என் காதலி 233

முன்பே சொன்னது போல் வள்ளி விக்கிக்கு அவன் அக்காவை ஞாபக படுத்துவதால் எப்போது அவனுக்கு பிரச்சினை இருந்தாலும் அவளிடிம் யோசனை கேப்பான் .அதன் பின் மணியிடம் சென்றான் . மணி சிஸ்டர் ப்ரீயா இருக்காங்களா எனக் கேட்டான் .ஏன்டா என்ன விஷயம்இல்ல டேவிட் ஒரு சின்ன பார்ட்டி அரேஞ் பண்ணிருக்கான் இன்னைக்கு சாய்ங்காலம் நான் கல்யாணத்துக்கு வேற வரலையா அதனால ஒரு சின்ன கிப்ட் வாங்கணும் எனக்கு கிப்ட் பத்தி எதுவும் தெரியாது .அதான் வள்ளி கூட போயி கிப்ட் வாங்கிட்டு அப்புறம் வரலாம்ன்னு பாக்குறேன் என்றான் .
சுயர் அவகிட்ட போன் போட்டு கேட்டுட்டு போ என்றான் .ஒகே என்றான் .

அதன் பின் மாலை வள்ளியை பார்க்க அவள் வீட்டிற்கு சென்றான் .வாங்க ப்ரோ என்ன இந்த பக்கம் என்றாள் . அவனுக்கு உடனே சொல்ல முடியவில்லை சுவாதி விசயத்தை .
டேவிட்க்கு கிப்ட் வாங்கணும் செலக்ட் பண்ண வறியா என்றான் .ஓகே டா நான் பிரெஸ் ஆப் ஆகிட்டு வரேன் என்று போனாள் .விக்கி சோபாவில் உக்காந்து வருத்ததோடு கைகளால் கண்களை மூடி இருந்தான் .வள்ளி வந்து அவனை பார்த்ததும் என்னடா ஒரு மாதிரி எதுவும் பிரபலமா என கேட்டாள் .

வள்ளி நான் ஒரு தப்பு பண்ணிட்டேன் என்றான் ,அததான் நீ வார வாரம் பண்றியே என்று சொல்லி சிரித்தாள்
விளையாடாத வள்ளி இப்ப நான் சொல்ற விஷயம் ரொம்ப சீரியஸ் யார்கிட்டயும் சொல்ல கூடாது .ஏன் மணி கிட்ட கூட சொல்லக் கூடாது என்றான் , ஐயோ ரகசியத்த என்னால பாதுகாக்க முடியாதே என்றாள் .ப்ளிஸ் நான் ஏன் பிரச்சினைய கேட்டு அதுல இருந்து விடுபட ஒரு வழி சொல்லு என்றான் .

சரி சொல்லு என்றாள் வள்ளி .யார் கிட்டயும் சொல்ல கூடாது என்றான் , அவள் சொல்ல மாட்டேன் சொல்லு என்றாள் அவன் மறுபடியும் யார் கிட்டயும் சொல்ல கூடாது என்றான் , அவள் கடுப்பாகி சொல்ல மாட்டேன் சொல்றா என்றாள் .விக்கி தைரியத்தை வர வைத்து கொண்டு சொன்னான் நான் சுவாதி கூட செக்ஸ் வச்சுகிட்டேன் என்றான் .

என்னது நம்ம டேவிட்டோட எக்ஸ் லவர் கூடயா என அதிரிச்சியோடு கேட்டாள் .
ஆமா என்றான். ஏன் டா எப்படி டா என்றாள் .ரெண்டு பெரும் போதையில இருந்தோம் என்ன பன்றோம்ன்னு எங்களுக்கே தெரியல .ஆனா இப்ப எனக்கு வருத்தமா இருக்கு என்று தலையில் கை வைத்து குனிந்து வருத்தப்பட்டான் .

வள்ளியும் அமைதியாக இருந்தாள் . விக்கி எழுந்து கேட்டான் என்ன பேசாம இருக்க என்னையே பாத்தா ஏதும் கேட்டவன் மாதிரி தோணுதா என்றான் .அவள் அப்படி இல்லைடா என்றாள். அப்படின்னா ஏன் பிரச்சினைக்கு வழி சொல்லு என்றான் .என்ன உன் பிரச்சினை எதுக்கு நீ பீல் பண்றே என்றாள் .
என்ன பிரச்சினையா நான் சுவாதி கூட செக்ஸ் வச்சுகிட்டேன் என்றான் .அதுல என்ன பிரச்சினை அவ விருப்பத்தோடுதானே வச்ச அவ விருப்பம் இல்லாம அவள கற்பளிக்கவா செஞ்ச என்றாள் .
அவ விருப்பத்தோடு தான் வச்சேன் . ஆனா என்று இழுத்தான் .ஆனா என்னடா என்றாள் .அவ என் பிரண்டோட எக்ஸ் லவர் நான் என் பிரண்டுக்கு தொரகம் பண்ணிட்டேன் அத என்னால தாங்கிக்கிற முடியல என்றான் .

