என் காதல் கண்மணி 2 60

நான் என்ன பண்ண.போன் பண்ணாங்க.நீ எங்கன்னு கேட்டாங்க.உடம்பு சரி இல்லன்னு சொன்னேன்.நம்ம வீட்ல வேற ஆள் இல்லையா.அதான் உன்னை அங்க கூட்டிட்டு வர சொன்னாங்க.சரி உனக்கு இஷ்டம் இல்லனா விடு.நான் கால் பண்ணி அவளுக்கு வர விருப்பம் இல்லனு சொல்லிடுறேன்.

ஒன்னும் பண்ண வேண்டாம்.அதான் எனக்கு இப்ப.சரி ஆகிடுச்சுல்ல.ஓஹோ நான் இங்க இருக்குறது உனக்கு தொந்தரவா இருக்குன்னு சொல்லு.நான் இங்க இல்லனா தண்ணி அடிக்கலாம்.ஜாலியா இருக்கலாம்னு பிளான் பண்ற அப்படித்தான.

அப்பா செம ஷார்ப் நீ.கிளம்பலாமா.ரெண்டு நாளைக்கு தேவையான டிரஸ் எடுத்து வச்சுக்கோ.
ஹாபன் ஹவர்ல கிளம்பனும்.நான் பிரெஷ் ஆகிவிட்டு வந்துடுறேன்னு சொல்லிவிட்டு குளிக்க சென்றான் கார்த்திக்.

பின் இருவரும் ராஜியின் அம்மா வீட்டுக்கு காரில் சென்றனர்.மாப்பிள்ளையும் பொண்ணும் வருவதை பார்த்த லட்சுமிக்கோ ரொம்ப சந்தோசம்.இருவரையும் வரவேற்று குடிக்க டீ கொடுத்தாள்.

என்ன திடீர்னு ரெண்டு பேரும் வந்துருக்கீங்க.இவள் வேறு துணி எல்லாம் கொண்டு வந்துருக்கா.என்ன ஆச்சு என்று கேட்டாள்.

அது ஒன்னும் இல்லை அத்தை அப்பா அம்மா ரெண்டு பேரும் காசி போயிருக்காங்க.நான் வேற ஆபிஸ் போய்டுவேன்.வீட்ல இவள் மட்டும் தனியா இருப்பா.ரெண்டு நாளைக்கு முன்னாடி இவளுக்கு உடம்பு சரி இல்லை.அதான் அவுங்க வரும்வரைக்கும் ராஜி இங்க இருக்கட்டும்னு தோணுச்சு.ஏன் அவள் இங்க இருக்க கூடாதா.

அப்பா அம்மா காசி போனது எனக்கு தெரியாதுப்பா.அதுவும் இல்லாம இது அவள் பொறந்த வீடு எப்ப வேணும்னாலும் அவள் இங்க வரலாம்.அவள் இல்லாம நீ சாப்பாட்டுக்கு அங்க தனியா என்ன பண்ணுவ

அதெல்லாம் நான் சமாளிச்சுப்பேன் அத்தை.நீங்க என் பொண்டாட்டிய நல்லா பாத்துக்கோங்க.அது போதும்.

அங்கு நடந்ததெல்லாம் பார்த்து கொண்டிருந்த ராஜிக்கு அப்போதுதான் எல்லாம் புரிந்தது.அம்மாவுக்கு எந்த விஷயமும் தெரியாது என்று.கார்த்திக் தனக்காகத்தான் எல்லாம் செய்கிறான் என்று உணர்ந்தாள்.

நானும் அதான்மா சொன்னேன்.எனக்கு ஒன்னும் பயம் இல்லை.நான் இருந்துப்பேன்னு.இவன்தான் கேக்க மாட்டேங்குறான்.

ஏய் அது என்ன இவன்,அவன்னு சொல்லிட்டு.அவனை மரியாதையா பேசுடி.சின்ன வயசுல அப்படி கூப்பிட்ட.இப்பவும் அப்படியேவா இருப்ப

அத்தை அவள் அப்படியே கூப்பிடட்டும்.இதுல என்ன இருக்கு.அதுவும் இல்லாம அவ அப்படி கூப்பிடுறதுதான் எனக்கும் பிடிச்சுருக்கு.

சரிப்பா.இருந்து சாப்பிட்டுட்டு தான் போகணும்.முன்னாடி மாதிரி வந்ததும் ஓடிடாத.சரியா என்று சொல்லி விட்டு சமயல் செய்ய துவங்கினாள் லட்சுமி.

கார்த்திக்கை பார்த்த ராஜி என்ன சீன் போட்ரியா.நான் உன்னை கேட்டேனா.எனக்கு இங்க இருக்க பிடிக்கலை எங்க அம்மா வீட்டுல கொஞ்ச நாள் இருந்துட்டு வரேன்னு
.இப்படி எல்லாம் செஞ்சி என்கிட்டே நெருங்கலாம்னு நினைக்காத.உடம்பு சரி இல்லாம இருந்தேன்.நீ ஹெல்ப் பண்ண.அதுக்கு தேங்ஸ்.

சரி.வேற எதாவது இருக்கா.

எதாவது சொல்லு.கோவப்படு.உன்னை எவ்ளோ இன்சல்ட் பண்றேன்.உனக்கு என்மேல கோவமே வராதா.

ஏன் கோவப்படணும் ராஜி.நான் பண்ணினதுக்கு நான் அனுபவிக்கிறேன்.நீ என்கிட்டே அந்நியோன்யமா பாசமா இருந்தா கூட எனக்கு இவ்ளோ சந்தோசமா இருக்குமான்னு எனக்கு தெரியல.ஆனால் நீ இப்படி சிடு சிடுன்னு பேசுறது,கோவப்படுறது இது தான் எனக்கு சந்தோசமா இருக்கு.இன்னும் உன்கிட்ட இதே மாதிரி நிறைய எதிர் பார்க்கிறேன்.

அப்போது அவனுக்கு போன் வர அதை எடுத்து கொண்டு வெளியே சென்றான் கார்த்திக்.

ரொம்ப அழகா நடிக்கிறான்.இப்படி பேசி பேசியே கவுத்துடுவான்.விழுந்துடாத ராஜி.திரும்பவும் லவ் கிவ்வுன்னு கஷ்டப்படாத என்று அவள் மனம் எச்சரித்தது.அதன் பின்பு சாப்பிட்டுவிட்டு அவன் கிளம்ப போவதற்கு முன் கார்த்திக் தன்னுடைய கிரெடிட் கார்டை எடுத்து ராஜியிடம் கொடுத்து விட்டு சென்றான்.
அவனுடைய கிரெடிட் கார்டை ராஜியிடம் கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்தான் கார்த்திக்.

வரும் வழி எங்கும் அவனுக்கு ராஜியின் நினைவாகவே இருந்தது.அவள் இல்லாத இனி வரும் நாட்களை எவ்வாறு கழிக்க முடியும்.

ச்ச மடையா மடையா.ஏன்டா அவளை கொண்டு போய் விட்டுட்டு வந்த.மெண்டல் மெண்டல்.அவள் இல்லாமல் என்ன செய்ய போற.

அவகூட சண்டை போட்டுட்டு இருந்தால் கூட சந்தோசமா இருக்கும்.அவளே இல்லனா.எனக்கு வேணும்.பெரிய இவனாட்டும் கொண்டு போய் விட தெரிஞ்சுதுல.இப்ப அனுபவி என்று தன்னை தானே கடிந்து கொண்டான்.

இங்கோ ராஜியின் வீட்டில் அவள் மாடியில் உள்ள ரூமில் இருந்து தனியாக யோசித்து கொண்டிருந்தாள்.

அப்போது அவளுடைய தங்கை சக்தி அவள் முதுகில் தொட அப்போது தான் சுயநினைவுக்கு வந்தவளாய் திரும்பினாள் ராஜி.

என்ன மேடம் வீட்டுக்காரனை விட்டு இருக்க முடியலையோ.ஒரே சிந்தனையை இருக்கு.

ஆமாடி.அவன் நினைப்பாவே இருக்கு.அங்க தனியா இருந்து பாவம் என்ன கஷ்டப்படுவனோ.

அப்பா புருஷன் மேல எவ்ளோ அக்கறை.முடியல

ஹேய் என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது. நக்க.லா.நாளைக்கு உனக்கும் கல்யாணம் ஆனா தெரியும் என் பீலிங்.

தான் நடிக்கிறோம்னு எந்த வகையிலும் சக்திக்கு தெரிந்துவிடக்கூடாது என்று தெளிவாக இருந்தாள் ராஜி.அதற்கேற்றார் போல் முகத்தையும் சோகமாக வைத்து கொண்டாள்.

இங்கு வீட்டிற்கு சென்ற கார்த்திக் கதவை திறந்து விட்டு லைட்டை ஆன் செய்தபோது அங்கு சோபாவில் ராஜி கோவமாக அவனை முறைத்து கொண்டிருந்தாள்.

வீட்ல பொண்டாட்டிய தனியா விட்டுட்டு எங்க இவ்ளோ நேரம் ஊர் சுத்திட்டு வர.நீயெல்லாம் எப்படித்தான் லவ் பண்ணினியோ.

