“ம்ம்ம் ”
“அதுக்கு அவ உனக்கு ட்ரீட் வெச்சாளா? என்னடா ஏதாவது ரூட் போடறாளா?”
“யாரு பிரமியா? ச்ச.. நீ ஏன்டா?”
“சரி. உன் பக்கத்துல யாரு உக்காந்தா? பல்லியா?”
“இல்ல. திவ்யா” என்றான் நவநீதன்.
“அவளா உன் பக்கத்துல உக்காந்தா?” எனக் கேட்ட பிரேமின் முகம் மாறியதைக் கவனித்தான். திவ்யாவை இவன் காதலித்தான் என்று அன்பு சொன்னது ஞாபகம் வந்தது.
‘இன்னும் அவளை காதலிச்சிட்டுதான் இருக்கானோ?’
“ம்ம்ம்..”
“அவ… ரொம்ப இதாச்சே?”
“எது?”
“ஒரு மாதிரி.. சென்ஸிடிவ். தெரியாம கை கால் பட்டாலே டென்ஷனாகிருவா.”
“அப்படியா? ஆமா. நான் ஒண்ணு கேள்விப் பட்டேனே. உண்மையா?”
“என்ன?”
“நீ ஏதோ.. திவ்யாள லவ் பண்றதா….”
நவநீதனை ஆழமாகப் பார்த்தான். அவன் நினைவில் திவ்யா தோன்றியிருப்பாள் போல.
“யாரு சொன்னா?”
“கேள்விப் பட்டேன்”
“அடப் போடா.. லவ்வாவது மண்ணாவது” திடுமென சலித்துக் கொண்டான் பிரேம்.
“ஏன்டா என்னாச்சு? ”
“அவ அழகாத்தான் இருக்கா. அதனால அவ மேல ஆசைப் பட்டது என்னவோ உண்மைதான். ஆனா செரியான திமிர் புடிச்ச கழுதை. ஓவர் சீன் போடுவா. தேவையில்லாம டென்ஷனாவா. லேசா கை கால் பட்டுச்சுன்னால என்னமோ அவளை ரேப் பண்ணிட்ட மாதிரி பேசுவா. அத்தனை ஆங்காரம் அவளுக்கு” என்று மனத் தாங்கலுடன் சொன்னான் பிரேம்.
அவன் சொல்வதைப் பார்த்தால் திவ்யாவை காதலித்தது உண்மைதான் என்று தோன்றியது. ஆனால் இவன் எதிர் பார்த்தது நடக்கவில்லை போல. ஹ்ம். !
“சரி. நீ திவ்யாவ லவ் பண்ணியா இல்லையா?”
“பண்ணித் தொலைச்சேன். கொஞ்ச நாளு”
“அவளுமா?”
“ஏன்டா. நான் சொல்றதுல நம்பிக்கை இல்லையா?”
“சே. அப்படி இல்ல. அவளும் உன்னை லவ் பண்ணாளானு தெரிஞ்சுக்க கேட்டேன்”
“என்ன எழவோ? ஆனா என்கூட ஆரம்பத்துல நல்லாத்தான் பழகினா. அப்பறம் போகப் போக சண்டை சச்சரவுனு.. எப்பப் பாரு ஒரே டென்ஷன் புடிச்ச வேலையா போச்சு”
“ஓ.. சரி. இப்ப எப்படி? ”
“இப்பல்லாம் ஒரு மயிறும் இல்ல”
“எப்படி பிரேக்கப் ஆச்சு?”
“அது.. பெருசா சொலலிக்க ஒண்ணும் இல்லடா. சும்மா சும்மா சண்டை போடுவா. இல்லாத பிரச்சினையை பேசிப் பேசியே வம்பிழுப்பா. அப்படி வந்த சண்டைல ரெண்டு பேரும் ஈகோல பேசாம விட்டு.. அதுவே தானா கட்டாகிப் போச்சு. இப்ப சுத்தமா பேச்சு வார்த்தையே இல்ல. ஏன் பாத்துக்கறதுகூட இல்ல. மத்தபடி ஒண்ணும் இல்ல. ஈகோதான். நானா வந்து பேசனும்னு அவ நெனச்சா. நான் யாரு? சரிதான் போடி மயிறுனு விட்டுட்டேன்..”
பிரேம் பல விசயங்களை மறைத்துச் சொல்கிறான் என்று தோன்றியது. ஆனால் அதற்கு மேல் அவனைத் தோண்டித் துருவிக் கேட்க நவநீதன் விரும்பவில்லை.
பிரேமே பேசினான்.
“ஒண்ணுல்ல.. சினிமா போலாம்பா. சரினு கூட்டிட்டு போனம்னா அன்னிக்கு அவ கேட்டது எல்லாம் வாங்கித் தரனும். ஷாப்பிங்னு அலைய வெப்பா. ஹோட்டல் சாப்பாடு. ரெண்டு மூணு ஜூஸ் அது இதுனு கண்டதெல்லாம் கேப்பா. அப்படி போகலேன்னா அங்கயே சண்டை வந்துரும்” எனச் சொன்னவன் சட்டென நிறுத்தி விட்டு நவநீதனைக் கேட்டான்.
“ஆமா. நீ ஏதாவது அவளை லவ் பண்றியா?”
“சே சே.. அதெல்லாம் இல்லடா. நீ வேற? நான் உன் கதைய கேட்டேன்”
“அதான பாத்தேன். நீ எவள வேணா லவ் பண்ணு. ஆனா அவள மட்டும் லவ் பண்ணி தொலைச்சிராத. நொந்து நூலாகிருவ. ராட்சசி” என்றான் பிரேம்.