வழி பிறந்தது

தன் கணவனைப் பார்ப்பதுபோல நகர்ந்து நின்று… கணவனோடு பேசியவாறே… நந்தாவை நோட்டம் விடத்தொடங்கினாள். சில நிமிடங்களில் இருவரது பார்வைகளும். . சினேகிதமாகின.! ஒன்றையொன்று… பரிச்சயமாக பாவித்தன.! நேசமான பார்வைகள்.! காதலோடு நோக்கின..! பின் நெஞ்சை முட்டும் தாபங்களால்.. ஒன்றையொன்று தழுவின..! ஆலிங்கனம் செய்தன.! முத்தமிட்டுக் கொண்டன.!! அவளுக்கு அதிகம் வியர்க்கத் தொடங்கிவிட்டது.! அடிக்கடி கைக்குட்டையை உபயோகித்தாள். அவளது உள்ளத்தவிப்பு. . அவனுக்குப் புரிந்து போனது.!

மெதுவாக நகர்ந்து. .. அருகில் இருந்த கடைக்குப் போய் மாதுளை ஜூஸ் ஆர்டர் செய்தான் நந்தா. ! மேலே தொங்கிக்கொண்டிருந்த புத்தகங்களைப் பார்வையிட்டு… பாக்யா வார இதழை எடுத்துக் கொண்டான் !
கடைக்காரர் நீட்டிய மாதுளை ஜூஸை வாங்கி.. அவளைப் பார்த்தவாறு நின்று குடித்தான். அவள்…அவனைத்தான் கவனித்துக்கொண்டிருந்தாள்.

‘ வேணுமா..?’ பார்வையாலேயே கேட்டான் நந்தா.

‘ ம்கூம். .’ அவளது பார்வை பதிலளித்தது. இதழ்களில் மெல்லிய குறுநகை.!!

அதேநேரம் அவளது பேருந்து வந்து விட்டது.! அவளது கணவன் சீட் பிடிக்க.. முன்னால் ஓடினான். அவளது மகன்.. அவள் கையைப் பிடித்து இழுக்க… நந்தாவைப் பார்த்துச் சிரித்து விட்டு. .. பேருந்தை நோக்கிப் போனாள்.!
அப்படியும். பேருந்தில் ஏறும் முன்… அவனை நான்கைந்து முறை.. திரும்பித் திரும்பிப் பார்த்தாள். பேருந்தில் திபுதிபுவென கூட்டம் ஏறியதால் அதன் பின் அவளைப் பார்க்க முடியவில்லை.
!!
அப்பறம்.. அவன் போகவேண்டிய பேருந்தும் வந்து விட… அவனும் போய் ஏறிக்கொண்டான்.! கூட்ட நெரிசலில் அரைமணிநேரப் பயணம்…! நிறையவே வியர்த்துப் போனது அவனுக்கு. .!

பேருந்து நிறுத்தத்தில்.. ஒரு ஆட்டோ ஸ்டேண்டும்… ஒருபக்கம் மட்டும் வரிசையாகக் கடைகளும் இருந்தன.! மெதுவாகவே நடந்தான். அந்த ஏரியாவில். .. ஓரளவு வசதியானவர்கள். . அதிகம் பேர் இருந்தனர். காம்பௌண்ட் கேட்டைத்திறந்து. . உள்ளே போய்.. இரட்டை மாடி.. வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான்.!
உள்ளிருந்து எந்தச்சத்தமும் இல்லாமல் போக… மறுபடி அழுத்தினான். இந்த முறை கதவு திறக்கப் பட்டது. ! கதவைத் திறந்தவள் மிருதுளா..!

” ஹலோ. .. ஆண்ட்டி. .” எனச் சிரித்தான்.

” அடடே.. நந்தாவா? வா… வா..” என்றாள் முகம் மலர.. ” கொஞ்சம் தூங்கிட்டேன்..”

படுக்கையிலிருந்து எழுந்து வந்திருந்தாள். புடவைக் கட்டு… கலைந்து தளர்ந்திருந்தது. தோளில் நிற்காமல் சரிந்த.. புடவையை எடுத்து. . மறுபடியும் போட்டுக்கொண்டாள். அவனை உள்ளே அழைத்து சோபாவில் உட்காரவைத்துவிட்டு. .. ஃப்ரிட்ஜ்ஜிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். தாகம் தீரக்குடித்தான்.

” அண்ணன் எங்கருக்கான்..?” எனக் கேட்டாள் மிருதுளா.

”நம்ம வீட்லதான் ஆண்ட்டி. .”

” அண்ணி..பரவால்லியா..?”
புன்னகைத்தான்.
” அது இனிமேதான் ஆண்ட்டி தெரியும். .”

சிறிது நேர இளைப்பாறலுக்குப் பின்.. சொன்னாள் மிருதுளா.
” உனக்கு ரூம் கூட அல்ர்ட் பண்ணி வெச்சிட்டேன் நந்தா. .! வா பாக்கலாம்..”
புன்னகையுடன் எழுந்தான் நந்தா.

”அங்கிள் எப்ப வருவார் ஆண்ட்டி. .?”
” நாட் ஹோப் ..” என்றாள்.
” சன்டே கூட வீட்ல இருக்க மாட்டாரா.. என்ன. .?”

பேசியவாறே.. மாடிப்படிகளில் ஏறினர். மாடியில் இரண்டாவதாக இருந்த அறையைத் திறந்து உள்ளே போனாள். அவனும் பின் தொடர்ந்தான்.

” இதான் நந்தா உன் ரூம். ! கெஸ்ட் யாரு வந்தாலும் இந்த ரூம்லதான் தங்க வெப்பேன். இனிமே இது உன் ரூம். ! இதுல நீ என்னென்ன மாற்றங்கள் பண்ண நெனக்கிறியோ.. உன் விருப்பம்போல பண்ணிக்கோ… இனிமே இது உன் வீடு..”

” ரொம்ப தேங்க்ஸ் ஆண்ட்டி.”

நந்தா அந்த அறையை ஆராய்ந்தான். கட்டில் மெத்தை கசங்காமல் இருந்தது. எம்பிராய்டரி வரைந்த தலையணைப் பூக்கள். . நான்கு வண்ணங்களில் மிகவும் அழகாக இருந்தது. சுவரோரமாக ஒரு டேபிள். வோயர் சர். மேற்குப் பார்த்த ஜன்னல். இளரோஸ் திரைச்சீலை. கைக்கெட்டும் தூரத்தில் பக்கத்து வீட்டு மாடி அறை.!
” எம்பிராய்டரி நீங்க பண்ணதா ஆண்ட்டி. .?” நந்தா கேட்டான்.

” ம்.. ” என மெலிதாகப் புன்னகைத்தாள்.

” சூப்பரா இருக்கு..”

அட்டாச்டு பாத்ரூம். .! பாத்ரூம் கதவைத் திறந்து பார்த்தான். மிகவும் சுத்தமாக இருந்தது.!

இரவு..! எட்டரை மணிக்கு அவர்கள் இரவு டிபனைச் சாப்பிடும்போது கேட்டான் நந்தா.
” அங்கிள் வருவாரா.. மாட்டாரா ஆண்ட்டி..?”
” யாமறியோம் பராபரமே..” என்றாள்.

”போன மாசம்வரை.. மாடில ஒரு குடும்பம் குடியிருந்தாங்க..! எனக்கு பயமில்லாம இருந்துச்சு. .”
” சரி விடுங்க..! அதான் நான் வந்துட்டேன் இல்ல. .?”

அவர்கள் டிபன் சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்தில் அவளது கணவர் வந்து விட்டார்.
” ஹல்லொ… யங் பாய்..” என்றார் அவனைப் பார்த்து. ”எப்படி இருக்கே..?”
” பைன் அங்கிள்.! நீங்க எப்படி இருக்கீங்க..?”

அவர் நிதானத்தில் இல்லை. போதையில் இருந்தார். லேசாகக் குளறிக் குளறிப் பேசினார்.
” குட் மேன்..! பாய்..! உங்கம்மா எப்படி இருக்காங்க..?”
” ம்..ம்.. நல்லாருக்காங்க அங்கிள்.! கல்யாணத்துக்கு வந்துருக்கலாமில்ல.. அங்கிள்.?”
” வேலை மை பாய்..! லீவ் போட முடியல..! அப்பறம் எப்படி எல்லாம் நல்ல படியா முடிஞ்சிதில்ல..?”
” ஓ.! அதெல்லாம் பக்காவா நடந்து முடிஞ்சிருச்சு அங்கிள்.”
அவர் சாப்பிடவில்லை. வெளியிலேயே சாப்பிட்டு விட்டதாகச் சொன்னார்.

நீண்ட நேரம் அவருடன் பேசினான் நந்தா. அவன் படுக்கப்போனபோது பத்துமணிக்கு மேலாகிவிட்டது. அவன் படுத்த சிறிது நேரம் கழித்து. . மிருதுளா வந்தாள்.