ஹே இப்பதான் உன்ன உங்க வீட்ல விட்டுட்டு வந்தேன்.அதுக்குள்ள நீ இங்க எப்படி.

என்ன விரட்டி விடுறதுலையே குறியா இரு.போடா உனக்கெல்லாம் நான் செட்டே ஆகமாட்டேன்.போடா என்று சொல்லிவிட்டு கிட்சன் பக்கம் சென்றாள் ராஜி.

ஹேய் ராஜி நில்லு.ஐ ஆம் சாரி.ஒரு நிமிஷம் நில்லு.ப்ளீஸ் என்று ஓடிச்சென்ற கார்த்திக் அவள் கைகளை பிடிக்க அவன் கைகள் காற்றில் பறந்து விழுந்தது.

அவன் கண்களை கசக்கி கொண்டு பார்க்க அங்கு யாரும் இல்லை.டைனிங் டேபிளில் இருந்து அவன் யோசிக்க தொடங்கினான்.அது பிரம்மை என்று தெரிய சில வினாடிகளே தேவை பட்டது.

நிஜமாவே நீ கார்த்திக்கை லவ் பண்றியா அக்கா

இது என்னடி புதுசா கேக்குற.அவன் என் புருஷண்டி.அவனை லவ் பண்ணாம வேற யாரை நான் லவ் பண்ண போறேன்.

இல்லக்கா நீ இன்னும் அந்த ரமேஷ லவ் பண்றியோன்னு சின்ன சந்தேகம்.அதான் கேட்டேன்.

லூசாடி நீ.அவனுக்கு எப்போ கல்யாணம் ஆச்சோ அப்பவே நான் அவனை மறந்துட்டேன்.அப்பறம் எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.இப்ப போய் நான் இன்னொருத்தன மனசுல நினைச்சுட்டு இருந்தா அது எவ்ளோ பெரிய கேவலம்.

அப்ப ஏன் நீயும் கார்த்திக்கும் வீட்டுக்கு வந்த உடனே அம்மா கிச்சன் உள்ள போனதுக்கு அப்பறம் சண்டை போட்டிங்க.

நாங்க எப்படி சண்டை போட்டோம்.சும்மா தேவை இல்லாம உலராத.

நாங்க ரெண்டு பெரும் பேசுனது இவளுக்கு எப்படி தெரியும்.சரி எதுவா இருந்தாலும் சமாளிப்போம் என்று எண்ணினாள் ராஜி.

அக்கா நான் உளறலை.நீதான் ஏதோ மறைக்கிற.நீங்க ரெண்டு பேரும் பேசினதல் நான் கேட்டேன்.மறைக்காம சொல்லு உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன பிரச்சனை.

ஏய் புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும் அதெல்லாம் உன்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது.

சரி என்கிட்ட சொல்ல வேண்டாம்.அம்மாகிட்ட சொல்லு.நான் அம்மாகிட்ட உங்க ரெண்டு பேருக்கும் எதோ பிரச்சனையாம் அதான் கார்த்திக் உன்னை இங்க விட்டுட்டு போறான்னு சொல்லிடுறேன்.நீ அம்மாகிட்ட பேசிக்கோ

ஏய் லூசு.அப்படி எதுவும் பன்னி தொலைச்சிடாதடி.எங்களுக்குள்ள ஒரு பிரச்சனையும் இல்ல.என்ன கொஞ்ச நேரம் தனியா விடுறியா.ப்ளீஸ்

அப்ப என்ன பிரச்சனைனு சொல்லு.

ஒரு தடவை சொன்னா புரியாது உனக்கு.போடி.

நீ சரிபட்டு வரமாட்ட.அம்ம்ம்ம்ம்ம்மா.

ஹேய் கூப்பிடாத.சொல்லி தொலைக்கிறேன்.என்று அவள் வாயை பொத்தினாள் ராஜி.

யாரிடமாவது மனசுவிட்டு பேசினாள் நல்லா இருக்கும்.அதை இவளிடமே இப்போதைக்கு சொல்லி விடலாம் என்று ராஜிக்கு தோன்றியது.

சொல்லு

மௌனமாக இருந்த ராஜியின் கண்களில் நீர் சுரக்க தொடங்கியது.

அக்கா.சொலுக்க்க்க்க்க் என்று அவளை திருப்பிய ஷக்தி அவள் அழுவதை கண்டு ஏன்க்கா அழகுற என்று கேட்டாள்.

அவள் மார்பில் சாய்ந்து மேலும் விசும்பி விசும்பி அழுக ஆரம்பித்தாள்.