என் காதல் கண்மணி 2 60

ராஜி அவன் வராததை கண்டு திரும்பி பார்க்க கார்த்திக் அங்கு சாப்பாடை காலி செய்து கொண்டிருந்தான். அதை பார்த்த ராஜிக்கு கோவத்துடன் சிரிப்பும் சேர்ந்து வர வேகமாக சென்று டைனிங் டேபிளில் அவனுக்கு எதிரே உக்கார்ந்து கொண்டு இங்க ஒருத்தி உடம்பு சரி இல்லாம இருக்காளே.அவளை சாப்பிட சொல்லாம இப்படி சாப்பாட்டை புல் கட்டு கட்டிட்டு இருக்க.இதுலையே தெரியுது சார் என்ன எவ்ளோ.லவ் பண்றிங்கன்னு சொன்னாள் ராஜி.கார்த்திக் அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தான்.இப்படியே போனால் இவனே காலி பண்ணிடுவேன்.பந்திக்கு முந்திடு ராஜி சோறா.சொரணையா.சோறுதான் முக்கியம்னு அவளுடைய மைண்ட் வாய்ஸ் சொல்ல அவளுக்கு இட்லி எடுத்து வைத்து சட்னியும் போட்டு கொண்டாள்.

பதிலுக்கு கார்த்திக்கும் இட்லி எடுக்க அங்கு போட்டி உருவானது.இருவரும் சீக்கிரமாக சாப்பிட இரண்டு இட்லி மிச்சமிருந்தது.அதை கார்த்திக் எடுக்க போக டக்கென்று அதை ராஜி எடுத்துக்கொண்டாள்.அவளுடைய பிளேட்டில்.இருந்து அதை கார்த்திக் எடுக்க முயல தூதூதூ என இட்லியில் சும்மா துப்புவது போல பாவ்லா செய்தாள் ராஜி.

ஒரு இட்லியை எடுத்து அதை கார்த்திகை பார்த்து நீட்டி வேணுமா என்பது போல காட்ட கார்த்திக் பிளேட்டை சாப்பிட்ட பிளேட்டை எடுத்துக்கொண்டு கை கழுவ சென்றான்.நடந்த போட்டியிலும் ராஜி ஒன்றை கவனிக்க தவறவில்லை.

சட்னியின் சுவை வழக்கத்தை விட ஏதோ வித்யாசமாக தெரிந்தது.என்ன பண்ணிருப்பான்னு யோசித்து கொண்டே அதை ரசித்து சாப்பிட தொடங்கினாள்.அப்போது அவளுக்கு விக்கல் வர ஹூக்ஹூக்ஹூக் என்று விக்க தொடங்கினாள்.அப்போது பார்த்து ஜக்கில் தண்ணீர் காலி ஆகி இருக்க சரி எப்படியும் கார்த்திக் எடுத்து தருவான்னு பார்க்க அவன் அதை கண்டு கொள்ளாமல் கிச்சன் பார்த்து சென்று விட்டான்.

சரி ஆபத்துக்கு பாவம் இல்லை என்று விக்கி கொண்டே பிரிட்ஜை திறந்து பார்க்க அங்கும் வாட்டர் பாட்டில் காலியாக இருந்தது.சனியன் தண்ணிய கூட விட்டு வைக்கல.சரி கிச்சன் போய் குடிக்க வேண்டியது தான்.நாம இதை படுத்தி எடுக்கலாம்னு பார்த்தா இது நம்மள படுத்தி எடுக்குது.ரெண்டு நாள் கூட இதுகூட தனியா இருக்க முடியலையே.இன்னும் 15 நாள் எப்படித்தான் கழிய போகுதோன்னு முனகிக்கொண்டே கிச்சன் பக்கம் செல்ல கையில் சுடுநீருடன் வந்தான் கார்த்திக்.

