என் காதல் கண்மணி 3 58

ஒன்னும் இல்லனா சின்னப்பசங்க.போய்ட்டாங்க.நான் குளிச்சிட்டு வரேன்.

ம்ம்ம் சீக்கிரம் வா.பசிக்குது.என்று சொல்லிவிட்டு பேசினில் கைகழுவ சென்றான்.அப்போது உள்ளே வந்த ராஜி உள்ளே கார்த்திக்கை பார்த்ததும் சிரிப்பாக வந்தது அவளுக்கு.

வெறும் பனியன் மற்றும் பெர்முடாஸ் போட்டுகொண்டு தலையில் துண்டை கட்டிக்கொண்டு சமையல்ல உன்னை அடிச்சிக்க ஆளே இல்லடா.தெருவையே மணக்க விடுற.உன் பொண்டாட்டிக்குதான் அந்த கொடுப்பினை இல்லை.

இதை கேட்ட ராஜிக்கு நிஜமாலுமே சிரிப்பு கைகளை கட்டிக்கொண்டு பல்லை கடித்துக்கொண்டு சிரிப்பை அடக்கினாள்.ஆனாலும் அவள் உதடு சத்தமில்லாமல் புன்னகைத்து. கைகளை கட்டிக்கொண்டுஎ அவனை பார்த்து சிரித்து கொண்டிருந்த ராஜியை கார்த்திக் பார்த்துவிட்டான்.

ஆனால் கார்த்திக்குக்கு எந்தவித அதிர்ச்சியும் இல்லை.அவளை பார்த்ததும் ம்ம்ம் வந்துட்டியா.என்னடா கொஞ்ச நாலா ஆளையே காணோம்னு பார்த்தேன்.

அவனை பார்த்து கைகளில் போனை இறுக்கமாக பிடித்துக்கொண்டிருந்த ராஜி என்ன இது நம்மள பார்த்து ஷாக் ஆகாம இப்படி பேசுறான்.ஒருவேளை சக்தி உளறிட்டாலோ.இல்லையே நம்மகிட்ட சொல்லமாட்டேன்னு பிராமிஸ் பண்ணினாலே.இல்ல மெண்டல் கிண்டல் ஆகிட்டானோ.சரி என்ன நடக்குதுன்னு பார்ப்போம் என்று அதே சிரிப்பு மாறாமல் அப்படியே நின்றிருந்தாள்.

ப்ப்ப்ப்ப்பா அப்படி மட்டும் பார்க்காத.என்னோட ரெத்த ஓட்டம் எல்லாம் நொடிக்கு நூறுமுறை தலைக்கும் காலுக்கும் போகுது.

ராஜியிடம் எந்த மாற்றமும் இல்லை.

சரி இப்ப உன்ன எப்படி போகவைக்கிறதுனு எனக்கு தெரியும் என்று சொல்லிக்கொண்டே சட்டென்று அவளது தலையை பிடித்து அவளது உதடுகளை சிறை பிடித்தான்.

இந்த திடீர் தாக்குதலில் ராஜி நிலைகுலைந்து தான் போனாள்.

கார்த்திக் தன் பலம் கொண்ட மட்டும் அவளை இழுத்து வைத்ததில் அவளால் விடுபட முடியவில்லை.

சட்டென்று தன் கையில் இருந்த போனை எடுத்து தரையில் உடைத்துவிட்டு தன் இரு கைகளாலும் அவன் மார்பை பிடித்து தள்ளினாள்.

விலகிய கார்த்திக்கிற்கு அப்போதுதான் எல்லாம் புரிந்தது.இது கணவில்லை நிஜம்.

ஐ ம் சோ சாரி.ஐ ம் சோ சாரி.நான் வேணும்னே பண்ணல.சாத்தியமா.ஐயோ.ச்ச என்று வேகமா கையை அருகில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் குத்தினான்.

அவனது இந்த செய்கை ராஜியை ரொம்ப மிரட்சி அடைய செய்தது.ஒரு நிமிடம் அவனை பார்த்து பயந்தே போய்விட்டாள்.

அவனது முதல் முத்தம் ஒரு மிரட்சி என்றால் இரண்டாவது செய்கை மேலும் மிரட்சி.

சட்டென்று அவன் கைகளை பற்றியவள் தன் கர்சீப்பை எடுத்து அவன் கைகைளை இழுத்து வா ஹாஸ்பிடலுக்கு போகலாம்.வா என்று அழுதாள்.

இல்ல நீ மன்னிச்சிட்டேன்னு சொல்லு.ப்ளீஸ்.நான் வேணும்னே பண்ணல.நம்பு ராஜி.சாத்தியமா.

அதை பத்தி அப்றமா பேசிக்கலாம்.ப்ளீஸ் வா என்று அவன் கைகளை பிடித்துக்கொண்டு அழுதாள்.

பின் இருவரும் ஹாஸ்பிடல் சென்று கண்ணாடி சில்லுகளை அகற்றி காயத்திற்கு மருந்து போட்டு வெளியே வந்தனர்.

வீட்டிற்கு வந்த ராஜி பர்ஸை வீசி விட்டு என்னடா ஓவரா சீன் போடுறியா.நல்லா இழுத்து வச்சி கிஸ் பண்ணிட்டு.ஒன்னும் தெரியாத நல்லவநாட்டும் கண்ணாடியை உடைக்கிற.சாரி கேக்குற.என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது.நீ கிஸ் பண்ணும்போது எனக்கு அப்படியே செத்திடலாம் போல இருக்கு.என்று வாயை பொத்திக்கொண்டு அழுகையை அடக்க முடியாமல் தரையில் கைகளால் அடித்தாள்.

ராஜி ப்ளீஸ் ராஜி புரிஞ்சிக்கோ.நான் எதுவும் பிளான் பண்ணி செய்யலை.நீ போனதுக்கு அப்றம் இதே மாதிரி நீ இருக்க மாதிரி கனவா வந்துச்சு.அதே மாதிரிதான் இதுவும்னு நினைச்சுத்தான் அப்படி நடந்துட்டு.சாரி ப்ளீஸ்.

ஒன்னும் பேசாத அன்னைக்கு எவலோ பேசுனா என் நிழல் கூட உன்மேல படாதுன்னு.உனக்கு உடம்பு சுகம்தான் வேணும்னா அன்னைக்கே சொல்லிருக்கலாம்ல.இனி உன்கூட ஒரே ரூம்ல உன்ன நம்பிஏ எப்படி என்ன படுக்க சொல்ற.

இந்த வார்த்தையை கேட்ட கார்த்திக் will u stop that nonsense. என்று கத்திவிட்டு அவன் கைகளுக்கும் ராஜியின் கன்னத்திற்கும் ஒரு இன்ச் இடைவெளியே இருந்தது.

ராஜி முகத்தை திருப்பிவிட்டு அப்படியே சிலையாக முட்டிகால் இட்டு இருந்தாள்.

அங்கு ஒரு முடி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு அமைதி நிலவியது.

இப்ப சொல்றேன் கேட்டுக்கடி.இந்த நிமிஷத்துல இருந்து உன்ன நான் லவ் பன்னலடி.சத்தியமா சொல்றேண்டி உனக்கு நான் கொடுத்த எதிர்பாராத அந்த முதல் முத்தம் போதும்டி.என் வாழ்நாள் முழுக்க.என்ன போது.இதை சொல்லும்போது அவன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

நான் இனி நம்ம ரூம்க்கு பக்கத்துல இருக்க ரூம்ல படுத்துகிடு்றேன்.நம்ம ரூம்ல இருக்க பாத்ரூம் கூட இனி நான் யூஸ் பண்ணமாட்டேன்.இனிமேல் நீ இருக்க திசைப்பாக்கம் கூட நா தலைவச்சி படுக்க மாட்டேன்.அப்புறம் ஏதோ சொன்னியே உடம்பு சுகம்னு.மனசுல ஒருத்திய நினைச்சுகிட்டு இன்னொருத்தி கூட படுத்துட்டு அந்த ஒருத்திய கற்பனை பண்ணிட்டு செய்றது பேருதான் தான் உடம்பு சுகம்.அப்படி உன்ன மனசுல நினைச்சிட்டு இன்னொருத்தியை தேடி போயிருந்தா நா உன்கிட்ட நின்னு இப்படி பேசிட்டு இருக்க மாட்டேன்.இந்நேரம் அவளோட ஒருபிள்ளையே பிறந்திருக்கும்.என்காதல டீசெண்டா சொல்லணும்னு ஆசைப்பட்டேன்டி.இவ்ளோ கேவலமா சொல்ல வச்சிட்டியேடி.ச்சி.

நெருப்பை உமிழ்ந்தவன் போல் பேசிவிட்டு மாடிக்கு சென்று தனது ட்ரெஸ்,திங்ஸ் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு பக்கத்து ரூமிற்கு சென்றான்.சடாரென்று கதவை சாத்திவிட்டு வெளிறினான்.
சடாரென்று கதவை சாத்திவிட்டு வெளியேறிய கார்த்திக் ஆபீஸ் சாவியை மகேஷிடம் வாங்கி கொண்டு ஆஃபீசிற்கு பின் பக்கம் இருக்கும் கோடௌன்க்கு சென்றான்.

கதவை லாக் செய்துவிட்டு அங்கு போடப்பட்டிருந்த கட்டிலில் படுத்தான்.மனம் இரும்புக்கலனை போல் கொதித்து கொண்டிருந்தது.

என்ன வார்த்தை சொல்லிட்டா.உடம்பு சுகத்துக்கு அளிர்வான
அலையிறவனா நான்.ச்ச.நினைச்சு பார்க்கவே அருவருப்பா இருக்கு.இந்த ஒரு மாசத்துல என்ன பத்தி கொஞ்சம் கூடவா புரிஞ்சிக்கல.

நேரம் ஆக ஆக அவனுக்கு கோவம் அதிகமாக ஏறியது.ஆனால் அவன் மனம் ஒன்றை மட்டும் திரும்ப திரும்ப சொல்லியது.அவள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் கோவத்தில் சொல்லியது என்றும் மனதில் இருந்து வந்தது அல்ல என்று.

அதே போல அவன் காதல் செத்துப்போச்சு என்று சொன்னதும் கோவத்தில்தான் ஒழிய மனதில் ராஜியின் மீதான காதல் ஒருபோதும் அழியாது.

இவ்வாறு பலவிதமான சிந்தனைகளில் எப்படி உறங்கினான் என்று அவனுக்கே தெரியாது.மீண்டும் எழுந்து பார்க்கையில் மணி ஏழாகியிருந்தது.இப்போது அவனது கோவம் தணிந்திருந்தாலும் அவள் கூறிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருந்தது.

இனிமேல் முடியாது சரக்குதான் இதுக்கு ஒரே வழி என்று முடிவு செய்து போனை எடுத்து மஹேஷிற்கு கால் செய்து ஆஃபீஸ் குடவ்னிற்கு வர சொன்னான்.