ஆதலால் காதல் செய்வீர் Part 4

சாயங்கால வேளை வந்தது பவித்ரா ராஜாவுக்கு போன் செய்து தான் வீட்டிற்கு வர சிறிது தாமதம் ஆகும் என்பதை தெரிவித்தாள்… அதற்கு ராஜா எங்கே செல்கிறாய் என்று கேட்டான் …அதற்கு அவள் வந்து சொல்கிறேன் என்றால்…
அதற்கு ராஜா சரி பார்த்து போய்விட்டு வா என்று கூறினான் …

பவித்ரா கிருஷ்ணனின் அலுவலகத்தை அடைந்தாள் அங்கு கிருஷ்ணன் பவித்ராவை எதிர்பார்த்து டென்ஷனோடு காத்திருந்தார் …

அவள் உள்ளே நுழைந்ததும் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்… அவளை அங்கு இருந்த இருக்கையில் அமருமாறு கோரினார்… அதற்கு பவித்ரா இருக்கட்டும் சார் பரவாயில்லை ,நான் வந்த வேலை முடிந்ததும் கிளம்பிவிடுவேன் நான் நின்றுகொண்டே சொல்லிவிட்டு போய் விடுகிறேன் என்றாள் ….

கிருஷ்ணனுக்கு அவளை எப்படி வற்புறுத்தி அமரச் செய்வது என்பது தெரியவில்லை …ஏதாவது சாப்பிடுகிறாயா என்று கேட்டார் ..
எதுவும் வேண்டாம் சார் என்று கூறினால் …

அவள் தன்னை அப்பா என்று அழைக்காமல் வார்த்தைக்கு வார்த்தை மரியாதையாக சார் என்று அழைப்பது வேதனையை தந்தது… ஆனாலும் தான் செய்த தவறுக்கு அவரால் அவளை ஒன்றும் சொல்ல முடியவில்லை …

பவித்ரா கிருஷ்ணனை நோக்கி உங்கள் மனைவி காவியா இப்பொழுது எங்கே சென்றிருக்கிறார் என்று கேட்டாள் …அதற்கு அவர் அவள் லேடிஸ் கிளப்புக்கு செல்வதாக கூறிச் சென்றிருக்கிறாள் என்று கூறினார்… கிருஷ்ணன் உனக்கு தான் அவளை பிடிக்காது ஏன் அவளை கேட்கிறாய் என்று கேட்டார்… அதற்கு பவித்ரா சும்மாதான் கேட்டேன் சார் கேட்டேன்் என்றால் …

அதற்கு கிருஷ்ணன் அவள் இங்கே இருந்தால் ஏதாவது தகராறு செய்வாள் அதனால் அவள் இங்கு இல்லாதது நல்லதுதான் என்று கூறினார் …அதற்கு பவித்ராவும் பரவாயில்லை சார் நான் கூறப்போகும் உண்மைகளை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியும் அளவுக்கு உங்களுக்கு மன தைரியமும் வலிமையும் இருக்கிறதா என்று கேட்டாள் ….

அதிலிருந்தே கிருஷ்ணனுக்கு ஒன்று குறைந்தது அவள் ஏதோ மிகப்பெரிய விஷயத்தை தன்னிடம் கூற போகின்றாள் என்பது புரிந்தது …..பரவாயில்லை அம்மா காலையில் நீ கூறிய விஷயமே பெரியதுதான் …இப்பொழுது நீ எதைக் கூறினாலும் நான் தாங்கிக் கொள்வேன் ….பெற்ற தாயின் மறுபிறப்பை கூட கவனிக்க இயலாத கொடுமைக்கார பாவி நான் அதனால் நீ கூறு நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார் ….

இப்பொழுது உங்கள் மனைவிக்கு போன் செய்து எங்கே இருக்கிறாய் என்று மட்டும் கேளுங்கள் என்றால் ….உடனே கிருஷ்ணனும் காவியாவிற்கு போன் செய்து நீ எங்கே இருக்கிறாய் என்று கேட்டார் …அதற்கு காவியா நான் லேடிஸ் கிளப்பில் இருக்கிறேன் ஏதாவது அவசரமா என்று கேட்டாள்… அப்படி கேட்கும் பொழுது அங்கே லேசாக முனகுவது போல் சத்தம் கேட்டது …அது காம முனகல் என்பதை பவித்ராவும் கிருஷ்ணனும் புரிந்துகொண்டனர் ….

அப்பொழுது கிருஷ்ணனுக்கு ஒன்று புரிந்தது தன்னுடைய மனைவி தனக்கு துரோகம் செய்துவிட்டு வேறு யாரோட உறவுு கொள்கின்றால் என்பதை புரிந்து கொண்டார் .