நீ சொன்னதெல உன் பிரச்சினைக்கு வழி இருக்கு என்றாள் வள்ளி .என்னது அது என்றான் .அவ உன் பிரண்டோட எக்ஸ் லவர் அவ இப்ப பிரண்டோட லவராவோ பொண்டாட்டியவொ இருந்து இருந்தா நானே உன்ன செருப்பால அடிச்சு இருப்பேன் .அது மட்டும் இல்லாம சுவாதியும் பாவம்தான் அவளுக்கு இந்த சமயத்தில இப்படி ஒரு டைவேர்சென் வந்தது நல்லதுதான் . அதனால உன் மேல எந்த தப்பும் இல்ல என்றாள் .ஐயோ அப்படி இல்ல டேவிட் இன்னும் ஸ்வாதியே லவ் பண்ணிகிட்டுதான் இருக்கான் .அதான் கல்யாணத்துக்கு முன்னாடி அவள நினச்சு தண்ணிய போட்டு அழுதுருக்கான் .நான் அவனுக்கு தொரகம் பண்ணிட்டேன் என்றான் விக்கி .

அவள இன்னும் லவ் பண்ணிக்கிட்டு இருந்தா கல்யாணத்த நிப்பாட்டிட்டு வந்து இவள கல்யாணம் முடிச்சு இருக்கலாம்ல .இத்தனைக்கும் கிறிஸ்டின் மேரேஜ் இசியா சர்ச்ல வச்சு எல்லார் முன்னாடியும் இந்த கல்யாணம் பிடிக்கலன்னு சொன்னா அவன விட்ருப்பாங்க அத பண்ணல அவன் , அப்புறம் என்ன இன்னும் லவ் பண்றனாம் என்றாள் கோபத்தோடு .
இருந்தாலும் என்று அவன் இழுக்கவும் என்ன இருந்தாலும் என்னையே பொருத்தவரைக்கும் நீ செஞ்சது தப்பு இல்ல . சொல்ல போனா டேவிட் விட நீதான் சுவாதிக்கு காரேக்ட்டா மேட்ச் ஆகுற உங்க ரெண்டு பேர் ஜோடி பொருத்தமும் நல்ல இருக்கு என்றாள். உடனே அவன் ஹலோ சிஸ் நாங்க லவ் எல்லாம் பண்ணல சும்மா ஏதோ நடந்து போச்சு அவளவுதான் என்றான் .

அதானே உனக்கு எங்க லவ் எல்லாம் வர போகுது .ஆனா சுவாதிதான் உனக்கு காரேக்ட் ஆன ஜோடி என்றாள் .சரி சரி அத விடு இப்ப எனக்கு இருக்க குற்ற உணர்ச்சிய போக்க வழி சொல்லு என்றான் .இதுல ஒரு குற்றமும் இல்ல , இருந்தாலும் உனக்கு ஒரு வழி சொல்றேன் என்றாள் .ம்ம் சொல்லு சொல்லு என்றான் ஆர்வமாக ,

என்கிட்ட சொன்ன மாதிரி டேவிட்கிட்ட சொல்லிடு என்றாள் .என்ன சொல்ற நீ லூசா ஆகிட்டியா என்றான் .அது இல்லடா இது நம்ம யாருக்கு தப்பு பண்ணமோ அவங்க கிட்டேயே மன்னிப்பு கேட்டாதான் நல்லா இருக்கும் என்றாள் .உடனே அவன் இன்னைக்கே நான் அவன்கிட்ட சொல்லிடுவா என்றான் . அவசரப் படாதடா ஒரு வாரம் கழிச்சு சொல்லு இன்னைக்குத்தான வந்து இருக்கான் .ரொம்ப தேங்க்ஸ் வள்ளி என்றான்.
சரி வா இப்ப கிப்ட் வாங்க போவோம் என்று இருவரும் கிளம்பினார்கள்..

தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *