“வி..விடு அன்பு..”
“அந்தாள் மேலயும் எனக்கு கோவம் இருக்கு.. ஆனா இவ பண்ணினதை நெனச்சா..” சொல்லும்போதே அவளுடைய விழிகள் ஆத்திரத்தில் சிவந்தன.
“போ..போதும் அன்பு.. அதையே நெனச்சுக்கிட்டு இருக்காம… சாப்பிடு..!!”
“என்னவோ போடி..!! மனுஷங்க மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சு..!!”
சலிப்பாக சொன்னவள் சாப்பிட ஆரம்பித்தாள். அவள் சகஜமாகிவிட்டதை உறுதி செய்து கொண்டு, நானும் நிம்மதியாக சாப்பிட ஆரம்பித்தேன். சாப்பிட்டு முடித்ததும் அவள் கிளம்பினாள். அப்போதுதான் எனக்கு இன்னொருமுறை அசோக்குடைய செல்லுக்கு முயன்றால் என்ன என்று தோன்றியது. இருவரும் பேசிவிட்டால் ஒரு வேலை முடிந்தது..!! மீண்டும் அவருக்கு கால் செய்தவள், நொந்து போனேன்..!! என்கேஜ்ட்..!!
“அய்யோ.. மறுபடியும் என்கேஜ்டா இருக்குடி..!!”
நான் சலிப்பாக சொல்ல, அன்பு இப்போது அப்படியே முகம் மாறினாள். நெற்றியை சுருக்கி ஒருமாதிரி கூர்மையாய் என்னை பார்த்தாள். சற்றே குறுகுறுப்பான குரலில் கேட்டாள்.
“இவ்ளோ நேரமா அப்டி யார்கூடடி பேசுறாரு..?”
“எனக்கு எப்படி தெரியும்..?” நான் புன்னகையுடன் சொல்ல,
“அதெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கணும் பவி.. ஆபீஸ் விஷயமா இருந்தா ஆபீஸ் போன் யூஸ் பண்ணுவாங்க.. ஃப்ரன்ட்ஸா இருந்தாலும் லஞ்ச் டயத்துல இவ்ளோ நேரமா அரட்டை அடிப்பாங்க..?” அவள் மிக சீரியசாக பேச ஆரம்பித்தாள்.
“ஒ..ஒருவேளை வே..வேற வேற காலா இருக்கலாம்ல..?” நான் தயங்கி தயங்கி சொல்ல,
“ஒருவேளை ஒரே காலா கூட இருக்கலாம்ல..?” அவள் பட்டென கேட்டாள்.
“அ..அன்பு..” நான் திகைத்தேன்.
“நீ கால் பண்றப்போ.. அடிக்கடி இந்த மாதிரி என்கேஜ்டா இருக்குமா..?”
“அ..அடிக்கடி இல்ல.. எப்போவாவது..”
“வீட்டுக்கு வந்ததும் யார்கிட்ட பேசிட்டு இருந்தீங்கன்னு கேட்டிருக்கியா..?”
“இ..இல்லை..!!”
“அதெல்லாம் கேட்டு வச்சுக்கோ.. அவர் மேல ஒருகண் எப்போவும் வச்சுக்கோ.. அசால்ட்டா இருந்துடாத..!!”
“சேச்சே.. நீ நெனைக்கிற மாதிரி அவர்..”
“பவி.. எனக்கு உன் புருஷனைப் பத்தி எதுவும் தெரியாது.. அவரை நான் தப்பா சொல்றேன்னு நெனைக்காத.. இப்போ இருக்குற பொண்ணுகளை அவ்ளோ லேசா எடை போட்டுடாதன்னு சொல்ல வர்றேன்.. உஷாரா இருன்னு சொல்றேன்..!! அவ்ளோதான்..!!”
“ச..சரிடி.. நான் பாத்துக்குறேன்..”
“ம்ம்ம்.. கட்டுன புருஷன் விஷயத்துல.. கூடப் பொறந்த தங்கச்சியே நம்பக்கூடாதுன்றது.. என் அனுபவத்துல நான் கத்துக்கிட்ட பாடம்..!! பாத்துக்கோ.. நான் வர்றேன்..!!”