தளர்ந்து போய் இருக்கையில் அமர்ந்தார்
…. இருவருக்கும் ஒன்றும் பேச முடியவில்லை சிறிது நேர மௌனத்திற்கு பிறகு இது எவ்வளவு காலம் நடக்கிறது யாருடன் நடக்கிறது எனக்கு தெரிந்து உனக்கு எல்லா விஷயமும் தெரிந்திருக்கிறது… தயவுசெய்து மறைக்காமல் என்னிடம் கூறிவிடு என்று கிருஷ்ணன் பவித்ராவிடம் கூறினார் …..

உங்களுக்கு இப்பொழுது உடம்புக்கு ஒன்றும் இல்லையே… உங்களால் உங்கள் மனைவி வேறு ஒருவருடன் உறவு கொள்வதை புரிந்து கொள்ள முடிகிறதா …இன்னும் நான் கூறப்போகும் விஷயம் அதைவிட மனக் கஷ்டத்தை கொடுக்கும் இப்பொழுது நான் கூற வேண்டுமா அல்லது வேண்டாமா என்று கேட்டாள்…

பரவாயில்லை எல்லாவற்றையும் நான் கேட்டுக்கொள்கிறேன் நீ கூறிவிடு என்று கூறினார் …அதற்கு பவித்ரா இப்பொழுது உங்கள் மனைவி உங்களுக்கு மட்டும் மனைவி அல்ல …இன்னொருவனுக்கும் அவள் மனைவிதான் என்று கூறினாள் …

கிருஷ்ணன் அதிர்ச்சியில் தனது இருக்கையில் இருந்து எழுந்து விட்டார் நீ என்ன கூறுகிறாய் என்று கேட்டார் அதற்கு பவித்ரா நீங்கள் உங்கள் மனைவிக்கு கட்டிய தாலியை உங்கள் வீட்டின் குறிப்பிட்ட பீரோவை சொல்லி அதற்குள் எட்டு வருடங்களுக்கு மேலாக உறங்கிக் கொண்டிருக்கிறது …

இப்பொழுது உங்கள் மனைவியின் கழுத்தில் இருப்பது வேறொருவன் கட்டிய தாளி அவள் உங்களுக்கு மட்டும் மனைவி அல்ல வேறு ஒருவனுக்கும் மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள்… அவன் கட்டிய தாலிதான் உங்கள் மனைவியின் கழுத்தில் கிடைக்கிறது ….

அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து எட்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்று கூறினாள் இது அவருக்கு பேர் அதிர்ச்சியை தந்தது ….

நீ என்ன சொல்கிறாய் அவள் எட்டு வருடங்களுக்கு மேலாக என்னை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறாளா என்று கேட்டார் அதற்கு பவித்ரா ஆமாம் உங்களது திருமண நாளில் உங்கள் மனைவி வேறொருவனை திருமணம் செய்து கொண்டால் என்று கூறினாள்…. காதல் மணம் புரிந்த அந்த கணவனுக்கு எங்கே தனது இதயத்துடிப்பு நின்று விடுமோ என்று பேரதிர்ச்சியாக இருந்தது…. அதை உணர்ந்த பவித்ரா மெதுவாக தண்ணீர் பாட்டிலை அவர்் பக்கமாக நீட்டினாள்…. அவரும் வாங்கி கொடுத்து விட்டு சற்று நேரம் நெஞ்சை நீவிவிட்டு தடுமாறி உட்கார்ந்தார் ….

நீ கூறுவது எல்லாம் உண்மை தானா நீ எதுவும் அவள் மேல் இருக்கும் வெறுப்பில் பொய் சொல்லவில்லையே என்று தடுமாறியபடி கேட்டார்… எங்கே பவித்ரா சும்மா சொன்னேன் என்று சொல்லி மனதுக்கு சந்தோசம் தந்து விட மாட்டாளா என்ற ஒரு நப்பாசையும் இருந்தது…

உடனடியாக பவித்ரா தன்னிடமிருந்த ஆதாரங்களை அவர் முன் கடை பரப்பினால் .
.அவள் காட்டிய ஆதாரங்கள் அனைத்தும் அவள் கூறிய விஷயங்கள் அனைத்தும் உண்மைதான் என்பதை ….அவரால் மறுக்க முடியவில்லை வீடியோ ஆதாரம் இருக்கிறது உங்களால் பார்க்க முடியுமா என்று கேட்டாள் ….

அதற்கு அவர் வேண்டாம் இது போதும் என்று கூறினார்… பரவாயில்லை சார் ஒரே ஒரு வீடியோ மட்டும் இப்போது பார்த்து விடுங்கள் பிறகு உங்கள் முடிவை எடுங்கள் என்று கூறினாள் …..

ஏற்கனவே அந்த ஆதாரங்களை பார்த்தா கிருஷ்ணனுக்கு தனது மனைவி வேறு ஒருவருடன் உறவு வைத்து இருப்பதை உணர்ந்து மனதளவில் இருகிப் போனார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *