என் காதலி 233

அந்த பக்கம் ஒரு இருட்டில் ஒரு சேரில் ஒரு பெண் தனியாக அழுது கொண்டு சரக்கு அடித்து கொண்டு இருந்தாள் . யாருடா இது இங்க வந்து இப்படி அழுதுகிட்ட இருக்கிறது என்று தன் கண்களை துடைத்து கொண்டு பார்த்தான் .அது எங்கோ இவன் பார்த்து பழகிய பெண் போல இருந்தாள் . யாரு இது நம்ம பழைய பார்ட்டி எதுவுமா என்று மீண்டும் கண்களை துடைத்து கொண்டே அவள் அருகே சென்ற போதுதான் தெரிந்தது அது சுவாதி . விக்கியின் நெருங்கிய நண்பன் டேவிட்டின் முன்னால் காதலி டேவிட்டும் சுவாதியும் ஒன்றரை ஆண்டாக காதலித்து வந்தனர் .ஒரு 5 மாதங்களுக்கு முன்பு இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர் .
இந்த நிலையில் ஒரு இரண்டு நாட்களுக்கு முன்பு டேவிட் தமிழ்நாட்டிற்கு சென்று அவன் பெற்றோர் சொன்ன பெண்ணை கல்யாணம் செய்து கொண்டான் . இதலாம் விக்கிக்கும் தெரியும் இருந்தாலும் அப்போதைக்கு சுவாதியை சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காக மெல்ல அவளை கூப்பிட்டான் .
அழுது கொண்டு இருந்த அவள் மெல்ல இவனை நிமிர்ந்து பார்த்தாள் .

என்ன சுவாதி இந்நேரம் இங்க குடிச்சுட்டு அழுதுகிட்டு இருக்க என்ன விஷயம் என்றான் . அவள் அழுதுக்கொண்டே கோபமாக அவனடிம் ஏன் உனக்கு தெரியாதாக்கும் என்றாள் .
தெரியும் இருந்தாலும் என்று இழுத்தான் . அவள் அழுதுகொண்டே டேபிள் மீது இருந்த இன்னொரு கிளாஸ் சரக்கை எடுத்து குடித்து கொண்டே கேட்டாள் ஏன் நீ கல்யாணத்துக்கு போகலையா என்றாள் .

ம்ம் போகல என்றான் .ஏன் உன்னையே அவன் கூப்பிடலயா என்னையே மாதிரியே உன்னையும் தண்ணி தெளிச்சு விட்டானா என்றாள் இல்ல கூப்பிட்டான் நாந்தான் போகல எனக்கு தமிழ் நாட்டுக்கு போகவே பயமா இருக்கு எங்கிட்டும் தெரிஞ்சவன பாத்துடுவநேனோன்னு எப்படினாலும் இங்க ரிசப்சன் வைப்பான்ல அப்ப போயிக்கலாம்னு இருக்கேன் .

என்னது இங்க ரிசப்சன் வச்சுருக்கானா என்று அதிர்ச்சியோடு கேட்டாள் . ஆமா அடுத்த ஞாயிற்று கிழமை வச்சுருக்கான் என்றான் . அவள் மீண்டும் பயங்கரமாக அழுக ஆரம்பித்தாள் . விக்னேஷ்க்கு என்ன சொலவது என்று தெரியவில்லை . அவள் அழுதுகொண்டே சொன்னாள் இது என் யோசனை தமிழ் நாட்டுல கல்யாணம் , இங்க மும்பைல ரிசப்சன் அப்படித்தான் லவ் பண்ணப்ப அந்த நாய்கிட்ட சொல்லிருந்தேன் .
என்று சொல்லி அழுதுகொண்டே முன்னே உள்ள சரக்கை குடித்து விட்டு பேரரை அழைத்தாள் . பேரர் இன்னொரு ரவுண்டு விஸ்கியோ இல்ல வோட்கவோ கொண்டு வா என்றாள் .