” ஏதாவது வேணுமா..நந்தா. ?” எனக் கேட்டாள்.
” அப்படி எதும் இல்ல ஆண்ட்டி”
” ஏதாவது தேவைப்பட்டா கேளு…”
” சரி ஆண்ட்டி. .! நீங்க தூங்கல.?”

” தூங்கலாம்..! நாளைலருந்து டிவிய வேணா உன் ரூம்க்கு மாத்திக்கறியா..?”
” ஏன் ஆண்ட்டி. .?”
” பெரும்பாலும் நான் டிவி பாக்க மாட்டேன். ஆனாலும் அது என் ரூம்லதான் இருக்கு.! நீ.. ஒரு வயசுப் பையன்.. நெறைய டிவி பாப்ப..”

” இல்ல.. பரவால்ல ஆண்ட்டி. நான் அப்படியெல்லாம் டிவி பாக்ற ஆளில்லை..! கிரிக்கெட் மட்டும் விரும்பிப் பாப்பேன் அவ்வளவுதான். .! உங்க ரூம்லயே இருக்கட்டும்..”
” நீ.. ரொம்ப பொய் பேசுவ போலிருக்கே..?”

” சே..சே..! நான் ஒரு நேர்மையான இளைஞன் ஆண்ட்டி. .! என்னை நம்புங்க..”
” ம்..ம்.. பாக்கறேன்..!” எனச் சிரித்தாள்.
அவனும் சிரித்தான். உடனே பேச்சை மாற்றினான்.

” அங்கிள் செம டோஸ்ல இருக்கார் போல..?”
சட்டென அவள் முகம் வாடியது. ஒரு கவலை மேகம் அவளின் முகத்தில் கருக்கொண்டது.
” என்னால முடிஞ்சவரை ட்ரை பண்ணேன் நந்தா.. நோ யூஸ்..! இப்பெல்லாம் டெய்லி குடிதான். இனி என் கைல ஒண்ணுமே இல்ல. .” எனத்தொடங்கி.. தனது கணவனைப் பற்றி நிறையக் கதைகளைச் சொன்னாள்.

” உங்கம்மா உன்கிட்ட எதும் சொல்லலையா நந்தா. .”
” என்ன ஆண்ட்டி. .?”
” அங்கிளுக்கு.. இன்னொரு குடும்பம் இருக்கு..” என்றாள்.
திடுக்கிட்டான்.

”என்ன சொல்றீங்க ஆண்ட்டி. .?”

” ஆமா நந்தா. ! சின்ன வயசுக்காரிதான்.! புருஷன் இல்ல. எட்டு வயசுல ஒரு பையன் இருக்கான்.. ! இப்ப ஒரு ரெண்டு வருசமா.. அவளோட தொடர்புலதான் இருக்கார்.! எவ்வளவோ சண்டை போட்டுப் பாத்தாச்சு.. ஒண்ணும் திருத்த முடியல..! இதெல்லாம் உங்கம்மா உன்கிட்ட சொல்லிருப்பானு நெனச்சேன். எங்களுக்குள்ள பேச்சு வார்த்தைகூட அவ்வளவா இல்ல. ! இன்னிக்கேகூட நீ வந்துருக்கேன்னுதான் இங்க வந்துருக்கார். இல்லேன்னா. . ராத்திரி வந்துருக்க மாட்டார்..” என.. வருந்தும் குரலில் சொன்னாள்.

அவளது சோகங்களைக் கேட்ட அவன் மனது கரைந்தது. அவளுக்காக மிகவும் வருந்தினான். முதல் நாளே அவள். . அவனிடம் மனசுவிட்டுப் பேசியது.. அவர்களுக்குள் நெருக்க உணர்வை அதிகரிக்கச் செய்தது. மேலும் பேசியவள்.. பேச்சினிடையே.. கண்கள் கலங்கிவிட்டாள்.

” என்ன ஆண்ட்டி இது..! நீங்க போயி..” என்று கனிவோடு அவளது கரத்தைப் பற்றி. . ஆறுதல் சொன்னான்.
” இப்பெல்லாம் நான் தனிமைல ரொம்பத் தவிக்கறேன் நந்தா. யாருமே இல்லாம அனாதையாகிட்ட மாதிரி ஒரு பீலிங்..! வெரி லோன்லினெஸ்..! இதுலருந்து என்னால விடுபடவே முடியல.” என மிகவும் வருந்திச் சொன்னாள் மிருதுளா.. !!

“என்ன ஆண்ட்டி இது..? ரெண்டு பொண்ணுகளப் பெத்துருக்கீங்க.. அவங்க ரெண்டு பேரும் சேந்து.. நாலு பேரப் புள்ளைங்களப் பெத்துக் குடுத்திருக்காங்க.. ! நீங்க போயி.. அனாதை.. அது இதுன்னுட்டு..?”

” இல்லப்பா.. அவங்கள்ளாம் கல்யாணமாகி.. வாழ்க்கைல.. செட்டிலாகிட்டாங்க..! ஏதோ அம்மாங்கற முறைல என்னைப் பாக்க வருவாங்களே தவிற… என் பிரச்சினையை அவங்களால தீர்க்க முடியாது. ! அவங்கப்பா விசயத்துல… அவங்களால எதும் பண்ண முடியல.! தவிற.. அவங்கவங்க பிரச்சினையே அவங்களுக்குப் பெருசில்லையா..? இதுல.. அவங்கள குத்தம் சொல்ல என்ன இருக்கு..?”

பெருமூச்சு விட்டான் நந்தா.

”சரி விடுங்க ஆண்ட்டி. .! நான் இருக்கேன் உங்களுக்கு. .! எத நெனச்சும் பீல் பண்ணாதிங்க.. ! அங்கிள மாத்த வேண்டியது என் பொருப்பு..!”என்றான்.

”வேஸ்ட் நந்தா. .! அவரால.. அவ இல்லாம வாழ முடியாதுங்கற நெலமைலதான் இருக்கார் இப்ப. ! இதுபத்தி.. நீ ஏதாவது பேசி.. வீனா மனச கஷ்டப் படுத்திக்காத..”

அவளுடைய கணவனைப் பற்றி. . முன்பே அவனுக்கு ஓரளவு தெரியும் என்றாலும்.. இப்போது அவள் சொன்னதைக் கேட்க சங்கடமாகவே இருந்தது. ஒரு பெருமூச்செறிந்து விட்டு அவனைப் பார்த்துச் சொன்னாள்.

” ஸாரி நந்தா நீ வந்த மொத நாளே.. என்னோட கஷ்டங்கள உன்கிட்ட சொல்லி.. உன்ன சங்கடத்துக்கு ஆளாக்கிட்டேன்.”

” சே.. சே.. அதெல்லாம் இல்ல ஆண்ட்டி. .! நெஜமா.. நீங்க மனசுவிட்டு பேசறது.. எனக்கு சந்தோசமா இருக்கு..!” என்றான்.

” யாரை நம்பி நான் வாழ்க்கையை ஆரம்பிச்சேனோ.. அந்தாளே என்னைத் தூக்கி குப்பைல வீசிட்டான் நந்தா. அதான் என்னால ஜீரனிக்க முடியல..” எனக் குரலடைக்கச் சொன்னாள்.

அதன் பிறகும். . அவனோடு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுத்தான் கீழே போனாள் மிருதுளா.
காலை.! நந்தா கண்விழித்த போது.. மணி ஆறரை ஆகியிருந்தது. அவன் கீழே இறங்கிப் போனபோது.. மிருதுளா.. சமைத்துக் கொண்டிருந்தாள்.

”குட் மார்னிங் ஆண்ட்டி. .” என்றான்.

” குட்மார்னிங் ” சொல்லிச் சிரித்தாள்.

காபியை அடுப்பில் வைத்துச் சூடாக்கினாள்.

” இதான் நீ… வழக்கமா எந்திரிக்கற நேரமா..?” எனக் கேட்டாள்.

புன்னகைத்தான்.

” சில நேரங்கள்ள… எட்டு மணிகூட ஆகும் ”

” இன்னிக்கு மொத நாள் அதான் விட்டுட்டேன். ஆனா நாளலருந்து நீ சரியா ஆறுமணிக்கெல்லாம் எந்திரிச்சாகனும்..”

” ஓகே ஆண்ட்டி. .” என்றான். ”பட் ஆறுமணிக்கு எந்திரிச்சு என்ன பண்றது ..?”

”எவ்வளவோ பண்ணலாம்.! ஜாகிங் போகலாம். வீட்லயேகூட எக்சர்சைஸ் பண்ணலாம்.. அப்றம் யோகா கூடப் பண்ணலாம்..”

” கரெக்ட் ஆண்ட்டி. .! ஆனா இதெல்லாம் எனக்கு எதுமே பழக்கமேயில்லயே..”

” பழகிக்கோ.. ! ஆரோக்ய வாழ்க்கை வாழக்கத்துக்கோ..! ஒண்ணும் தப்பில்ல..!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *