“பவி…”
“என்ன செஞ்சாலும் ஒண்ணாத்தான் செய்வீங்கலாம்..? என்னென்னலாம் செஞ்சிருக்கீங்க..?”
“பவி ப்ளீஸ்… நீ எல்லாம் தப்பா புரிஞ்சுக்கிட்ட..!!”
அவர் சற்றே சலிப்பான குரலில் சொல்ல, இப்போது நான் புரண்டு அவருடைய முகத்தை ஏறிட்டேன். ஒரு துளி நீர் மட்டும் ததும்பிய எனது கண்களுடனும், ஆற்றாமையில் துடித்த உதடுகளுடனும் பரிதாபமான குரலில் சொன்னேன்.
“நா..நான்.. நான் புரிஞ்சுக்கிட்டது எல்லாம்.. தப்பா இருக்கனும்னுதான் நானும் ஆசைப் படுறேன்பா..!!”
“நீ நெனைக்கிற மாதிரிலாம் எதுவும் இல்ல பவி.. என்னை நம்பு..!!”
அவர் சொல்லிக்கொண்டே என் நெற்றியில் முத்தமிட வர, நான் எந்த உணர்ச்சியும் காட்டாமல் புரண்டு படுத்துக்கொண்டேன்.
”
எனக்கு தூக்கம் வருது.. நான் தூங்கப் போறேன்..!!”
சொல்லிவிட்டு கண்களை இறுக மூடிக் கொண்டேன். கொஞ்ச நேரம் படுக்கையிலேயே அமர்ந்திருந்தவர், பின்பு ஒரு நீண்ட பேரு மூச்சு விட்டுவிட்டு எழுவது தெரிந்தது. அறையை விட்டு வெளியே செல்கிறார் என்று புரிந்தது. கொஞ்ச நேரம் எந்த சப்தமும் இல்லை. என்ன செய்கிறார் என்று எனக்கு புரியவில்லை. ஒருவேளை அவளுக்கு போன் செய்து கொஞ்சுகிறாரோ..?? எழுந்து பாக்கலாமா..?? ச்சை..!! வேண்டாம்..!!!
பத்து நிமிஷங்கள் கழிந்தபோது அவர் திரும்ப வந்தார். விளக்குகளை அணைத்தார். எனக்கருகே வந்து படுத்துக் கொண்டார். குப்பென வந்த சிகரெட் வாசனை இவ்வளவு நேரம் என்ன செய்தார் என்று எனக்கு உணர்த்திற்று. நான் எந்த அசைவும் இல்லாமல் கிடந்தேன். இப்போது அவருடைய கை என் புஜத்தை பற்றியது.
“பவி..” என்றார் ஹஸ்கியான குரலில்.
“ம்ம்..”
“தூங்கிட்டியா..?”
“ம்ம்..”
“என்ன பவி நீ.. ஹனிமூன் வந்த எடத்துல.. இப்படிலாம்..”
கொஞ்சலாக சொன்னவர் அவருடைய கையை அப்படியே எனக்கு முன்பக்கமாக விட்டு என் மார்பைப் பிடித்து பிசைய, நான் எரிச்சலானேன்.
“ச்சீய்… எந்த நேரத்துல என்ன பண்றதுன்னு கூட உங்களுக்கு தெரியாது.. விடுங்கப்பா..” என்று அவருடைய கையை பட்டென தட்டிவிட்டேன்.
“ஏன்.. என்னாச்சு இப்போ..?”
“எனக்கு தூக்கம் வருது.. விடுங்க..!!”
கடுகடுப்பாக சொன்னவள், கம்பளியை இழுத்து கழுத்து வரை போர்த்திக் கொண்டேன். கண்களை இறுக்கி மூடிக் கொண்டு, தூக்கம் வருவது மாதிரி பாவ்லா செய்து கொண்டேன். அவர் கொஞ்ச நேரம் அப்படியே அமைதியாக அமர்ந்திருந்துவிட்டு, பின்பு திரும்பி படுத்துக் கொண்டார். இருளுக்குள்.. இருவரும்.. ஒரே கம்பளிக்குள்.. ஆனால் எதிர் எதிர் திசையை வெறித்துக்கொண்டு..!!
தூங்கிப் போனேன். எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை. ‘கிர்ர்ர்ரர்ர்ர்ர்…!!!’ என்ற சத்தம் ஸ்க்ரூட்ரைவர் நுழைந்தது போல காது கிழிக்க, பட்டென விழித்துக் கொண்டேன். கண்கள் கசக்கி பார்த்தேன். அருகில் இருந்த டைம்பீஸ்தான் அறை வாங்கிய குழந்தை மாதிரி அலறிக் கொண்டிருந்தது. அதன் தலையில் தட்டி அந்த அலறலை நிறுத்தினேன். நள்ளிரவு நேரம் என்பதை உணர்ந்தேன். மீண்டும் படுக்கையில் விழப்போனவள், எதேச்சையாக பக்கத்தில் பார்வையை வீச, பக்கென அதிர்ந்து போனேன். என் கணவரை காணோம்..!!!!
எங்கே சென்றிருப்பார்..?? பாத்ரூமா..? பாத்ரூமில் விளக்கு எரியவில்லையே..? ‘என்னங்க..’ என்று மெல்லிய குரலில் அழைத்துப் பார்த்தேன். எந்த பதிலும் இல்லை. இப்போது இன்னும் கொஞ்சம் சத்தமாக ஒரு ‘என்னங்க..’வை உதிர்த்து பார்த்தேன். மீண்டும் நிசப்தம்..!! படுக்கையை விட்டு மெல்ல எழுந்தேன். வெளியே சென்று தம்மடிக்கிராரோ..? அறைக்கதவு திறந்திருந்தது. ஆனால் வெளியே அவர் ஆளைக் காணோம். எங்கே சென்றிருப்பார்..?? வாசலில் நின்றவாறு அந்த ரிசார்ட்டை சுற்றும் முற்றும் பார்த்தேன். எல்லா அறைகளிலும் விளக்கு அணைக்கப்பட்டு அமைதியாக இருந்தது. ஒரே ஒரு அறையை தவிர..!! ‘அதுதான் நான் தங்கியிருக்கிற எடம்..’ என்று அந்த லாவண்யா கை காட்டினாளே.. அதே அறை..!!
அவ்வளவுதான்..!!! எனக்கு இப்போது இதயம் பதற ஆரம்பித்தது. பலமடங்கு வேகத்தில் படபடவென துடிக்க ஆரம்பித்தது. கண்களில் இருந்த கொஞ்சநஞ்ச தூக்கம், சுத்தமாய் செத்துப் போனது. கதவை மூடக் கூட தோன்றாமல், காலில் செருப்பு அணியாததை கூட மதியாமல், அந்த அறையை நோக்கி ஓடினேன். ஜில்லென்ற குளிர்.. ஊசியாய் என் உடலை துளைத்தது. கற்கள் காலை குத்தின. எதைப் பற்றியும் நான் கவலைப் படாமல், கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டே ஓடினேன்.
என்ன செய்திருக்கிறார் இவர்..?? நான் தொட விடாததால், அவளை தொட சென்று விட்டாரா..? அவளும்தான் அவருக்காக அப்படி இழைகிறாளே..? இதற்காகத்தான் இரவு கால் செய்கிறேன் என்று நம்பர் வாங்கினாரா..? ச்சே..!!!! கடவுளே.. அப்படியெல்லாம் எதுவும் இருக்கக் கூடாது..!!
ஓட்டமும் நடையுமாக நான் அந்த அறையை அடைந்தேன். குட்டியாய் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது..!! அறையில் விளக்கு எரிந்தாலும், வெளிப்புறமாக தாழ் போடப்பட்டிருந்தது. பூட்டு தொங்கியது..!! அப்படியானால் அவர்கள் உள்ளே இல்லை..!! எங்கே சென்றார்கள் இருவரும்..?? கடவுளே..!! என்ன நடக்கிறது இங்கே..????
