்கு நம்பகமா இருந்தேன். ! தவிற.. என் உலகமே அவருதான்னு.. இருந்துட்டேன்..”
”அதுக்கு. . அவரு என்ன சொன்னாரு ஆண்ட்டி. .?”

” பெருசா.. என்னெல்லாமோ பேசினாரு..!” எனக் கசப்பாகவும்.. வேதனையாகவும் அவனைப் பார்த்துச் சொன்னாள். ” நா அழகா இருந்து என்ன பிரயோஜனம்..? அந்த அழகுதான் என்னை ஆணவக்காரியா மாத்திருச்சுன்னு சொன்னாரு..! அவர நான் புருசனாவே மதிக்கறதில்லேன்னாரு..! மொத்தத்துல… அவரோட..பார்வைல.. என்னை ஒரு மோசமானவளா.. சித்தரிச்சிட்டாரு..! எனக்கு பல ஆண்களோட தொடர்பு.. இருக்குன்னும் சொன்னாரு..!”

” சே..” என மனம் வருந்திச் சொன்னான் ”உங்களப் போயி… அப்படி. .?”

” எல்லாம். .என் தலையெழுத்து நந்தா. ! அவரு பக்கத்தை நியாயப்படுத்தறதுக்காக.. என்மேல அபாண்டமான பழி சுமத்திட்டாரு..! டைவோர்ஸ் பண்றதாக்கூட இருந்தேன். ஆனா என் பொண்ணுகதான்.. வயசான காலத்துல எதுக்கு வீண் பிரச்சினைனு சமாதானமா போக வெச்சிட்டாங்க..!

ஆனா.. சொத்து பூராவும். . அப்பவே பிரிச்சு எழுதியாச்சு..! இப்ப இந்த வீடும் எனக்கு சொந்தம்..! அதுக்கப்பறம்.. அவர ஒரு மனுசனா மதிக்கவே நான் விரும்பல..! ஒரு பார்மாலிட்டீஸ்க்காக அவரு கட்ன தாலி என் கழுத்துல கெடக்கே தவிற… அதுல நெஜம் இல்லை. ! மனசளவுல அவரை நான் என்னிக்கோ பிரிஞ்சிட்டேன்..”
” ரொம்ப கஷ்டமா இருக்கு ஆண்ட்டி. ..”

” நீயே சொல்லு…! எனக்கு இப்படி ஒரு புருஷன் தேவைதானா..?” எனக் கேட்ட அவளது கேள்விக்கு பதில் சொல்லத் திணறினான்.

மறுபடி மிருதுளா சொன்னாள்.

” முப்பது வருசமா.. அவரோட வாழ்ந்திருக்கேன் நந்தா. ! இப்படிப்பட்ட ஒரு மனுசனோட இத்தனை வருசமா குப்பை கொட்னத நெனச்சு. . நெனச்சே.. இப்பெல்லாம்.. வேதனைப் பட்டுட்டிருக்கேன்..”

நந்தா ஒன்றுமே பேசவில்லை. மென்மையாக அவள் கையை மட்டும் வருடிக் கொடுத்தான். சிறிது நேரம் மௌனமாக இருந்தவள் நெஞ்சகம் விம்மப் பெருமூச்செறிந்து விட்டுச் சொன்னாள்.

” அதுக்கப்பறம்… அவரோட துணை இல்லாமயேதான் வாழ்ந்திட்டிருக்கேன்.. நந்தா. ! இப்பவும் நான் வாழ்றது லோன்லியான ஒரு வாழ்க்கைதான்..! நான் எனக்காக மட்டுமேதான் வாழ்ந்துட்டிருக்கேன்..”

அதற்கும் அவன் பேசவில்லை.

மிருதுளா… ” இன்னும் கூட என் மனசு ஆறலை நந்தா. ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம்… அந்தாளு செத்தாக்கூட என் கண்ணுலருந்து ஒரு சொட்டு கண்ணீர் வராது. .” என்றாள்.

அவளது மனக்காயம் அவனுக்கு நன்றாகவே புரிந்தது.

”ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க.. ஆண்ட்டி. .” என மெதுவாகச் சொன்னான்.

மறுநாள். .! காலை ஐந்தரை மணிக்கெல்லாம் அவனை எழுப்பிவிட்டு விட்டாள் மிருதுளா.

நந்தாவுக்கு ஐந்தரை மணிக்கு எழுந்து பழக்கமில்லை.. என்பதால் மிகவும் கஷ்டமாக இருந்தது.! ஆனாலும் வேறு வழியில்லை. வசமாக மாட்டிக்கொண்டாகி விட்டது. இவள் ஒரு ஆசிரியை என்பதால் மிகவும் கண்டிப்பாகத்தான் நடந்து கொள்வாள்.!

அவள் கொடுத்த காபியைக் குடித்துவிட்டு. . வாக்கிங் என்ற பெயரில் நடந்துவிட்டு வந்தான். பிறகு மாடியில் நின்று கொண்டு. .கை.. காலை அசைத்தான். அறைக்குள் நின்று.. தண்டால் எடுத்துப் பழகினான்.! அதன் பின்.. குளித்துவிட்டு சாப்பிடப் போனான். !

மிருதுளாவும் புறப்பட்டிருந்தாள்.

” தினமும் இது மாதிரி பண்ணனும். . அப்பதான் ஒடம்பு ஆரோக்யமாவும்.. அழகாகவும் இருக்கும்..” என்றாள்.
” இனிமே பாருங்க.. உங்கள அசத்திக்காட்றேன்..” என்றான் ஜம்பமாக.

” ம்.. ம்..! நல்லதுதான்..!” எனச் சிரித்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *