என் காதல் கண்மணி 2 59

அப்போது கார்த்திக்கிடம் எப்போதும் வேடிக்கையாக பேசும் நண்பனின் அம்மா ஒருவர் அவனிடம் ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கு.சொன்ன மாதிரியே அத்தை பொண்ண தூக்கிட்டு வந்துட்டியே.மகாலட்ச்சிமியட்டும் இருக்கா.வீட்டிக்கு போனதும் சுத்தி போட சொல்லுன்னு சொல்லிட்டு போனாங்க.

அவங்க கிட்ட ஒன்னும் பேசாமல் சிறிது கொண்டே வீடு வந்து சேர்ந்தனர் இருவரும்……

வீட்டுக்கு வந்த பின் கார்த்திக் சாப்பிட்டு விட்டு லேப்டாப்பில் பேஸ்புக் பார்த்து கொண்டிருக்க ராஜி பாத்திரங்களை சுத்தம் செய்துவிட்டு டம்ளரில் பால் எடுத்துகொண்டு ரூமிற்கு சென்றாள்.
கொண்டு வந்த பாலை டேபிளில் வைக்க கார்த்திக் அதை எடுத்துக்கொண்டு லேப்டாப்பில் மூழ்கினான்.லைட்டை ஆப் செய்துவிட்டு பெட்டில் படுக்க சென்றாள்.
கார்த்திக் லேப்டாப்பில் குறைந்த சத்தத்தில் பாடல் ஓடவிட்டு இருந்தான்.கூடவே அவனும் பாடிக்கொண்டிருந்தான்.அதை பார்த்துக்கொண்டிருந்த ராஜிக்கு சிரிப்பாக வந்தது.கோவிலில் கார்த்திக் அந்த குழந்தையுடன் விளையாடியதை பார்த்த போது அவனும் குழந்தையுடன் குழந்தையாக மாறிப்போனதை உணர்ந்தாள்.எப்படி இவன் எல்லோரிடமும் எளிதில் ஒட்டிக்கொள்கிறான் என்று வியப்பாக இருந்தது.
ரமேஷிற்கு குழந்தைகள் என்றாலே பிடிக்காது.அதை ராஜியிடமே கூறி இருக்கின்றான்.ஆனால் ராஜிக்கு குழந்தைகள் என்றால் அவ்ளோ பிடிக்கும்.

அவளுடைய வீட்டிற்கு அருகில் நிறைய குழந்தைகள் உண்டு.லீவ் நாட்களில் அவர்களை வைத்து விளையாடுவது அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.கார்த்திக் இன்று விளையாடியதை பார்த்த போது அவளுக்கு பழைய ஞாபகம் வந்துவிட்டது.
ஏன் கார்த்திக் எனக்கு மட்டும் இப்படி செஞ்ச.நாம ரெண்டு பேரும் நல்லாத்தானே பழகினோம்.உன்மேல ஏன் நீயே வெறுப்பை உண்டாக்கி கொண்டாய்ன்னு அவளுடைய மனம் அவளுக்காக பேசியது.

பின் அப்படியே அவள் தூங்கிவிட கார்த்திக்கும் அவள் தூங்கியவுடன் உறங்கி போனான்.மறுநாள் லீவ் என்பதால் லேட்டாக எழுந்தான் கார்த்திக். அன்று சைட்டிற்கு சென்று வேலைகள் எந்த அளவில் உள்ளது என்று தன் தம்பியுடன் சென்று பார்க்க சென்றான்.
வருடத்திற்கு 12 வீடுகள் அவர்கள் கம்பெனி மூலம் கட்டி கொடுக்கின்றனர்.வருடாவருடம் அதன் எண்ணிக்கை கூடுமே தவிர குறையாமல் பார்த்துக்கொள்வான்.அவன் கஷ்டப்பட்டு உருவாக்கிய கம்பெனி அது.அதனால் தான் அவனுக்கு கவர்மெண்ட் வேலை கிடைத்த பின்னும் அதை மூடாமல் டிப்ளோமா முடித்த தன் தம்பியிடம் ஒப்படைத்து அதை கவனித்து கொண்டிருந்தான்.அ
புதுப்புது ஐடியா,மற்றும் இன்டீரியர் டிசைன்களிலும் நன்றாக பண்ணிகொடுப்பதால் அவனுக்கு நல்ல பெயர் இருந்தது.பெரும்பாலும் பாங்கில் வேலை செய்பவர்கள்.கவர்மெண்ட் ஸ்டாப்ஸ்,வசதி படைத்தவர்கள் இவர்களே பெரும்பாலும் அவனுடைய கிளைன்ட் லிஸ்டில் இருந்தனர்.

