சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 75

இன்னும் அவள் உடையிலிருந்து லேசான நீர் சொட்டிக் கொண்டிருந்தது. நகர்ந்தவள் சில அடிகள் தள்ளிப் போய் லேசான இருட்டில் நின்றாள். நவநீதன் ஒரு ஆர்வ மிகுதியோடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

” நா ட்ரஸ் சேஞ்ச் பண்றேன். என்னை திருட்டுத்தனமா சைட்டடிச்ச… தொலைச்சிருவேன். திரும்பி நில்லு.!” என சிரித்தபடி சொன்னாள்.

சட்டென உறைத்தது.
” ஓ .. ஸாரி !!!” என்று திரும்பி ஜன்னலுக்கு வெளியே பார்வையை வீசியபடி.. அவளைப் பார்க்காமல் நின்றான்.

உதட்டில் மெல்லிய புன்னகை தவழ.. நவநீதனை பார்த்துக் கொண்டே ஈர உடைகளைக் களைந்தாள் கிருத்திகா. அவன் திருட்டுத் தனமாக தன்னை திரும்பி பார்க்க மாட்டான் என்ற நம்பிக்கையுடன் ஈரமாக இருந்த சுடிதார் டாப்ஸை தலை வழியாக உறுவி எடுத்தாள். அவளின் உள்ளாடை நனைந்து போயிருந்தது. ஈரமான ஸ்லிப் மார்புடன் ஒட்டிக் கொண்டிருந்தது. ஈரம் பட்டு நனைந்த அவளின் மார்புகள் விம்மி இறுகியிருந்தது. ஸ்லிப்பை மார்பு தெரிய மேலே தூக்கியவள் பிறகு கழற்றிக் கொள்ளலாம் என்று மீண்டும் கீழேயே விட்டாள்.

பின்னர் இடுப்பில் கட்டியிருந்த பேண்ட் நாடா முடிச்சை பிடித்து இழுத்து அவிழ்த்தாள். ஈரமான பாட்டத்தையும் தன் உடம்பை விட்டு அகற்றிய பின் மேலே போட்டிருந்த ஸ்லிப்பையும் உருவி எடுத்தாள்.

ஜட்டி, பிராவுடன் பீரோவை நோக்கிப் போனாள். பீரோ திறந்து ஜட்டி பிரா எடுத்தாள். தயக்கத்தை உதறி.. ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்த நவநீதனைப் பார்த்தபடி உள்ளாடைகளை களைந்தாள். பின் புது உள்ளாடைகள் அணிந்து.. அவன் எடுத்து கொடுத்த ஜீன்ஸ், பனியனை எடுத்து.. பீரோ கண்ணாடியில் தன் அழகை ரசித்தபடி உடம்பில் அணிந்தாள்.

ஜீன்ஸ், பனியன் அவளுக்கு கச்சிதமாக இருந்தது. அவள் உடலை கவ்விப் பிடித்த உடை.. அட்டகாசமாக இருப்பதாக அவளுக்கே தோன்றியது.
‘ வாவ்வ்வ்.. கலக்குடி கலக்கு.’

ஈர முடியை உதறி அதை முதுகில் படர விட்டுக் கொண்டு அவன் பக்கத்தில் வந்து வெளிச்சத்தில் நின்றாள் கிருத்திகா.
” நவநி.”

நவநீதன் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தாலும் அவன் கவனம் முழுவதும் அவளிடம்தான் இருந்தது. அவள் அழைக்க.. அவள் பக்கம் திரும்பினான். ஜன்னலுக்கு வெளியே இருந்த பார்வையை அவள் மீது வீசினான்.! விம்மும் அவளது இளமைப் புடைப்பு அவன் கண்களை பளிச்சென தாக்க.. உள்ளுக்குள் ஒரு அனல் மூண்டது. அவள் உடம்பை கவ்விப் பிடித்திருப்பது போல.. செம ஃபிட்டாக இருந்தது.

” ம்ம் எப்படி இருக்கு ???” முகத்தில் லேசான ஒரு வெட்கச் சாயை படர.. நவநீதனைக் கேட்டாள்.

” ம்ம்ம்ம்.. அசத்தலா இருக்கு !! உனக்கு எப்படி இருக்கு. ??”

” சூப்பர்.! ஐ லவ் மை செல்ப். உனக்கு ஓகேவா சொல்லு.. ???”

” அசத்தலா இருக்க..!”

இன்னும் எவ்வளவோ சொல்ல வேண்டும் போல்தான் இருந்தது. ஆனால் அதைச் சொல்லும் துணிவு அவனுக்கு வரவில்லை !! அவள் மெல்ல நடந்து அவன் பக்கத்தில் வந்து அவனை உரசிக் கொண்டு நின்றாள்.
”தேங்க்ஸ்!”

” எதுக்கு ??”

” நான் என்னிக்கோ சொன்னத மனசுலயே வெச்சிருந்து.. இன்னிக்கு எனக்கு கிப்ட் பண்ணதுக்கு.. !!!”

” உனக்கு புடிச்சிருக்குதான.. ?? கலர்.. டிசைன் எல்லாம். . ???”

” ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு. நல்லா செலக்ட் பண்ணிருக்க.. என் சைஸ்லாம் எப்படி தெரியும் ???”

” பனியன் கம்பெனில வேலை செய்றேன்.. இது கூட தெரியாதா ??”

” பனியன் ஓகே. !! ஜீன்ஸு…?? என் ஹிப் சைஸ் எப்படி. … ??”

” ஒரு யூகத்துல வாங்கினதுதான்.!”

” நைஸ்…!!!!” மகிழ்ச்சி பொங்க.. அவன் கையைப் பிடித்தாள் கிருத்திகா.

ஜன்னலுக்கு வெளியோ ‘சோ ‘ வென பெய்யும் மழை !!! ஜன்னல் வழியாக ஊடுருவும் ஜில்லென்ற குளிர்க் காற்று..!!! உள்ளே கிருத்திகா தொட்ட கை.. மழையின் குளிர்ச்சியை அள்ளி.. ஒட்டு மொத்தமாக நவநீதன் உடம்பின் மேல் தெளித்து விட்டதை போலிருந்தது !!! அவன் உடல் சிலிர்த்து.. மயிர்க்கால்கள் எல்லாம் குத்திட்டு நின்றன !!!

” இப்பக் கூட எனக்கு எப்படி இருக்கு தெரியுமா ? இப்படியே ஓடிப் போய்.. ஜோனு கொட்ற மழைல.. வானத்த பாத்து.. கைகள விரிச்சு நின்னு.. நனையனும் போலருக்கு. !!” அவன் கையை மெல்லக் கோர்த்துப் பிடித்து.. அவன் இடது தோளில் தன் வலது தோள் உரசச் சொன்னாள் கிருத்திகா.

உதட்டில் படர்ந்த மெல்லிய புன்னகையுடன் அவளை பார்த்தான்.
” ம்ம்ம்.. போயேன்.. !! போய் நல்லா நனையேன்.. என்ன கெட்டு போச்சு.. ? என்ன உடம்பு முடியாம போகும்.. அவ்வளவுதானே..? ”

அவனைப் பார்த்தாள்.
”ஹே.. என்ன.. இது நெக்கல் பண்ற மாதிரி இருக்கு.. ?”

” ச்ச.. இல்ல கிருத்தி.. மழைல நனையற உன்னோட ஆசைக்கு சப்போர்ட் பண்ணினேன் !!”

” மழைல நனைறதுலாம் ஓகேதான்.. பட் .. அப்பறமா ஒடம்புக்கு வரப்போறத நெனைச்சாதான்… ம்கூம்… ஊசிலாம் போடனும்.. வேணாம்பா.. மழைய ரசிக்க மட்டும் செய்யலாம்.. என்ன சொல்ற…??”

” ம்ம்ம்.. உனக்கு பயமாருந்தா வாயேன்.. நானும் சேந்து உன்கூட நனையறேன்.. ”

” ஓஹ்ஹ்… ஹா.. !!! ஹை..!!!” சிணுங்கலாக சிரித்து அவனை தோளால் இடித்தாள்.
”எனக்காகவா..??”

” ம்ம்ம்… என் அத்தை மகளுக்காக.. ”

” அய்ஸ்ஸ்.. ப்பா.. ஆல்ரெடி ஜில்லுனு.. உள்ளல்லாம் சிலுத்துகிட்டு நிக்கறேன். இதுல நீ ஒரு பக்கம்.. ஐஸ் வெச்சு என்னை கொல்லாத.. !!!” கழுத்தைச் சாய்த்து.. கூந்தலை ஒரு பக்கமாக எடுத்து உதறி விட்டுக் கொண்டாள்.

‘இந்த மகிழ்ச்சியான மன நிலையில் இருக்கும்போதே அவளிடம் காதலை சொல்லிவிடலாமா ? பொரு மனமே பொரு !’ நவநீதன் வெளியில் இயல்பாக இருப்பதைப் போல காட்டிக் கொண்டாலும்.. உள்ளுக்குள் ஒரு மனப் பிரளயமே நடந்து கொண்டிருந்தது.

” நவநி” அவனை நெருங்கி நின்றாள் கிருத்திகா.

” கிருத்து.?” மனதின் தவிப்பு அவன் வார்த்தைகளில் வெளிப்பட்டது.

” உனக்கு என்ன தோணுது இப்போ.. ?”

” புரியல? என்ன? ”

” இப்படி கொட்ற மழைல.. லவ்வர்ஸ்.. ஜோடியா நின்னா.. எப்படி இருக்கும்.. ?”

” செமையா இருக்கும் !!”