என் காதல் கண்மணி 72

வீட்டிற்கு வந்த இருவரும் பெட் ரூமிற்கு வந்தனர்.உடனே ராஜி கட்டிலில் பொத்தென விழுந்து அழ தொடங்கினால்.இதை கண்ட கார்த்திக் சாரி ராஜி என்று சொல்ல வெடுக்கென எழும்பிய அவள் என்ன சாரி நேத்து என்ன சொன்ன உன் நிழல் கூட என்மேல் படாதுன்னு,உரிமையா கிட்ட வந்து உரசுற,தோல் மேல கை போடற.நீ என்ன தொடும் போது எப்படி இருந்துச்சு தெரியுமா.உடல் பூரா அமிலத்தை ஊத்தின மாதிரி இருந்துச்சு.அசிங்கமா இருக்கு நீ இப்படி பண்றதுனு சொல்ல.நா வேணும்னு பன்னல அந்த போடோக்ராபரும்,மகேஷும் சேர்ந்து சொன்னதல தான் அப்படி செய்ய வேண்டியதா போச்சு என்று கூறினான்.அவுங்க சொன்னா நீ இத அவைட் பன்னிருக்கலாம்ள.அது சரி உனக்கும் இதெல்லாம் ஆசைதான.நீ ஏன் சொல்லபோற.ஒரு பொண்ணோட மனச புரிஞ்சிகிட முடியாதவன் தான நி அப்படினு சொன்னால்.

செருப்பால் அடி வாங்கியதை போன்ற வார்த்தைகளை கேட்ட கார்த்திக் அமைதியாக ஒன்றும் சொல்லாமல் கீழே சென்றான்.அங்கு சாப்பாடு செய்து கொண்டிருந்த அவனது அம்மா சாப்பிட சொன்னங்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு மேலே சென்று பெட்ரூமில் சோபாவில் தூங்க சென்றான்.அதற்குள் உடை மாற்றி வந்த ராஜி நேராக அத்தையிடம் சென்று சாப்பாட்டை எடுத்து வைக்க உதவினால்.அப்போது என்னமா போன இடத்தில் எதாவது பிரச்சனையா இவன் ஏன் இப்படி அமைதியாக இருக்கான்.சாப்பாடும் வேண்டாம்னு சொல்லிட்டான்னு சாந்தா கேட்க இல்ல அத்தை ரொம்ப நேரம் அங்க சுத்திருகொமா அதான் அசதியா இருக்கும்.இருங்க நான் என்னனு கேட்டு தைலம் தேச்சு விட்டுட்டு வரேன் என்று சொல்லிவிட்டு ரூமிற்கு சென்றால்.கார்த்திகை பார்த்து ஏன்எ சாப்பிட வரல.என்னால யாரும் சாப்பிடாம இருக்க வேண்டாம்னு சொல்ல கார்த்திக் ஒன்றும் பேசாமல் அவளை பார்த்தான்.அவளிடம் பதில் ஏதும் கூறாமல் கீழே சென்று அம்மாவிடம் சகஜமாக பேசிக்கொண்டு பெயருக்கு சாப்பிட்டான்.கூடவே ராஜியும் அவனுடன் சேர்ந்து ஏங்க கோவில்ல நல்ல தரிசனம்,மணப்பாடு சூப்பரா இருந்துச்சுனு கார்த்திக்கிடம் பேசி கொண்டு இருந்தால்.கார்த்திக்கிற்கு அவள் நடிக்கிறாள் என்பது தெரிந்தாலும் இவனும் அன்னியோன்யமாக இருப்பது போல நடித்தான்.அவர்களை பார்த்த சாந்தா இருவரும் சந்தோசமாக இருப்பதை கண்டு மகிழ்ந்தாள்.

பின் இருவரும் தூங்க சென்றனர்.ராஜி கட்டிலில் படுத்து கொள்ள கார்த்திக் சோபாவில் படுத்து கொண்டான்.கார்த்திக் சிறிது நேரத்தில் தூங்கி விட ராஜி தூக்கமின்றி தவித்தால்.கார்த்திக்கிடம் இன்று நாம் ரொம்ப கோவப்பட்டு பேசி விட்டோமோ என்று வருந்தினால்.அவள் கார்த்திகையே பார்த்து கொண்டிருக்க அவள் நினைவுகள் பின்னோக்கி சென்றது.அப்போது ராஜி 11th படித்து கொண்டிருந்தாள்.அவள் படித்தது ஒரு லேடீஸ் ஸ்கூல்.அதற்கு பக்கத்தில் இருக்கும் இன்னொரு ஜென்ட்ஸ் ஸ்கூலில் படிப்பவன் தான் ரமேஷ்.அவனும் ராஜியும் 8th வரை ஒன்றாக படித்தவர்கள்.ஒரு நாள் பஸ்சில் வரும் போது பார்த்து கொள்ள இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.ஒரு நாள் ராஜேஷ் ராஜியிடம் ப்ரொபோஸ் செய்ய இவளுக்கு என்ன பதில் சொல்வது என்கின்ற குழப்பத்தில் இருந்தால்.ஆனால் அவளுடைய பிரெண்ட்ஸ் அனைவரும் அவளை லவ் பண்ண சொல்ல இவளும் 80 சதவிகிதம் மனதை பறிகொடுத்தாள்.இது சில மாதங்கள் போய் கொண்டிருக்க பஸ்சில் வரும் மற்ற மாணவர்கள் ஒரு நாள் ராஜியை கிண்டல் செய்ய ரமேஷ் அதை தட்டி கேட்க அவனிடம் சரணடைந்தால்.அப்போது இருவரும் 11th சென்றிருக்க காதல் மயக்கத்தில் செல்போன்.மெசேஜ் சாட் என்று தினசரி காதலிக்க அவளுடைய மார்க் குறைந்து போனது.

ராஜி முழுமையாக ரமேஷை விரும்பினால்.அவனும் ராஜியை உயிருக்கும் மேலாக காதலித்தான்.இருவரும் ஸ்கூல் முடிந்து காலேஜில் சேர ராஜி பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ்லும்,ரமேஷ் டிப்ளோமா மெக்கானிகலும் சேர்ந்தனர்.அவர்களுக்கு இரண்டு வருடங்கள் செல்லும் வரை எந்த பிரச்சனையும் இல்லை.அப்போது தான் ரமேஷ் வேலைக்கு செல்லும் நேரம் அவனுக்கு திருமணம் செய்ய அவனது பெற்றோர்கள் முடிவெடுத்தனர்.ரமேஷின் குடும்பம் கோடிகளில் கொழித்தவர்கள்.அவனுடைய அப்பாவிற்கு மொத்தம் 7 தங்கைகள்.அவர்கள் தங்களது பெண்ணிற்கு தான் ரமேஷை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஒன்றுகூடி முடிவெடுத்து அண்ணனிடம் பேச அண்ணனும் ஒத்துக்கொண்டார்.அப்போது ரமேஷ் ராஜியை காதலிப்பதை கூறி கல்யாணத்தை நிறுத்துமாறு கூற அவனுடைய அப்பா மறுத்து விட்டார்.இதனால் மனமுடைந்த ரமேஷ் பொய்சன் சாப்பிட அவனை தக்க சமயத்தில் காப்பாற்றினர்.

இங்கோ ராஜியின் விஷயம் அவள் அக்காவிற்கு தெரிய வர ராஜியை கண்டித்திருகிறாள்.இதை ரமேஷிடம் கூற அவன் ப்ரியாவிடம் தான் பேசி சரி பண்ணுவதாக உறுதி அளித்திருந்தான்.அதை உடனே செயல் படுத்தவும் செய்தான்.ப்ரியாவிற்கு போன் செய்து தான் ராஜியை காதலிப்பதாகவும் அவளும் என்னை விரும்புவதாகவும் எங்களை சேர்த்து வைக்க உதவுங்கள் என்று கேட்டான்.அவள் ஒரே பிடியாக மறுத்துவிட்டால்.

அவனும் டெய்லி கால் செய்து அவளை கேட்க அவளோ அவனை பிளாக் செய்து விட்டால்.அவனும் வேறு வேறு நம்பர்களில் இருந்து அவளிடம் பேச.ரமேஷின் அக்காவோ தன் தம்பி விஷம் சாப்பிட ராஜிதான் காரணம் என்றும்,அவனை அவள் ஹாஸ்பிடல் வந்து ஒருதடவையாவது பார்த்தாளா என்று அவளிடம் சண்டை போட அவளோ கார்த்திக்கிடம் இதை கூறி அவனிடம் பேச சொன்னால்.

கார்த்திக் ரமேஷிற்கு கால் செய்து நடந்தவற்றை கூற ரமேஷ் ஆமாம்.எனக்கு கல்யாணத்துக்கு பேசி வீட்ல ஏற்பாடு பண்றாங்கன்னு ராஜிட்ட சொல்றேன் அவ எந்த பதிலும் சொல்ல மாட்டேன்றா.அவ என்னை ஏமாத்திடுவாலோன்னு பயமா இருக்கு.அதான் எங்க அக்கா அப்படி பேசிட்டனு சொன்னான்.அதற்கு கார்த்திக் உன் லவ் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா.முதல்ல ஒரு பொண்ண லவ் பண்ணிங்கன்னா அவளோட சேர்த்து அவ குடும்பத்தையும் சேர்த்து நேசிங்க.நீ விஷம் குடிச்ச உடனே அவ ஏன் உன்ன வந்து பாக்கணும்.நீ விஷம் குடிச்சதால சின்னதா இருந்த பிரச்சனை இப்ப பெருசாகிடுச்சு தெரியுமா.அவ வீட்ல அவளுக்கு அக்கா,தங்கச்சின்னு ரெண்டு பேரு இருக்காங்க.அவுங்கள விட்டுட்டு உன்ன பாக்க ஓடி வந்து இருக்க சொல்றியா.அவ அக்காக்கு எதுக்கு தேவை இல்லாம டிஸ்டர்ப் பண்ற.அவளுக்கு உன்ன சும்மாவே பிடிக்காது.இப்ப உன்ன சுத்தமா வெறுக்க ஆரம்பிச்சிட்டா.பர்ஸ்ட் நீ நல்ல வேலைக்கு போ.உனக்கும் அவளுக்கும் 24,23 வயசு வரும்போது வந்து சொல்லுங்க நாங்க இன்னும் லவ் பண்றேன்னு.அப்ப நானே உங்கள கூட்டிட்டு பொய் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்ல சரி நான் உங்கள நம்புறேன் இவ்ளோ சொல்றிங்க நான் உங்கள மதிக்கிறேன்னு சொன்னான்.

கார்த்திக் இதில் தலையிட்டு பேசியது இருவர் வாழ்விலும் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போவதை அறியாமல் போனை துண்டித்தனர்.

கார்த்திக்கிடம் பேசிய ரமேஷ் அவனுடைய அப்பாவிடம் சென்று தனக்காக ராஜியின் வீட்டிற்கு சென்று அவளுடைய அப்பாவிடம் பேசும்படியும் ராஜி இல்லாமல் தான் செத்து விடுவதாகவும் கூறினான்.மகனின் இந்த வார்த்தையை கேட்ட அவனது அப்பா அவனுக்காக ராஜியின் அப்பாவிடம் சென்று பேசினார்.இருவரும் ஒரே ஜாதி என்பதால் மறுப்பு ஏதும் சொல்ல மாட்டார் என்று நினைத்துகொண்டு சென்றவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.மூத்த மகள் இருக்கும் போது இளையவளுக்கு முடித்தால் நன்றாக இருக்காது அதனால் மூத்தவளுக்கு முடிந்த பின்பு பார்க்கலாம்.இன்னும் நான்கு வருடம் கழித்து வாங்க பாக்கலாம் என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார்.மகனினின் வாழ்க்கையை மனதில் கொண்டு அவர்கள் வீட்டில் ஒத்துக்க மாட்டேன்றாங்க,அவுங்க உறுதியான பதிலா சொல்ல மாட்டேன்றாங்க.நீ அவளை மறக்குறது தான் ரெண்டு குடும்பத்துக்கும் நல்லதுனு சொல்லி விட்டார்.இதை கேட்டு கொண்டிருந்த அவனது அத்தைகள் இந்த சந்தர்பத்தை சரியாக பயன்படுத்தி கொண்டு அவர்களுடைய மகள் ஒருவருக்கு ரமேஷை திருமணம் செய்து வைக்க சொல்லி அவரை கட்டாய படுத்த அவரும் வேறு வழி இல்லாமல் ஒத்துகொண்டார்.

ராஜியின் அக்கா அவனை வெறுப்பதாக சொன்னதை ராஜிதான் தன்னை வெறுப்பதாக தவறாக புரிந்து கொண்ட ரமேஷ் அவள் தன்னை ஏமாற்றி விட்டாள் என்று அவளிடம் மேற்கொண்டு பேசாமல் இருந்து விட்டான்.அடுத்த வாரமே அவனுக்கு நிச்சயம் செய்யப்பட்டு அதற்கடுத்த வாரம் திருமணம் முடிவானது.திருமணத்திற்கு முந்தின நாள் இரவு கால் செய்து எனது அப்பாவிடம் பேசி நான் சம்மதம் வாங்குகிறேன் ப்ளீஸ் நீ கொஞ்சம் வெயிட் பண்ணு.எனக்கே இப்பதான் உன்னோட மேரேஜ் விஷயமே தெரியும்.ப்ளீஸ் என்று அழுது கொண்டே அவனிடம் பேச எல்லாம் கை மீறி போய் விட்டதாகவும் இவ்வளவு நாள் பேசாதவ இப்ப பேசி என்ன பண்ண.விடு மறந்துடலாம்.என்று கூறி கட் செய்து விட்டான்.மறுநாள் இருபதை கடந்த ரமேஷுக்கும் இருபதை தாண்டாத அவனது முறைபெண்ணுக்கும் திருமணம் முடிந்தது.அவனுடைய அத்தைகளுக்கு தங்கள் குடும்ப சொத்தை தங்கள் குடும்பமே அனுபவிக்கலாம் எவருக்கும் பங்கு கொடுக்க வேண்டாம் என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இங்கு ராஜியோ இரண்டு நாட்களுக்கு யாரிடமும் பேசவில்லை.சரியாக சாப்பிடவில்லை.அவள் இயல்பு நிலைக்கு வர இரண்டு மாதங்கள் ஆனது.கார்த்திக்கால் தான் இவ்வளவு பிரச்சனையும் என்று அவனை வெறுக்க ஆரம்பித்தவள் இன்று வரை வெறுக்கிறாள்.பின்பு ஒரு வருடத்தில் அவளுடைய படிப்பு முடிய வீட்டில் இருந்து கொண்டு அம்மாவிற்கு உதவியாக சிறு வேலைகள் செய்வது தையல் என்று நான்கு வருடங்களை ஓட்டினால்.அந்தநேரம் தான் அவளுடைய அக்காவிற்கு திருமணம் முடிந்திருக்க அடுத்து இவளுக்கு வரன் தேடும் படலம் நடை பெற்று கொண்டிருக்க அந்த நேரம் கார்த்திக்கும் highways department ல் ஜூனியர் இஞ்சினியராக வேலை பார்த்து கொண்டிருந்தான்.