அன்று சைட் விசிட்டிங் சென்று பார்த்த போது எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தது.அன்று முழுவதும் வீட்டிற்கு செல்வதை தவிர்த்திருந்தான் கார்த்திக்.சாப்பிட மட்டும் சென்று வந்தான்.
அன்று ஈவினிங் வேலை ஆட்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு ஆபிஸில் இருந்தான் கார்த்திக்.கூடவே அவனுடைய தம்பியும் இருக்க அப்போது அவனுடைய நண்பர்களும் வந்திருந்தனர்.
வாங்கடா எப்படி இருக்கீங்க இப்போதான் தான் எங்கள உங்க கண்ணுக்கு தெரியுதா.கல்யாணத்துக்கு கூட வராம போய்ட்டீங்கன்னு கேட்டான் கார்த்திக்.
அப்படி இல்லடா.உனக்கென்ன உள்ளூர்ளையே இருந்து கஷ்டப்பட்டு செட்டில் ஆகிட்ட.நாங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஸ்டேட்ல இருக்கோம்.அதாண்டா வர முடியல.சரி எப்படி இருக்கா எங்க தங்கச்சின்னு கேட்டார்கள்.
அவளுக்கென்னடா ராணி மாதிரி இருக்கான்னு .சரிடா அப்றம் என்ன பிளான் இன்னைக்குன்னு கேட்டான் கார்த்திக்.
இன்னைக்கு ஒன்னும் இல்லடா.நீதான் மேரேஜ் டிரீட் கொடுக்கணும்.எப்போ தரபோறன்னு கேட்டார்கள்.இன்னைக்கே கொடுத்துடலாம் என்னடா வேணும் மகேஷ் இங்க வான்னு கூப்பிட்டான் கார்த்திக்.
என்னடா வாங்கலாம் சொல்லுங்கன்னு கேட்டான்.டேய் என்னடா உடனே சொல்லிட்ட ம்ம்ம் சரி பட் ஒரு கண்டிஷன் நீயும் எங்களோட சேர்ந்து லைட்டா சாப்பிடணும்
ஓகேவான்னு கேட்டான் அவனுடைய நண்பன் ராம்.
டேய் அதெல்லாம் முடியாது.அவளுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்.அதனால நீங்க சாப்பிடுங்க.நான் கம்பெனி கொடுக்கிறேன்னு சொன்னான் கார்த்திக்.
ம்ஹும் அட்லீஸ்ட் ஒன் பீர் இல்லனா நோ ட்ரீட் அப்படின்னு அவர்கள் சொல்ல சரி ஓகேடா என்று கார்த்திக் ஒத்துக்கொண்டான்.
மகேஷிடம் காசை கொடுத்து வாங்கிவர சொல்ல ஆஃபீஸ்க்கு வெளியே உள்ள ஸ்டோர் ரூமில் பார்ட்டி ஆரம்பம் ஆனது.ஹாப்பி மேரீட் லைப் கார்த்திக் என்று சொல்லி பீரை ஒப்பன் செய்து கார்த்திக்கிடம் கொடுக்க எல்லோரும் சேர்ஸ் சொல்லி குடிக்க ஆரம்பித்தனர்.
அப்போது கார்த்திக்கிற்கு போன் வர ஒரு நிமிடம் என்று சொல்லி அவன் போனை எடுத்துகொண்டு வெளியே வந்தான்.அந்த நேரம் பார்த்து பீரில் சரக்கை மிக்ஸ் செய்து வைத்து விட்டனர்.
இதை அறியாத கார்த்திக் அதை எடுத்து புல் பாட்டிலையும் காலி செய்தான்.ஒருவராக ஜாலியாக பார்ட்டி முடிந்தது.அனைவரும் கிளம்பி செல்ல கார்த்திக்கிற்கு போதை அதிகமானது.
மகேஷ் இரண்டு பீர் மட்டும் அடித்திருந்ததால் அவனுக்கு மிதமாக இருந்தது.இருவரும் சிறிது நேரம் ஜாலியாக பேசி கொண்டிருந்தனர்.மகேஷ் கார்த்திக்கின் மேல் அதிகமாக மரியாதை வைத்திருந்தான்.அதனால் அவனிடம் அதிகம்மரியாதை வைத்திருந்தான்.அதனால் அவனிடம் அதிகம் பேசமாட்டான்.
வேலை விஷயமாக ஏதாவது கேட்பான்.மற்றபடி அவனாக கார்த்திக்கிடம் எதுவும் பேசமாட்டான்.டேய் நீ யாரையாவது லவ் பன்றயாடா.அப்படி ஏதாவது இருந்தால் அண்ணன் கிட்ட சொல்லுடா.நான் ஹெல்ப் பன்றேன்ன்னு கார்த்திக் சொன்னான்.
அப்படிலாம் ஒன்னும் இல்லன்னா.நம்ம மூஞ்சிய எல்லாம் எவளும் பாப்பாளுகளா.அதுவும் இல்லாம எங்க அம்மாவுக்கு தெரிஞ்சா வீட்டையே ரெண்டாக்கிடுவா.அதனால எனக்கு அதில இன்டெரெஸ்ட் இல்லன்னான்னு சொன்னான் மகேஷ்.
நீயெல்லாம் வேஸ்ட்டா.முதல்ல உனக்கு மனசுக்கு பிடிச்ச பொண்ணா பாத்து லவ் பண்ணு.அப்பதான் வாழ்க்கைல ஏதாவது முன்னேற முடியும்.உனக்காக இல்லாட்டாலும் அவளுக்காகவாச்சும் ஏதாச்சும் பண்ணனும்னு ஒரு உந்துதல் இருக்கும்னு சொன்னான் கார்த்திக்.
சரின்னா.ஏண்ணே உனக்கும் மைனிக்கும் ஏதாவது பிரச்னையான்னு கேட்டான் மகேஷ்.அப்படில்லா ஒன்னும் இல்லடா.உனக்கு யாரு சொன்னா எங்க ரெண்டுபேருக்கும் நடுவுல பிரச்சனைன்னுன்னு கேட்டான் கார்த்திக்.