எனக்கு ஒருகணம் என்ன செய்வது என்றே புரியவில்லை. குழம்பிப் போனவளாய் அழுகையுடன் நின்றிருந்தேன். அப்புறம் அறைக்கு திரும்பலாம் என்று முடிவு செய்தேன். செல்போனில் அவருக்கு கால் செய்து பார்க்கலாம். எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்கலாம். முடிந்தால் கையும் களவுமாக பிடிக்கலாம்..!! மீண்டும் ஓட்டமும், நடையுமாக எங்கள் அறைக்கு திரும்பினேன். மீண்டும் ஒரு அதிர்ச்சிக்கு உள்ளாகினேன். நான் திறந்தவாறு விட்டுச் சென்ற கதவு இப்போது மூடியிருந்தது.
எனக்கு எதுவும் புரியவில்லை. ஒரு சில வினாடிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தவள், பின்பு தயங்கி தயங்கி கதவின் கைப்பிடியை பற்றினேன். அதை திருகி, கதவை உள்ளே தள்ளினேன். உள்ளே கும்மிருட்டாக இருந்தது. எதுவும் புலப்படவில்லை. ஆனால் ஓரிரு வினாடிகள்தான். திடீரென.. பளீரென.. அத்தனை விளக்குகளும் ஒரே நேரத்தில் ஒளிர்ந்தன..!! பளிச்சென கண்கள் பறிக்கும் ஒளிவெள்ளம்..!! சுருக்கென எனக்கு கண்கள் கூச, நான் இமைகளை இறுக்கமாக மூடிக்கொண்டேன்.
“ஹேப்பி பர்த் டே டூ யூ..!! ஹேப்பி பர்த் டே டூ யூ..!! ஹேப்பி பர்த் டே டியர் பவித்ரா..!! ஹேப்பி பர்த் டே டூ யூ..!!”
என்று கோரஸாக அறைக்குள் இருந்து பாடல் ஒலிக்க, நான் நம்பமுடியாமல் கண்களை திறந்து பார்த்தேன். அறையின் மையத்தில் இப்போது ஒரு டேபிள் முளைத்திருந்தது. அதன் மீது பால் நிறத்தில், பெரிய வட்ட வடிவ கேக். அதற்கு மேலே அவசர அவசரமாய் கட்டப்பட்ட ஜிகினா தோரணம்… பலூன்கள்..!! டேபிளை சுற்றி அவர்கள் நின்றிருந்தார்கள். ஸ்லோமோஷனலில் கைகள் தட்டிக்கொண்டு… உதடுகளை அசைத்து வாழ்த்து பாடிக்கொண்டு..!!
சற்றுமுன் நடந்த சண்டையின் சிறிய சுவடைக்கூட முகத்தில் காட்டாமல், முகமெல்லாம் பூரிப்பாக என் கணவர் அசோக்..!! அவருக்கு அருகிலேயே உற்சாகத்தின் இன்னொரு உருவமாய், வெண்பற்கள் காட்டி க்ளாப் செய்துகொண்டிருந்த லாவண்யா..!! வாட்ச்மேன் தாத்தா.. ரிஷப்ஷனில் இருக்கும் மேனேஜர்.. காலையில் காபி கொண்டு வந்த அந்த பொடியன்.. அறை சுத்தம் செய்ய வந்த அந்த அகல உருவ பெண்மணி.. என் கணவர் சைட் அடித்த அந்த வெயிட்ரஸ்..!! எல்லோரும்..!!!! கைகளை தட்டிக் கொண்டு.. எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பாடலாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
எனக்கு அழுகையே வந்துவிடும் போல இருந்தது.. இதோ.. வந்தேவிட்டது..!! இரண்டு கண்களிலும் நீர் திரண்டு ஓடி வந்து.. என் கன்னம் நனைத்து ஓடியது..!! அழுகையும், சந்தோஷமும், நிம்மதியுமாய் நான் உறைந்து போய் நின்றிருக்க, அந்த லாவண்யாதான் முதலில் என்னை நோக்கி ஓடிவந்தாள்.
“ஹேப்பி பர்த் டே பவித்ரா..!!”