அதை கொண்டு அவள் முகத்தை நோக்கி ஊற்றுவதை போல டம்ளரை வைக்க ஏய்ய்ய்ய்ய் லூசு.மெண்டல் என்று திட்டிக்கொண்டு கைகலால் முகத்தை மறைத்துக்கொண்டு திரும்பிக்கொண்டாள். அறிவு இருக்கா உணக்க் என்று சொல்லி கொண்டே அவள் திரும்பி கார்த்திக்கை பார்க்க டேபிளில் சூடு தண்ணீர் மட்டும் இருந்தது.

வேகமாக அதை எடுத்து குடிக்க சென்றவளுக்கு அப்போது தான் உரைத்தது விக்கல் நின்றுவிட்டதுன்னு.தொண்டையை தடவி பார்த்த ராஜி மெதுவாக தண்ணீர் குடித்தாள்.பின் பிளேட்டை கழுவி,கை கழுவி விட்டு வந்து சோபாவில் வந்து இருந்தாள்.அங்கு டீபாயில் டாக்ட்டர் கொடுத்த மாத்திரையும்,ப்ளாக் டீயும் இருந்தது.

ராஜி கார்த்திக்கை தேட அவன் ரூமிற்கு சென்று இருந்தான்.டீயை குடித்து விட்டு மாத்திரையை முழுங்கினாள்.ஏனோ அவள் மனம் கார்த்திக்கை தேடியது.ரூமிற்கு சென்று அவனை பார்த்தாள் ராஜி.தேங்ஸ் என்று சொன்னாள்.பரவாயில்லை.இப்ப பெட்டரா இருக்கான்னு கேட்டான் கார்த்திக்.

கொஞ்சம்.சமையல் சூப்பரா இருந்துச்சு.ஏன் கார்த்திக்.எனக்காக இவ்ளோ விஷயம் பாத்து பாத்து பண்ற.நான் எவ்ளோ திட்டினாலும் கோவப்பட மாட்டேங்குற.எல்லார் மேலையும் அன்பா இருக்க.அப்ப ஏன்என் என்னை மட்டும் அழ வச்ச.நான் உனக்கு அப்படி என்ன செஞ்சிட்டேன்.நா ன்ன உனக்கு அவ்ளோ பிடிக்குமா.

நான் ஒன்னும் உன்னை லவ் பண்ணல.ஏன் ஒரு பிரெண்டா கூட உன்கிட்ட நிறைய விஷயங்கள் மறச்சிருக்கேன்.இவ்ளோ இருந்தும் நானே சாப்பிட கூடாதுன்னு இருந்தாலும் சாப்பிட வைக்கிற.நான் கேக்காமலே எனக்காக எவ்ளோ பண்ற.ஏன் கார்த்திக்.நான் உனக்கு அவ்ளோ பிடிக்குமா சொல்லுன்னு கேட்டாள் ராஜி.

அவன் எதுவும் சொல்லாமல் அவளை பார்த்து சிரிப்பை மட்டும் பதிலாக தர விழியோரமாய் ராஜிக்கு கண்ணீர் எட்டி பார்த்தது.இல்ல இந்தமுறை ணீ சொல்லித்தான் ஆகணும்.சிரிச்சி மழுப்பாத.பதில் சொல்லுnன்னு சொன்னாள் ராஜி.

அது ஒன்னும் இல்ல ராஜி.சிம்பிள்.நான் உன்னை காதலிக்கிறேன்.அவ்ளோதான்.அது எந்த அளவுக்குன்னு என்னால நிரூபிக்க முடியாது.யு நோ வாட்.சப்போஸ் உனக்கு வேற யார்கூடவாச்சும் கல்யாணம் நடந்துருச்சுன்னு வச்சுக்கோ நான் என்ன நினைப்பேன் தெரியுமா.உனக்கு தாலி கட்டினவன் சீக்கிரமே சாகணும்னு தான் கடவுள்கிட்ட வேண்டிப்பேன்.

முதல் இரவுல ஸ்விட்ச் போடும்போது அவனுக்கு ஷாக் அடிச்சி இல்லனா பைக்ல போகும்போது ஆக்சிடன்ட் ஆகி இல்லனா ஹார்ட் அட்டாக் வந்து இப்படி எதுலையாவது ஒன்னுல அவன் சாகணும்னு தான் நான் டெயிலி வேண்டிப்பேன்னு சொன்னான் கார்த்திக்
அப்ப என்ன உண்மையா லவ் பன்றேன்னு சொல்லிட்டு என் வாழ்க்கை நாசமா போகணும்னு நினைப்ப அப்படித்தான என்றாள் ராஜிசத்தியமா உன் வாழ்க்கை நாசமாக போகணும்னு எண்ணம் இல்லை.அப்படி ஒன்னு நடந்தாச்சும் உன்னை செகண்ட் மேரேஜ் பன்னி உன்கூட ஒரு லைப் வாழ்ந்துட மாட்டேனான்னு ஒரு ஆசை அவ்ளோதான்.

அதான் இந்த மேரேஜ் விசயத்துல நான் கொஞ்சம் செல்பிஷா நடந்துக்கிட்டேன்.உனக்கு என்கூட இருக்க பிடிக்கலைன்னா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.நான் ட்ரான்ஸபெர் வாங்கிடறேன்.நீ இங்க அப்பா,அம்மா கூட இருந்துக்கோ.நான் வீக்லி ஒன்ஸ் மட்டும் வரேன்னு சொன்னான் கார்த்திக்.

அவன் கடைசியாக சொன்ன வார்த்தைகள் அத்தனையும் கேட்ட ராஜிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.இந்த அளவுக்கு பைத்தியமாக இருக்கும் ஒருவனை நாம் தவறாக புரிந்து விட்டோமோ என்று மனதில் யோசிக்க தொடங்கினாள் ராஜி.

ஆனால் அவளது பெண் புத்தி அவளை எச்சரித்தது.அவன் நடிக்கிறான்.இப்படி சொல்லித்தான் உன்னோட வாழ்க்கையை சீரழிச்சான்.இப்ப மறுபடியும் ஆரம்பிக்கிறான்.நம்பாதே என்று எச்சரித்தது.இப்படியாக புத்திக்கும் மனதுக்கும் இடையே இருதலை கொல்லி எறும்பாய் மாட்டிக்கொண்டு தவித்தாள் ராஜி.

என்மேல உள்ள கோவம்லாம் அப்படியே இருக்கட்டும்.அதை எப்ப வேணும்னாலும் என்கிட்ட காட்டலாம்.யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம்.இப்ப கொஞ்சம் ரெஸ்ட் எடு நம்ம சண்டையை அப்றம்சி வச்சிக்கலாம்.அப்புறம் சாப்பாடு நான் செஞ்சுடுறேன்.நீ ரெஸ்ட் எடு என்று சொல்லிவிட்டு ரூமை விட்டு வெளியே சென்றான் கார்த்திக்.

அவன் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் திரும்ப திரும்ப அவள் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்க அவளையும் அறியாமல் அவளுடைய கண்கள் கண்ணீரை அவளுக்கு மருந்தாக கொடுத்தது.அப்படியே அவளும் தூங்கி போனாள் ராஜி.

மதியம் அவள் முழித்து பார்க்கும் போது அவள் எதிரே இருந்து விகடனை புரட்டி கொண்டிருந்தான்.அவள் எழுந்து பார்க்கும் போது இப்ப எப்படி இருக்கு பரவா இல்லையான்னு கேட்டான் கார்த்திக்.ம்ம்ம்ம்ம்ம் பரவா இல்லை.நான் போய் பேஸ் வாஷ் பண்ணிட்டு வந்துடுறேன்னு சொல்லிவிட்டு பேஸ் வாஷ் செய்து வந்தாள் ராஜி.

சாப்பிடலாமா பசிக்குதுன்னு கேட்டாள் ராஜி.ம்ம்ம்ம்ம்ம் கண்டிப்பா.போலாம்னு சொல்லி விட்டு டைனிங் டேபிள் நோக்கி சென்றான் கார்த்திக்.அவனை பின் தொடர்ந்து சென்ற ராஜி பிளேட்டை எடுக்க செல்ல நீ உக்காரு.நான் வைக்கிறேன்ன்னு சொல்லிவிட்டு அவளுக்கு பிளேட்டில் சாதம் வைத்து கொஞ்சம் ரசம் ஊற்றி அவளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு ப்ரை செய்து அவளுக்கு கொடுத்தான்.அதை வாங்கி ஒரு வாய் சாப்பிட்ட ராஜி சாப்பாடு நன்றாகநன்றாக தோன்றியது.கசப்பாக இருந்த வாய்க்கு அந்த சாப்பாடு ருசியாக இருந்தது.

கார்த்திக் என்ன செய்கிறான் என்று ராஜி எதிரே பார்க்க அங்கு இன்னொரு பிளேட்டில் சாதம் வைத்து அதில் சிக்கன் குழம்பை ஊற்றிக்கொண்டிருந்தான் கார்த்திக்.

சிக்கெனை வைத்து அதை ரசித்து சாப்பிட தொடங்கினான் கார்த்திக்.அவ்வபோதுத ஆஹா,அருமை,சூப்பர்டா கார்த்திக்.பின்னிட்ட போ என்று சொல்லிக்கொண்டே சாப்பிட்டான் கார்த்திக்.

அதை பார்த்த ராஜி எருமை எருமை எப்படி திங்குது பாரு.உடம்பு சரி இல்லாம ஒருத்தி இருக்கானு அக்கறை இல்லாம எப்படி பார்க்க வச்சி திங்குது பாரு. உனக்கு ஒரு நாள் இருக்கு என்று மனதில் நினைத்து கொண்டாள்.

அந்நேரம் பார்த்து கார்த்திக்கிற்கு விக்கல் வர தண்ணீர் எடுக்க அப்போது ராஜியை பார்க்க அவள் அவனை பார்ப்பதை தவிர்த்து தலை குனிந்து சாப்பிடுகிற மாதிரி நடித்தாள்.அவள் உதட்டின் ஓரம் ஒரு குறுஞ்சிறுப்பு தோன்றியதை கார்த்திக் கவனித்து விட்டான்.

யாரும் நான் சாப்பிடுறதை பார்த்து கண்ணு வைக்க வேண்டாம்.வேணும்னா எடுத்து சாப்பிடலாம்.ஆனா டாக்டர் ஹெவி புட் சாப்பிட கூடாதுன்னு சொல்லிருக்காங்க.

ஹலோ நான் ஒன்னும் கண்ணு வைக்கல.நீ கொஞ்சம் மூடிட்டு சாப்பிடுறியா.உனக்கு விக்கல் வந்துச்சுன்னா தண்ணி எடுத்து குடி.அதுக்கு ஏன் என்னைய குறை சொல்ற.

அவன் பதில் பேசாமல் சாப்பிட்டான்.அன்று ராஜிக்கு சீக்கிரமே உடல் சரி ஆகி விட அடுத்து வந்த இரண்டு நாட்கள் இருவரும் பேசாமல் இருந்து கொண்டனர்.

பின் ஒரு நாள் ராஜியிடம் உன்னை அத்தை பார்க்கணும்னு சொன்னாங்க.உடம்பு சரி இல்லனு சொன்னேன்.உன்னை கூட்டிட்டு வர சொன்னாங்க.போயிட்டு வரலாமான்னு கேட்டான் கார்த்திக்.

லூசு உன்னை யாரு எங்க அம்மாகிட்ட சொல்ல சொன்னா.அவுங்க என்னமோ ஏதோன்னு பயந்துட்டு இருப்பாங்க.எதுவுமே கேட்டுட்டு செய்ய மாட்டியா.