இல்லன்னா.அன்னைக்கு கோவில்ல வச்சி உங்க ரெண்டுபேரையும் பாத்தேன்.மைனி முகத்துல சந்தோசமே இல்ல.போட்டோ எடுக்கும் போதெல்லாம் உண்ண விட்டுவிட்டு Vவிலகியே போனாங்க.அதான் ஏதாவது பிரச்சனையா இருக்குமோன்னோ கேட்டேன்.உனக்கு ஒன்னும் சொல்லி தெரிய வேண்டியது இல்லன்னா.மைனிகிட்ட பேசி எதுவா இருந்தாலும் சமாதானபடுதுன்னான்னு சொன்னான் மகேஷ்.

டேய் எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்ல.என்கிட்ட கேட்ட மாதிரி தேவை இல்லாம வீட்ல யார்கிட்டயும் சொல்லிட்டு இருக்காதஸ்.சரி நேரம் ஆகிவிட்டது.டோரை லாக் பண்ணிட்டு வா.நான் கிளம்புறேன்னு சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்றான் கார்த்திக்.

வீட்டில் கார்த்திக் வராததை கண்டு அத்தையுடன் இருந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தாள்.கார்த்திக் வந்தவுடன் யாரிடமும் ஒன்றும் பேசாமல் படுக்க சென்றான்.அவன் சாப்பிடாமல் செல்வதை கண்ட ராஜி அவனிடம் சென்று சாப்பிடலையான்னு கேட்டாள்.

அதற்கு அவன் ஒன்றும் சொல்லாமல் ட்ரெஸ் மாற்றிவிட்டு போர்வை எடுத்து மூடிக்கொண்டு படுத்துவிட்டான்.அவனிடம் ட்ரிங்க்ஸ் வாடை வருவதை கண்ட ராஜி ஒன்றும் சொல்லாமல் கிச்சன் சென்று சாப்பாடை மூடிவைத்துவிட்டு விளக்குகளை அணைத்துவிட்டு தூங்கச்சென்றாள்.

மறுநாள் பொழுது விடிந்ததுவிடிந்தது.லேட்டாக எழுந்த கார்த்திக்கிற்கு தலைவலி கடுமையாக இருந்தது.சூடாக டீ குடித்தாள் நல்லா இருக்கும்னு நினைத்தான் கார்த்திக்.எழுந்து பிரெஷ் ஆகிவிட்டு முகத்தை துடைத்துவிட்டு வரும்போது கைகளை கட்டிக்கொண்டு எதிரில் நின்று கொண்டிருந்தாள் ராஜி.அவளுக்கு அருகில் டீபாயில் ஆவி பறக்க டீ இருந்தது.

கைகளை கட்டிக்கொண்டு அவனையே பார்த்துக்கொண்டிருக்க, கார்த்திக் இப்போது எப்படி அவளை சமாளிக்க.அடபாவிகளா உங்களுக்கு என்னடா பாவம் பண்ணேன்.என்னத்தையோ கலந்துகொடுத்து இவ வேற கண்டுபிடிச்சிட்டாலே.ஆமா அவங்கள சொல்லி எதுக்கு.நீதானே நேத்து குடிச்ச இப்ப அனுபவி.சரி எதுவா இரு இருந்தாலும் சமாளிப்போம்னு மனதுக்குள் நினைத்துக்கொண்டு அவளை கடந்து சென்று டீ கப்பை எடுத்து உறிஞ்ச தொடங்கினான்.