த்ரியா அதற்கு பின்னர் ஆரூசுக்கு அவ்வப்பொழுது சர்ப்ரைஸ் கொடுத்தாள். ஆரூஸ் தொடர்ந்து அணுவை காண்டாக்ட் செய்ய முயன்று தோல்வி அடைந்தான். இப்படியே ஒரு மாதம் மேல் கழிந்த நிலையில், த்ரியா அடுத்த படத்தில் நடிக்க ஒப்பு கொண்டு ஷூட்டிங் படப்பிடிப்புற்கு சிங்கப்பூர் போனாள்.
ஆருஷுன் போனிற்கு ஒரு தெரியாத நம்பரில் இருந்து அழைப்பு வந்தது.
“ஹலோ ஆருஷ்..” அனுவின் குரல்.
“ஹலோ அனு, என்னாச்சு உனக்கு, நீ எங்கே போயிட்டே”
“எனக்கு ஆக்ஸிடென்ட் ஆயிடிச்சு” சொல்லும் போதே அவள் குரலில் ஒரு நடுக்கம் இருந்தது.
“வாட் என்ன சொல்லுறே அனு?” அவன் பேச்சில் கவலை தெரிந்தது.
“அன்னைக்கு உன்னோட வீட்டுக்கு வந்துட்டு போன ஒரு வாரம் கழிச்சி, ஒரு நாள் நான் வீட்டுல இருந்த வெளியே போனப்போ யாரோ ஒருத்தன் காருல வந்து இடிச்சிட்டு இனிமேல் ஆருஷ் கூட பழகுற வேலை எல்லாம் வச்சிக்காதே மீறி பழகுனா அடுத்த தடவை உயிர் இருக்காதுன்னு சொல்லிட்டு காரை எடுத்துட்டு போய்ட்டான்”
“வாட் என்ன சொல்லுறே அனு, போலீஸ் கம்பளைண்ட் ஏதாச்சும் கொடுத்தியா” ஆருஷ் அதிர்ச்சி ஆனான்.
“எனக்கு பயத்துல என்ன பண்ணுறதுனு தெரியாம ஊருக்கு ஓடி வந்துட்டேன். இப்போ த்ரியா சிங்கப்பூருக்கு போன நிவ்ஸ் பார்த்துட்டு தான் கால் பண்ணினேன்”
“உன்னை பத்தி தெரிய கூடாதுன்னு நெனச்சேன் எப்படியோ அவளுக்கு தெரிஞ்சி போச்சு அனு. என்கிட்டே ரொம்ப நல்லவ மாதிரி சர்ப்ரைஸ் பன்னப்போவே நான் சுதாரிச்சு இருக்கணும் ஒரு வேலை டைவர்ஸ பண்ண போறேன்னு சொன்னதால் இப்படி நடந்துக்குறான்னு நான் தப்பு கணக்கு போட்டுட்டேன்”
“இப்போ என்ன ஆருஷ் பண்ணுறது”
“தெரியல அனு”
“சீக்கிரம் ஏதாச்சும் பண்ணு ஆருஷ், என்னால உன்னை பார்க்காம இருக்க முடியல”
“த்ரியா ரொம்ப கன்னிங் அனு. அவ உன்னை அவளுக்கு போட்டின்னு நெனச்சா ஆளையே காலி பண்ணிடுவா. கொஞ்சம் வெயிட் பண்ணனும்”
“நானும் நினைச்சா அவளை காலி பண்ணிடுவேன்”
“சும்மா விளையாடாதே அனு. அவளை பத்தி முழுசா உனக்கு தெரிஞ்சா இப்படி பேசமாட்டே”
“நான் ஒன்னும் விளையாட்டா சொல்லல ஆரூஸ், சீரியஸா தான் சொன்னேன். சரி இப்போ என்ன பண்ண”
“நான் என்ன பண்ணுறதுனு சொல்லுறேன் அதுவரைக்கும் கொஞ்ச நாளைக்கு இந்த மாதிரியே சேப்டியா இரு”
ஆருஷ் லைனை துண்டித்து விட்டு தீவிர யோசனையில் ஆழ்ந்தான். த்ரியாவின் வில்லத்தனமான முகத்தை பற்றி தெரிந்து இருந்தும் அவளின் சமீபத்திய நடவடிக்கை எல்லாம் அவள் டைவர்ஸுக்கு பயந்து என்று நம்பியதை நினைத்து நொந்து கொண்டான். அனு தனக்கு போட்டி என்று தெரிந்தவுடனே த்ரியா அவளை தீர்த்து கட்டி இருக்க வேண்டும் அப்படி இல்லாமல் அவளை வெறும் ஆக்ஸிடென்ட் மட்டும் செய்து பயம் காட்டுகிறாள் என்றால் கண்டிப்பாக அதற்கு பின்பு ஒரு பெரிய திட்டம் வைத்து இருப்பாள், கண்டிப்பாக அது அனுவுக்கு மட்டும் இல்லாமல் தனக்கும் பெரிய ஆப்பாக இருக்கும் என்று அவனுக்கு தோன்றியது. த்ரியாவின் சூழ்ச்சி வட்டத்தில் தான் சிக்காமல் பாதுகாத்து கொள்ள என்ன செய்யலாம் என்று நினைத்து நினைத்து அவன் தூக்கம் பல நாட்கள் வீணாக போனது.