என முகமெல்லாம் உண்மையான பூரிப்புடன் சொன்னவள், என்னை அப்படியே இறுக்கி அணைத்துக் கொண்டாள். என் கன்னத்தில் ஈரமாக முத்தமிட்டாள். என் கணவர் அங்கிருந்தபடியே என்னைப் பார்த்து புன்னகைக்க, நானும் கண்களில் கண்ணீர் மல்க புன்னகைத்தேன். என் கண்களில் இருந்து வழிந்த நீர், லாவண்யாவின் தோளில் பட்டு தெறிக்க, இப்போது நானும் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டேன். ‘ஓ…’ வென பெருங்குரலில் அழவேண்டும் போலிருந்த உணர்வை, கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.
ச்சே..!! இந்த மனம்தான் எவ்வளவு அவசரக் குடுக்கையாக இருக்கிறது..? ஒருவருடன் பழகாமலேயே.. அவரைப்பற்றி அலசி ஆராய்ந்து புரிந்து கொள்ளாமலேயே..!!!
அவள் அந்தமாதிரி சிலையாக நின்று கொண்டிருந்தபோதே, ஒரு பையன் அடித்த பந்து பால்கனி நோக்கி பறந்து வந்தது. அவளுக்கு நேராக..!! அவள் அதை கவனிக்கவில்லை..!! பந்து அவளுடைய தலையில் அடித்துவிடக் கூடாது என்று பதறிய நான், பட்டென என் வலக்கையை நீட்டி அவளுடைய கன்னத்துக்கு சில அங்குல இடைவெளியில் அந்தப் பந்தை பிடித்தேன். அவளோ.. நான் அவளை அறையத்தான் கையை ஓங்கினேன் என்று நினைத்தாளோ என்னவோ.. படக்கென முகத்தை திருப்பியவள், அறை விழாமலே.. விழுந்த மாதிரி தன் கன்னத்தில் கை வைத்து மூடிக் கொண்டாள்.
அவளை இவ்வாறு காயப் படுத்தும் அளவிற்கு அவள் மீது எனக்கென்ன கோபம் என்று கேட்கிறீர்களா..? அவள் மீது எனக்கு பெரிதாக கோபமெல்லாம் எதுவும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால்.. இரண்டு வாரங்கள் முன்பு நடந்த அந்த சம்பவத்தினால், அவள் மீது நான் மனதில் மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தேன். இந்தமாதிரி அவள் பேசும்போதெல்லாம் வழக்கமாக எனக்குள் எழும் எரிச்சல்தான்.. இன்று சற்று எல்லை கடந்துவிட்டது..!! இரண்டு வாரங்கள் முன்பு அசோக் ஆபீசில் எதையோ சாப்பிடப் போக, அது ஃபுட் பாய்சன் ஆகி, வயிறு கோளாறு சீரியசாகி, இரண்டு நாட்கள் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்குமாறு ஆயிற்று.
அந்த இரண்டு நாட்கள் நான் மிகவும் கலங்கிப் போனேன். முதன்முறையாக தாயாகிப் போன மாதிரியான உணர்வு. உடல் மெலிந்து, சோர்ந்து போய், ஹாஸ்பிட்டல் படுக்கையில் சுருண்டு படுத்துக்கொண்டு, என் உள்ளங்கையை தேடிப்பிடிக்கும் என் கணவரை காணும்போது, என் குழந்தையாகத்தான் தோன்றினார் அவர்..!! அவர் தூங்கும் நேரம் எல்லாம் அழுதுகொண்டே இருப்பேன். அவர் கண்விழிக்கும்போது, என் கண்துடைத்து சகஜ நிலைக்கு திரும்ப, மிகவும் சிரமப் படுவேன்.
அந்த மாதிரி நான் கலங்கிப் போயிருந்த நிலையில் இந்த ரேணுகாதான் எனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தாள். ஆபீசுக்கு ஒருநாள் லீவ் சொல்லிவிட்டு, முதல் நாள் முழுவதும் என்னுடனே இருந்தாள். அவருடைய உடல்நிலை பற்றி நான் கவலை கொள்ளும் வேளையில், பணம் ஒரு பிரச்னையாக இல்லாதவாறு பார்த்துக் கொண்டாள். மருந்து வாங்குவதற்கெல்லாம் அவளே அலைந்தாள். என் அருகில் இருந்து என்னை தேற்றியவள், அடுத்தநாள் காலை அத்தையும், மாமாவும் வந்து சேர்ந்த பிறகுதுதான் ஆபீஸ் கிளம்பினாள்.
