“ச..சரிங்க..”
“எல்லாம் ரெடி பண்ணு.. நான் போய் குயிக்கா ஒரு குளியல் போட்டு வந்துடறேன்..”
அவ்வளவுதான்.. பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டார். ஏக்கமும், ஏமாற்றமுமாக நான் சில வினாடிகள் அப்படியே உறைந்து போய் நின்றிருந்தேன். நான் கரு உருவாகியிருக்கும் சேதியை அவரிடம் சொல்லும் ஆர்வத்தில் இருக்கிறேன்.. அவரோ பரபரப்பு தொற்றிக் கொண்டவராய் பாத்ரூமுக்குள் சென்று விட்டார்..!! கிளம்பும் முன், அமைதியாக ஒரு ஐந்து நிமிடம் எனக்கு ஒதுக்கினால் கூட நிம்மதியாக சொல்லிவிடுவேன். ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்.. பார்க்கலாம்..!!
ஒருசில வினாடிகளிலேயே சுதாரித்துக் கொண்டேன். நானும் பரபரப்பானேன். வார்ட்ரோப் திறந்து அந்த ப்ளூ கலர் டை தேடியபோது, பெட்ரூமில் அவருடைய செல்போன் அலறுவது கேட்டது. நான் கண்டுகொள்ளவில்லை. குளித்து விட்டு வந்ததும் பேசிக் கொள்வார் என்று நினைத்தேன். டையை தேடிப்பிடித்து எடுத்து, அவருடைய ட்ராவல் பேக்கில் எடுத்து வைத்தேன். அவருடைய செல்போன் சார்ஜர் எடுத்து வைப்பதற்காக பெட்ரூம் சென்றபோது, மீண்டும் அவருடைய செல்போன் கத்தியது.
இப்போது நான் அந்த செல்போன் மீது பார்வையை வீசினேன். அவருடைய சீனியர் மேனேஜர் அந்த ஷர்மாதான் கால் செய்கிறார். ஐயையோ.. திரும்ப திரும்ப கால் செய்கிறாரே.. ஏதாவது முக்கியமான விஷயமாய் இருக்குமோ..? இவர் வேறு பாத்ரூமில் இருக்கிறார்.. என்ன செய்வது..?? நான் ஓரிரு விநாடிகள்தான் யோசித்தேன். அப்புறம், கால் அட்டன்ட் செய்து ‘அவர் பாத்ரூமில் இருக்கிறார்.. இன்னும் சிறிது நேரத்தில் திரும்ப பேசுவார்..’ என்று மட்டும் சொல்லி கட் செய்துவிடலாம் என்று நினைத்தேன். கால் பிக்கப் செய்து பேசினேன்.
“ஹ..ஹலோ மிஸ்டர் ஷர்மா.. ஹீ இஸ்..” நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே,
“ஹே.. பவித்ராதான இது..? நா..நான் ஷர்மா இல்ல.. ஷர்மிலி..!! என்னை ஞாபகம் இல்லையா பவித்ரா..? உங்க மேரேஜுக்கு வந்திருந்தேனே..? ஹைட்டா.. ஜீன்ஸ்.. டி-ஷர்ட்.. போட்டுட்டு..!! இப்போ ஞாபகம் வருதா..?? அசோக்..”
அதன்பிறகு அவள் பேசியது எதுவுமே என் காதில் விழவில்லை. செல்போன் என் கையில் இருந்து நழுவியிருந்தது. தாங்க முடியாத அளவுக்கு பலத்த அதிர்ச்சியை உள் வாங்கியிருந்ததில், எனது இருதயம் பதறிக் கொண்டிருந்தது..!! உடலில் இருந்த சக்தி எல்லாம் வற்றிப் போனவளாய், நான் மெத்தையில் சரிந்து விழுந்தேன்..!!
இதுவரை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையில்.. இணையில்லா மகிழ்ச்சியை தந்த தினம் என்று ஒன்றிருக்கும்..!! இதயத்தில் இடி விழுந்த மாதிரி அதிர்ச்சியை அள்ளி வந்த தினம் என்று ஒன்றிருக்கும்..!! இரண்டுமே ஒரே தினமாய் இருந்திருக்கிறதா உங்களுக்கு..?? இருந்தால் எப்படி இருக்கும் என்று இமேஜின் செய்ய முடிகிறதா உங்களால்..?? எனக்கும் அதுதான் நேர்ந்திருக்கிறது..!! கருவுற்றிருக்கிறேன் என்று.. மதியந்தான் கால்கள் தரையில் நில்லாமல் மிதந்தேன்..!! கணவனால் ஏமாற்றப் பற்றிருக்கிறேன் என்று மாலையில் வந்த சேதியால்.. காலூன்ற கூட வலுவில்லாமல் வீழ்ந்து கிடக்கிறேன்..!!