அந்த நேரத்தில் தான் மச்சிலீக்ஸ் அந்த அந்தரங்க படங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகை த்ரியாவும் அவள் தற்போது நடித்து கொண்டு இருக்கும் ஹீரோவும் கட்டி தழுவி கொண்டு இருப்பது போல ஆரம்பித்து அரை நிர்வாணமாக படுக்கையில் கிடைக்கும் படங்கள் அனைத்தும்.
நடிகை த்ரியா மற்றும் அந்த படத்தின் ஹீரோ இருவரும் மச்சிலிக்ஸ் வெளியிட்ட படங்கள் அனைத்தும் போட்டோஷாப் என்றும் பேட்டி கொடுத்தனர் அதுவும் ஒன்றாக. அதை பார்த்த ஆருஷ் இன்னும் கடுப்பானான். பேட்டியில் சொன்ன அதையே த்ரியா இவனிடம் சொன்னது அவனும் இன்னும் கடுப்பை கிளப்பியது.
உடனே அனுவிற்கு போன் செய்தான்.
“அனு எங்க இருக்க”
“பாண்டிச்சேரி கிட்ட”
“ஐ வாண்ட் டு சீ யூ”
“இப்போவா?”
“எஸ்”
“என்னாச்சு ஆருஷ்”
“நேர்ல சொல்லுறேன், டோன்ட் ஒற்றி அனு என்னை யாரும் பாலோ பண்ணி வராத மாதிரி பார்த்துக்கறேன்”
அனுவை வைத்து செமையாக செய்ய வேண்டும் என்று ஆருஷ் வெறியுடன் செல்ல அங்கே அவனுக்கு ஏமாற்றமே காத்து இருந்தது. அனுவுக்கு இரண்டு கால்களிலும் கட்டு போட்டு இருக்க அவள் வீல் சேரில் இருந்தாள்.
“நான் ஏதோ மைனர் ஆக்ஸிடென்ட்னு நெனச்சேன். நீ இன்னும் இப்படி இருக்கே”
“உன் கிட்ட சொன்னா பீல் பண்ணுவேன்னு தான் ஆருஷ் சொல்லல”
“தனியா எப்படி மேனேஜ் பண்ணுற அனு”
“பக்கத்து வீட்டு ஆன்டி நர்ஸ் தான் அவங்க ஹெல்ப் பண்ணுவாங்க”
“சோ சாரி அனு, என்னாலே தான் உனக்கு இந்த நிலைமை”
“பரவாயில்லை ஆருஷ், த்ரியா பண்ணதுக்கு நீ என்ன பண்ணுவே”
“பண்ணுறது எல்லாம் பண்ணிட்டு பிட்ச் அவ பாட்டுக்கு ஜாலியா தான் இருக்கா”
“நானும் பிக்ஸ் எல்லாம் பார்த்தேன் ஆருஷ், உனக்கு கோவமே வராதா”
“எனக்கு அவ தேவடியா தனம் பண்ணது கூட கோவம் இல்லை அனு, எல்லாம் பண்ணிட்டு நல்லவ மாதிரி நடிக்கிறா பாரு, ஐ ஜஸ்ட் வாண்ட் டு கில் ஹர்”
“அப்படின்னா பண்ணிடு, நான் ஹெல்ப் பண்ணுறேன்” அனு அவனை பார்த்து சொன்னாள்.
அனு ஹெல்ப் பண்ணுறேன் என்று சொன்னதை ஆரூஸ் சீரியசாக எடுத்து கொள்ளவில்லை “இது ஒன்னும் விளையாடற விஷயம் இல்லை அனு” என்றான்.
அனு ஒன்றும் பேசாமல் அவனை பார்த்து கொண்டு இருந்தாள்.
“அப்படியே பண்ணினாலும் நான் தான் முதல் சஸ்பெக்ட்டா இருப்பேன் அனு, ஏன்னா அவளோட மொத்த சொத்துக்கும் நாமினின்னு என்கிட்ட சொல்லி இருக்கா, சொத்துக்கு ஆசை பட்டு கொன்னுட்டேன்னு ஈஸியா போலீஸ் என்னை மடக்கிடுவாங்க”
“ஹ்ம்ம்” என்று தலை ஆட்டினாள்.