பாலைவனத்தில் என்னை மடக்கிய அரபி அழகி! 42

திரும்பவும் காரில் ஏறி தமாம் ஏர் போர்ட் போய் கொண்டிருந்தோம். போகும் வழியில் ஒரு ட்ராவல் ஏஜென்ஸி முன்பு காரை நிறுத்தி என்னை வர வேண்டாம் என சொல்ல நானும் முதலாளி மனைவியும் இருந்தோம். இப்போது நாங்களிருவரும் காரினுள் தனியாய் இருக்க அவள் கண்களை நான் நோக்க அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவள் அவசர அவசரமாக தன் கை பையை திறந்து இரண்டு நூறு ரியால் (20,000 ரியால்) பண கட்டுகளை தர நான் வேண்டாம் என சொல்ல அவள் என் கைகளில் பணத்தை திணித்தாள். நான் அவள் தந்த பணத்தை என் கை பையினுள் வைக்க

அவள்: உன்னிடம் ஒரு முக்கியமான செய்தி சொல்லணும்.

நான்: என்ன உனக்கு ஏதாவது உதவி செய்யணுமா…

அவள்: அதெல்லாம் ஒண்ணுமில்லே…உன்னோட குழந்தை என் வயித்துல உருவாகியிருக்கு….
என நான் அதிர்ச்சியடைந்தவனாய்…

நான்: என்ன சொல்றே….

அவள்: ஆமா…இப்போ நான் ஒரு வாரமா உன் கிட்டே இதை சொல்லணும்னு நினைச்சிருந்தேன். ஆனா நீ பயப்ப்டுவியோன்னுதான் உன் கிட்ட சொல்ல வில்லை.

நான்: இப்போ என்ன செய்ய போறே? உன் வயித்துல் இருக்கும் குழந்தைய கலச்சிருவியோ….

அவள்: இல்லை. நான் என் வயித்துல உருவானத கலைக்க மாட்டேன்.
நான்: உன் புருஷனுக்கு தெரிஞ்சா என்ன செய்வே?
அவள்: அவனுக்கு தெரிஞ்சா தெரியட்டும். அவன் எனக்கு தலாக் தந்தால் வயித்துல வளர்ர என் குழந்தைக்காக நான் உயிர் வாழ்வேன்.
அப்போது என் முதலாளி ட்ராவல் ஏஜென்ஸியை விட்டு வெளியே வர அவள் தன் கண்ணீர் வழிந்த தன் கண்களை துடைத்து கொண்டாள். என் முதலாளி கார் பக்கம் வரு முன் அவனுக்கு தெரிந்த ஒரு அரபி வர என் முதலாளி அவனிடம் ஏதோ பேச, காரின் பின் இருக்கையில் இருந்த என் முதலாளியின் மனைவி சட்டென்று எழும்பி முன் பக்கமிருந்த என் தலையை பிடித்து என் கன்னம், உதடு, நெற்றி என பாகங்களில் முத்தம் தந்து விட்டு பின் பக்க இருக்கையில் அவள் இருக்கவும் என் முதலாளி காரை நோக்கி வந்து ட்ரைவர் இருக்கையில் அமர்ந்து என் விமான பயண் சீட்டு மற்றும் பாஸ் போர்ட் மற்றும் இரண்டு மாத என் விடுப்பு சம்பளம் எல்லாம் தந்து என்னை தமாம் ஏர் போர்ட் கொண்டு சேர்த்தான்.

ஏர் போர்ட்டில் என்னை என் முதலாளி கட்டி பிடித்து போய் இரண்டு மாதம் கழித்து வா என விடை தர முதலாளியின் மனைவியை நான் பார்க்க அவள் கண்களில் கண்ணீர் பளிச்சென தெரிய நானும் கண் கலங்கியவாறு இருவரிடமும் விடை பெற்று இந்தியா வந்து சேர்ந்தேன்.

ஊர் வந்து என் குழந்தைகளுடனும் என் மனைவியுடனும் என் குடும்பதாருடனும் கொஞ்சி குலவ ஒரு வாரம் எப்படி போனதென்று தெரிய வில்லை. எனக்கு திடீரென முதலாளி மனைவி, என்னால் கருவுற்ற பெண் என்ன ஆனாளோ என்ற கவலை அடிக்கடி வாட்டும். ஆனாலும் அவள் துணிவை கண்டு மனம் ஆறுதல் அடைவேன்.

நான் ஊர் வந்து பத்தாம் நாள் என் வீட்டு தொலை பேசி ஒலிக்க நான் யாரென்று கேட்க மறு முனையில் என் முதலாலி பேசினான். என்னை உடனே தமாம் வரும் படி சொன்னான். ஏன் இப்போது தானே ஊர் வந்துள்ளேன். ஏன் இப்படி அவசரமாய் கூப்பிடுகிறாய் என்றதற்கு புதிய காண்ட்ராட் கிடைத்துள்ளது. என்னிடம் வேலை செய்ய வேறு யாரும் இல்லை அதனால் உடனே புறப்பட்டு வா என்றான். சரி நான் வருகிறேன் என்று சொல்லி விட்டு தொலை பேசியை கட் செய்தேன்.