சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 6 104

“பரவால்லக்கா”

“நல்ல அடியா?”

“ம்ம்ம்.. கொஞ்சம் அடிதான்”

“உன் இடுப்பை ஒடச்சிருக்கணும்”

“இப்பவே பாதி ஒடச்ச மாதிரிதான்”

“சரி.. என்ன நடந்துச்சு?”

அலுத்துப் போனது. ஆனாலும் சொல்லத்தான் வேண்டும். இந்த பிரச்சினைக்கே காரணகர்த்தா இவள். அதனால் பாதிக்கப் பட்டவளும் கூட.

“என்ன சொல்ல? நான் பாட்டுக்கு சிவனேனு இருந்தேன். பிரேம்தான் போன் பண்ணி என்னை காட்டுக்கு வரச் சொன்னான். அங்க போனா.. பார்ட்டி.. ஓபனிங் நல்லாத்தான் இருந்துச்சு.. ஆனா பினிசிங்தான் சரியில்லே”

“ஹூம்.. அதுதான் ஊரு பூரா நாறுதே..” என்று வருத்தமாகச் சொன்னாள் ரேவதி “மொதல்ல வம்பிழுத்தது யாரு?”

“உன் தம்பி”

“என்ன பேசினான்?”

“எல்லாம் உன் மேட்டர்தான். நான் ஆரம்பத்துலயே பேச்ச மாத்தப் பாத்தேன். ஆனா பிரேம் விடல. மறுபடி மறுபடி உன்னப் பத்தியே அவன்டகிட்ட பேசி வம்பிழுத்து.. கடைசில கை வெக்கற அளவுக்கு ஆகிருச்சு” அவன் சொல்லி முடித்தபோது சட்டென ரேவதியின் கண்கள் கலங்கி விட்டது.

நவநீதன் திகைத்தான். அவள் கண்ணீரைப் பார்த்து மனதில் வருத்தம் உண்டானது.
“ஸாரிக்கா” என்றான்.

கண்களைத் துடைத்து மூக்கை உறிஞ்சினாள்.
“பாவிகளா.. நான் என்னடா பண்ணேன்? என் பேரை ஊரு பூரா கொடிகட்டி பறக்க வெச்சிட்டிங்களே..? இப்ப என்கூட அன்பு பேசறதே இல்ல. நான் போன் பண்ணாக்கூட எடுக்க மாட்டேங்குறான்”

“ஸாரிக்கா.. நான் பிரச்சினை வராம தடுக்கத்தான் ட்ரை பண்ணேன். ஆனா.. ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பேசி…”

“தொலையுது. உன்னை அடிச்சது யாரு?”

“உன் தம்பிதான். ஆனா அவன் என்னை அடிக்கல.. அவனை அடிக்கப் போய் கல்லு என் மேல பட்றுச்சு..”

“கொலுப்புடா உங்களுக்கெல்லாம். அன்பு என்னை லவ் பண்றேனு எதுவும் சொல்லலையா?”

“இல்லக்கா.. அது ஒரு மாதிரி.. திவ்யாவ கொஞ்ச நாள் முன்னாடி பிரேம் லவ் பண்ணானாம்.. அதையும் இதையும் பேசித்தான்…”

“எப்படியோ.. மூணு நல்லவனுகளும் சேந்து தண்ணியடிச்சிட்டு என் வாழ்க்கையை தள்ளாட விட்டுட்டிங்களேடா.. உறுப்படுவீங்களா?”

“என்னை என்னக்கா பண்ண சொல்ற.?நான் கூடப் போனது ஒண்ணுதான் தப்பா போச்சு” என்று பரிதாபமாகச் சொன்னான் நவநீதன்..!!!

இரண்டு நாட்களில் நவநீதன் ஓரளவு குணமாகிவிட்டான். அடிபட்ட இடத்தில் ஒரு சின்ன வலி இருந்தாலும் அவனால் அதை மறந்து இயல்பாக இருக்க முடிந்தது. மீண்டும் அன்புவைப் பார்த்த போது கேட்டான்.!
” ஏன்டா ரேவதிகூட பேசறதில்லையா ?”

” என்னடா பேசச் சொல்ற.? ஊரு பூரா எல்லாம் நாறிப் போய் கிடக்கு. தெரியாதா உனக்கு.?” என்றான் அன்பு.

” ம்.. தெரியும். ஆனா அது என்னடா பண்ணுச்சு. உன்னை லவ் பண்ணது தப்பாடா.? போன் பண்ணாக்கூட நீ எடுக்க மாட்டேங்கறியாம்.?”

” நீ என்ன லூசாடா ?” என்று கோபத்தை அடக்கிக்கொண்டு கேட்டான் அன்பு. ”இவ்வளவு தூரம் நடந்தப்பறமும் நான் போய் அவகூட பேசற அளவுக்கு நான் என்ன மானங்கெட்டவனாடா ?”

1 Comment

  1. Look like family subject. Nice

Comments are closed.