பேரர் விக்கிக்கு தெரிந்தவன் என்பதால் அவனை மெல்ல தனியாக கூப்பிட்டான் .சுவாதி போதையில் புலம்பி கொண்டு இருந்தாள் . சார் மேடம் ஏற்கனவே அளவுக்கு அதிகமா குடிச்சு இருக்காங்க இதுக்கு மேல குடிச்சா தாங்குவாங்களான்னு தெரியல அதனால சொல்லி வீட்டுக்கு அனுப்புங்க என்றான் .

அவன் மீண்டும் சுவாதியிடம் வந்தான் . அவள் உளறி கொண்டு இருந்தாள் . சுவாதி சுவாதி என்று அழைத்தான் . அவள் மெல்ல எழுந்து சரக்கு என்ன ஆச்சு என்றாள் .
அவளிடிம் குடிக்க கூடாதுன்னு சொன்ன கத்த ஆரம்பிச்சுடுவா அதனால வேற மாதிரி சொல்லனும்னு முடிவு பண்ணிட்டு சுவாதி பப் மூடுர நேரம் வந்துடுச்சாம் அதனால சரக்கு கிடையாதாம் . நீ கிளம்பு என்றான் .
என்னது அதுக்குள்ள மூட போறங்களா எனக்கு எல்லாமே ஏமாற்றமா இருக்கு என்று சொல்லிவிட்டு சரி நான் போயி ரூம்ல உக்காந்து அழுதுக்கிறேன் பாய் என்று சொல்லி விட்டு எழுந்தாள் . அவளால் ஒரு அடி கூட வைக்க முடியவில்லை .போதையில் தடுமாறி கிழே விழுந்தாள் .

அவள் விழுந்ததை பார்த்த விக்னேஷ் அவளை தூக்கி நிறுத்தினான் .நிறுத்தி அவள் கன்னத்தை தட்டி சுவாதி சுவாதி என்று எழுப்ப முயற்சி செய்தான் .

அவளுக்கு இருக்கும் போதையில் அவளால் கண்ணை கூட திறக்க முடியவில்லை .ம்ம் இதே நம்ம தமிழ்நாடா இருந்தா இவளால இப்படி சரக்கு அடிச்சுருக்க முடியுமா ம்ம் பரவல மும்பை நியூயார்க் மாதிரி ஆகிடுச்சு என்று நினைத்தான் .
அவன் மீண்டும் மீண்டும் அவளை எழுப்ப முயற்சி செய்து கொண்டு இருந்தான் .அதை பார்த்த பேரர் அவனருகே வந்து மேடத்த எழுப்பி நீங்க அனுப்பி வச்சாலும் எங்கேயாச்சும் போயி விழுந்துடுவாங்க . அந்தளவுக்கு அவங்களுக்கு போதை இருக்கு அதனால நீங்களே போயி விட்ருங்க சார் என்றான் .

சரி இவளை சீக்கிரம் கொண்டு போயி இவள் ஹாஸ்டலில் விட்டுட்டு வந்து நம்ம திரும்ப வந்து எவலாயச்சும் பிடிக்கணும் . என்று அவளை வெளியே அழைத்து சென்றான் .

அவளை கொண்டு போயி அவன் காரில் பின் சீட்டில் உக்கார வைத்து விட்டு இவன் வண்டியை ஓட்டினான் . ஒரு சில நொடிகளில் அவள் ஓரளவு போதை தெளிந்து விக்கியின் காரில் இருப்பதை தெரிந்து கொண்டு ஓரளவு போதையில் கேட்டாள் .

டேய் விக்கி எங்கடா கூப்புட்டு போற என்னையே என்றாள் , விக்னேஷ்க்கு அவளிடிம் என்ன சொன்னாலும் அவளுக்கு புரியாது என்று புரிந்து கொண்டு அமைதியாக இருந்தான் .
அவளாக மீண்டும் பேசினாள் எனக்கு புரிஞ்சு போச்சு என்னையே கூப்புட்டு போயி ரகசியமா கல்யாணம் பண்றதுக்காக வர சொல்லி டேவிட் அனுப்புச்சனா என்றாள் சிரித்து கொண்டே .

இவன் மனதிற்குள்ளே ஆமா நான் நாடோடிகள் சசிகுமார் பாரு உங்கள சேத்து வைக்க ,என்று நினைத்து கொண்டான் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *