சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 6 105

‘ ஸ்வீட் ட்ரீம்ஸ். வலிச்சிதுன்னா என்னை எழுப்பு மாமா. நான் வந்து தடவி விடறேன். கிஸ் குடுக்கறேன். உனக்கு வலி இருக்காது ” எனச் சிரித்தபடி சொன்னாள்.

” வேணாண்டி. நீயே வம்ப சம்பாரிச்சிக்காத. தூங்கு..! ஸ்வீட் ட்ரீம்ஸ்..” என்றவன் நீளமாக ஒரு பெருமூச்சை வெளியேற்றினான். !!!

அடுத்த நாள்.. மாலை !! நவநீதனும் அன்பும் ஆஸ்பத்ரி போய் வந்திருந்தனர். அவர்கள் சண்டை போட்டுக் கொண்ட விவகாரம் ஊர் பூராவும் பரவிவிட்டிருந்தது..!!

” உங்களுக்கு இதெல்லாம் தேவையா ?” என்று கேட்டாள் திவ்யா. அவளைப் பார்க்காமல் தலை குனிந்து உட்கார்ந்து கொண்டிருந்தான் நவநீதன். பிரச்சினை என்னவோ ஓய்ந்து விட்டது. ஆனால் பெயர்..???

” இப்ப பாருங்க. உங்க பேரும் சேந்து ஊரு பூரா நாறிட்டிருக்கு ” என்றாள் பிரமிளா. ”இதனால யாருக்கு என்ன லாபம் ? ரெண்டு குடும்பத்தோட மானமும்தான் போச்சு. இதுக்கு நடுல நீங்க வேற தேவை இல்லாம.. ஆஜராகிருயிருக்கீங்க..”

மெதுவாக நிமிர்ந்து பார்த்துச் சொன்னான்.

”ரெண்டு பேரும் இப்படி அடிச்சிக்குவானுகன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சே பாக்கல பிரமி..! சே.. எனக்கே இப்ப அசிங்கமா இருக்கு. எல்லாரும் என்னை திட்றாங்க. உனக்கு இது தேவையானு ” என்று வருந்தும் குரலில் சொன்னான்.

” நான் மொதல்லருந்தே உங்களுக்கு எச்சரிக்கை பண்ணிட்டுதான் இருக்கேன். நீங்கதான் கேக்கலை. இப்ப நீங்களும் குடிகாரன்னு பேரு எடுத்துட்டிங்களா ? உங்க பேரும் கெட்டாச்சா..”

” நான் பீருதான் குடிச்சேன்ப்பா.”

”ஓ.. அது மட்டும் என்ன சக்கரை தண்ணியா ? பீருதான் குடிச்சாராம் பீரு. கேட்டுக்கோடி நம்ம ஹீரோ சாரு சொல்றதை. நாமளும் இனி டீ காபிக்கு பதிலா பீரு குடிக்கலாம் ” என்று திவ்யா கிண்டலாகச் சொன்னாள்.

அவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த கவிதா. அமுதா இரண்டு பேரும் சிரித்தார்கள்.

” ஆமாங்க்கா.. நாம எல்லாருமே இனி பீரு குடிச்சிக்கலாம் ” என்றாள் கவிதா. அவள் தலையில் கொட்டினான் நவநீதன்.

பிரமிளா. ”நீங்க பேசாம மறுபடி திருப்பூரே போயிருங்க. இந்த ஊருலாம் உங்களுக்கு செட்டாகாது ” என எதார்த்தமாகச் சொல்ல.. அவளை திவ்யா முறைத்தாள்.

” ஏன்க்கா.. இப்போதான் எஙக மாமா இங்க வந்துருக்கு ” என்றாள் அமுதா.

” ஆமா அம்மு. ஆனா என்ன பண்றது நம்ம ஊரு பசங்க சரியில்லையே..? இங்கருந்தா இருக்கற நல்ல பேரும் கெட்றும் போலருக்கு ”

ஆனால் அவன் மீண்டும் திருப்பூர் போக மாட்டான் என்பதில் உறுதியாக இருந்தாள் கவிதா.

” ஆமா மாமா. பேசாம நீ போயிரு மாமா ” எனக் கிண்டலாகச் சிரித்தாள்.

அப்பறமும் கொஞ்ச நேரம் அதே பேச்சுதான் ஓடியது. இருட்டத் துவங்கும் நேரம் திவ்யாவும் பிரமிளாவும் விடை பெற்றுப் போனார்கள்.!!!

அத்தை. மாமா. அவன் அம்மா என எல்லோரும் ஒரு வழியாக அவனைத் திட்டி தீர்த்திருந்தார்கள். ஆஸ்பத்ரி போய் வந்த பின் அவனுக்கு வலி பெருமளவில் குறைந்திருந்தது. !!!

காலேஜ் போய் வந்ததில் இருந்து.. படுக்கப் போகும்வரை கவிதாவும் அவனை விட்டு நகரவே இல்லை. அவனிடம் அவள் காட்டும் நெருக்கத்தைப் பார்த்தால் அவனுக்கே பயமாக இருந்தது. கூடிய விரைவில் அவள்.. தன்னால் கன்னிகாதானம் பெற்று விடுவாளோ என்கிற பயம் அது..!!!

மாலை நேரம்.. வீட்டில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான் நவநீதன். கவிதா உள்ளே வந்தாள்.
“மாமா.. அந்தக்கா வந்துருக்கு”

“எந்தக்கா?” திரும்பிப் பார்த்தான். வாசலில் நிழலாடியது.

“ரேவதிக்கா..”

சேரில் உட்கார்ந்தபடியே கொஞ்சம் முன்னால் நகர்ந்து வெளியே எட்டிப் பார்த்தான். அவன் அம்மாவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள் ரேவதி.

“வாக்கா” என்றான் கொஞ்சம் சத்தமாக.

அவள் உள்ளே வந்தாள். புடவை கட்டியிருந்தாள்.

“வாக்கா.. கவி அந்த சேரை எடுத்து போடு” என்றான்.

கவிதா சேரை எடுத்து ரேவதி உட்கார வசதியாகப் போட்டாள்.
“நல்ல ஆளுகடா..” என்றபடி உட்கார்ந்தாள்.

சிரித்தான். கவிதா அவன் பக்கத்தில் நின்றாள்.

“எப்படி இருக்கு இப்ப?” ரேவதி கேட்டாள்.

1 Comment

  1. Look like family subject. Nice

Comments are closed.