அந்த சம்பவம் அவளைப் பற்றி நல்ல அபிப்ராயத்தை என் மனதுக்குள் உருவாக்கி இருந்தது. ஆனால்.. மீண்டும் அவர் திரும்பி வந்த ஓரிரு நாட்களிலேயே அவள் பழைய மாதிரி ஒப்பீட்டு பேச்சை ஆரம்பிக்கவும், மறுபடியும் என் மனதை எரிச்சல் அரிக்க ஆரம்பித்திருந்தது. அந்த மாதிரியான பேச்சு கடுமையாக என் மனதைப் பாதித்தது. அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணியே, அவ்வாறு முகத்தில் அறைந்த மாதிரி கேட்டுவிட்டேன்.
ஆனால், கேட்டுவிட்ட பிறகு அவள் முகத்தைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அவசரப் பட்டு விட்டோமோ என்று கூட தோன்றியது. நான் நினைத்ததை விட மிகவும் காயப்பட்டுப் போனாள் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவள் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள், ‘ஸாரி பவி..’ என்று உலர்ந்து போன குரலில் சொல்லிவிட்டு, விடுவிடுவென நடந்து அவள் ஃப்ளாட்டுக்கு சென்றுவிட்டாள்.
அப்புறம் இரண்டு மூன்று நாட்கள் அவள் என் கண்ணிலேயே படவில்லை. எங்கள் வீட்டுக்கும் வரவில்லை. ஆபீசில் இருந்து வந்ததும் அவளுடைய ஃப்ளாட்டிலேயே அடைந்து கிடந்தாள். கோவம் இருக்கும் என்று எனக்கும் புரிந்தது. ‘பாவம்..’ என்று ஒருமனம் நினைத்தாலும், ‘பரவாயில்லை..’ என்று இன்னொரு மனம் சொல்லியது. நான் சொல்லிய விதந்தான் எனக்கு வருத்தத்தை அளித்ததே ஒழிய, சொன்ன விஷயத்தில் எந்த வித தவறும் இல்லை என்றே தோன்றியது. அந்த மாதிரி சமயத்தில்தான் அவள் மீது உச்சபட்ச வெறுப்பை உமிழ்ந்த அந்த சம்பவம் நடந்தது.
அன்று நியூ இயருக்கு முந்தய தினம்..!! காலையில் அவர் ஆபீசுக்கு கிளம்பிய போதே, இரவு சீக்கிரம் வர சொன்னேன். வெளியில் எங்காவது செல்லலாம் என என் விருப்பத்தை சொல்லியிருந்தேன். அவரும் சரி என்றுவிட்டே கிளம்பினார்.
மாலையில் நான் சற்று பரபரப்பாகவே காணப்பட்டேன். அவருடன் ஊர் சுற்றுவது என்பது எப்போதுமே எனக்கு உற்சாகம் தரும் விஷயம். பைக்கில் அவர் பின்னால் அமர்ந்துகொண்டு அவருடைய இடுப்பை வளைத்துக் கொள்வது பிடிக்கும். செல்லுமிடங்களில் அவர் என்னுடைய கணவராக்கும் என்று உரிமையுடன் அவருடைய கையை கோர்த்துக் கொண்டு நடப்பது பிடிக்கும். சீக்கிரமே கிளம்பி ரெடியானேன். அவருக்கு மிகவும் பிடித்த ஒரு காட்டன் புடவையை அணிந்து கொண்டு.. கொஞ்சமாய், திருத்தமாய் அலங்காரம் செய்துகொண்டு.. கூந்தலில் மல்லிகை அள்ளி வைத்து.. வாங்கி வைத்திருந்த கண்ணாடி வளையல்களை அணிந்து கொண்டு.. காத்திருந்தேன் அவருக்காக..!!
அவரிடம் இருந்து கால் வந்தது. ஓடிச்சென்று எடுத்தேன். உற்சாகமும் சந்தோஷமும் பொங்கும் குரலில் கேட்டேன்.