அவள் சொல்லிவிட்டு கிளம்ப, நான் அப்படியே பொத்தென சோபாவில் அமர்ந்தேன். இருதயம் இப்போது பலமடங்கு வேகத்தில் படபடத்தது. பதறியது..!! மூளையை தாக்கிய சந்தேக வைரஸ் ஒவ்வொரு நரம்பிலும் பரபரவென பரவியது..!! சில நாட்களாய் காணாமல் போயிருந்த அந்த பொசஸிவ் உணர்வு, மனமெங்கும் பொங்கி வழிந்தது. யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்..??? விரல்கள் நடுநடுங்க நான் திரும்பவும் அவருக்கு கால் செய்தேன். காதில் வைத்தேன். என்கேஜ்ட்..!! செல்போனை தூக்கி எறிந்து விட்டு, கண்களை இறுக்கி மூடிக் கொண்டேன்.
இரவு அவர் வந்து சேரும்வரை நான் அதே நினைப்பில்தான் ஆழ்ந்திருந்தேன். வழக்கமாக செய்துகொள்ளும் அலங்காரம் கூட அன்று செய்துகொள்ளவில்லை. ஆனால் அவர் வழக்கத்தை விட நல்ல மூடில் வந்திருந்தார். உள்ளே நுழைந்த வேகத்தில் என் உதட்டை கவ்வி உறிஞ்சிய வேகத்திலேயே அது நன்றாக தெரிந்தது. என்னுடைய மூட் எப்படி இருந்தது என்று உங்களுக்கு தெரியும் அல்லவா..? அவரிடம் இருந்து அரும்பாடுபட்டு விலகிக் கொண்டேன்.
“அப்போ கால் பண்ணினேன்.. என்கேஜ்டாவே இருந்தது..?”
“எப்போ..?”
“மதியம்.. ஒரு மணி இருக்கும்..”
“அது.. நாளைக்கு புனே போறேன்ல..? அங்க இருக்குற சீனியர் மேனேஜர் ஒருத்தர்கிட்ட பேசிட்டு இருந்தேன்..”
“ஆபீஸ் விஷயத்துக்கு ஏன் உங்க செல்போன்ல பேசுறீங்க..?”
“ஏன்..? அதனால என்ன..? இதுக்குலாம் நான் கணக்கு பாக்குறது இல்ல..”
“ஓ..!! சரி.. காபி போடவா..?” நான் அவருடைய பதிலில் திருப்தியுறாமலே கேட்டேன்.
“ம்ம்.. போடு..!!”
காபி கொண்டு வந்து கொடுத்தேன். அவர் சோபாவில் அமர்ந்து, டிவி பார்த்துக் கொண்டே காபி உறிஞ்சினார். நான் அவருக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டேன். ஒரு கையை அவருடைய மார்பில் போட்டுக் கொண்டேன். அவருடைய கவனம் டிவியில் இருக்க, எனது கவனம் அவரது செல்போனில் இருந்தது. உடனடியாய் அதை கைப்பற்ற வேண்டும் போல் இருந்தது. மதியம் யாருடன் பேசிக் கொண்டிருந்தார் என்று அறிந்து கொள்ளவேண்டும் என ஆர்வம் அரித்தது. அவருடைய உடம்பை இதமாக தடவிக் கொடுப்பது போல செல்போன் தேட ஆரம்பித்தேன்.
மேல் பாக்கெட்டில்தான் எப்போதும் இருக்கும்.. இன்று காணோம்..!! கையை மெல்ல கீழே இறக்கினேன். இடுப்பை மெல்ல பிசைந்து கொடுத்தேன். அப்புறம் பேன்ட் பாக்கெட்டை தடவினேன். இன்னொரு பேன்ட் பாக்கெட்..!! செல்போனை காணோம்..!!!! எங்கே வைத்திருப்பார்..? அவரிடமே கேட்டு விடலாமா..? சந்தேகப்படுவாரோ..? சரி.. சந்தேகப்படாதவாறு கேட்கலாம்..!!
“உங்க மொபைல் கொடுங்களேன்.. ஒரு கால் பண்ணனும்..!!”