அசோக் பாத்ரூமில் இருந்து வெளிப்பட மேலும் ஐந்து நிமிடங்கள் ஆகின. அதுவரை நான் மெத்தையில் பித்து பிடித்தவள் மாதிரி அமர்ந்திருந்தேன். வெளியே வந்தவர் என்னை கண்டுகொள்ளாமல், எடுத்து வைத்திருந்த உடைகளை உடுத்திக் கொள்ள ஆரம்பித்தார். ஜீன்ஸ் பேன்ட் அணிந்து கொண்டவர், டி-ஷர்ட்டை கழுத்து வழியாக மாட்டியபோதுதான், எதேச்சையாக என் முகத்தை கவனித்தார். உடனே குழப்பமான குரலில் கேட்டார்.
“ஹேய்.. என்னடி ஆச்சு உனக்கு..? போறப்போ நல்லாருந்த.. இப்போ பேயறஞ்ச மாதிரி உக்காந்திருக்க..?”
நான் பதில் சொல்லாமல், நிமிர்ந்து அவருடைய முகத்தை கூர்மையாக பார்த்தேன். பார்க்க பார்க்க அவர் மீது ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. படபடத்த உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டேன். ஒரு சில வினாடிகள்..!! அப்புறம் பொங்கி வந்து துக்கத்தை அடக்கிக்கொண்டு சொன்னேன்.
“உங்களுக்கு இப்போ ஒரு கால் வந்தது..!!”
“யார்கிட்ட இருந்து..?”
“ஷர்மா..!!”
நான் சொன்னதும் அவர் முகம் பட்டென ஒரு அதிர்ச்சிக்கு போனது. ஆனால் நான் எதிர்பார்த்த அளவுக்கு பெரிதான அதிர்ச்சி இல்லை. முகம் சற்று இறுக்கமானது. கண்களை இடுக்கி என்னை துளைப்பது மாதிரி ஒரு பார்வை பார்த்தார். அப்புறம் மெல்ல நடந்து சென்று கீழே கிடந்த செல்போனை எடுத்துப் பார்த்தார். ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தியவர், செல்போனை பாக்கெட்டில் போட்டுக்கொண்டே, மிக இயல்பான குரலில் கேட்டார்.
“என்ன சொன்னா..?”
நான் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்க, அவரோ அந்த மாதிரி கேஷுவலாக கேட்டது, எனக்கு மேலும் ஆத்திரத்தை கிளப்பி விட்டது. சீறினேன்..!!
ம்ம்ம்ம்.. ‘உன் புருஷன் நல்லா பொய் சொல்லி உன்னை ஏமாத்திட்டு இருக்காரு’ன்னு சொன்னா..!!”
“பவி.. இப்போ என்னாயிடுச்சுன்னு இப்படி கத்துற..?”
“ஓ..!! கத்துறனா..? சரி கத்தலை..!! நேத்து அவ கூட அவ்வளவு நேரம் திருட்டுத்தனமா பேசிட்டு.. வேற யார் கூடவோ பேசுனேன்னு கதை சொல்லிருக்கீங்க..!! அதையாவது ஏன்னு கேட்கலாமா.. இல்ல கேட்க கூடாதா..?”
“ப்ச்.. புரிஞ்சுக்காம பேசாத பவி..”
“ஏன் பொய் சொன்னீங்கன்னு கேட்டா.. புரிஞ்சுக்காம பேசுறனா..?”
“இங்க பாரு.. உன்கிட்ட பொய் சொல்லன்னும்ன்றது என் இன்டன்ஷன் இல்ல..”
“அப்புறம்..?”
“தெரிஞ்சா.. தேவையில்லாம நீ சந்தேகப்படுவ..!! அதான்..”
“ஓஹோ..!! தப்பை நீங்க பண்ணிக்கிட்டு.. பழியை என் மேல தூக்கிப் போடுறீங்களா..?”
“நான் எந்த தப்பும் பண்ணலை..!! அதே மாதிரி.. உன் மேல பழி போடனும்னும் எனக்கு அவசியம் இல்ல.. நீ நடந்துக்குறதை வச்சுத்தான் சொல்றேன்..!!”
“அப்டி என்ன நான் தப்பா நடந்துக்குட்டேன்..?”
“பவி.. நீ இப்போ கோவத்துல இருக்குற.. நான் என்ன சொன்னாலும் உனக்கு தப்பா தோணும்..!! வேணாம்.. விடு..!! நான் புனே போயிட்டு வந்து.. பொறுமையா இதைப் பத்தி பேசலாம்..!!” சொல்லிக்கொண்டே அவர் நகர முற்பட, நான் அவசரமாக எழுந்து அவர் முன்பாக கை நீட்டி அவரை மறித்தேன். காட்டமாக சொன்னேன்.
“எனக்கு அவ்வளவு பொறுமைலாம் இல்ல.. இப்போவே பேசிடலாம்..!!
Iloveyou jayar