என் காதலி Part 3 124

அவள் தன் கண்ணீரை துடைத்து கொண்டு சரி டாக்டர் நான் வரேன் என்று கிளம்பினாள் .

பின் வெளியே அந்த பெண் சொன்னது நினைவில் வர டாக்டர் ஒரு சின்ன request என்றாள் .

என்னாம்மா என்றார் .நான் என் குழந்தைய ஸ்கேன் மூலம் பாக்கலாமா என்றாள் .ம்ம் தரளாமா வாம்மா பாப்போம் என்று அவளுக்கு ஸ்கேன் செய்து அவள் கருவை ஸ்கேனில் காட்டினர் .சுவாதி அதை பார்த்து ஒரே நேரத்தில் அழுகவும் சிரிக்கவும் செய்தாள் .

அதை பார்த்து டாக்டர் என்னாம்மா சந்தோசம்மா என்றார் ,ம்ம் என்றாள் .நேத்து நான் லீவ் ஆச்சே யாரு உனக்கு அபார்சன் பண்ண அப்பாயின்மெண்ட் கொடுத்தா என கேட்டார்கள் .

உங்க ஹாஸ்பண்ட் கிட்டதான் என் ஹாஸ்பண்ட் பேசி அனுமதி வாங்குனாரு என்றாள் .அதானே பாத்தேன் டாக்டரா இருந்தாலும் அந்த ஆளும் ஒரு ஆம்பிளைதானே அதான் ஒத்துகிட்டாரு . நர்ஸ் நாளைல இருந்து சார பிர்கன்ட் செக்சென்க்கு விடாத கேட்டா நான் சொன்னேன்னு சொல்லு என்று நர்சிடம் சொல்லிவிட்டு

மெல்ல சுவாதியிடம் இரு ஒரு ரெண்டு நாளைக்கு அவர நான் நைட் பட்னி போடறேன் அப்பத்தான் புத்தி வரும் என்று சிரித்து கொண்டே சொன்னார் . அதை கேட்டு சுவாதியும் சிரித்தாள்

அதன் பின் நீ கவலைப்படாம குழந்தைய சும .உன் புருசனோ இல்ல மாமியாரோ உன்ன அபார்சன் பண்ண கம்பல் பண்ணா போலீஸ்ல சொல்லு அவங்க பாத்துகிருவாங்க என்று சொல்லி சிரிக்க

சுவாதியும் ரொம்ப சந்தோசமாக ஒரு புது மனுசியை போல உற்சாகத்தோடு வெளியே வந்தாள் அதற்கு அப்புறம் சுவாதி கருவை கலைக்கமால் எப்போதும் போல வந்து ஹோஸ்டலுக்கு வந்து விட்டாள் .அவள் விக்கியிடம் அபார்சன் பண்ணமால் விட்டதை பற்றி எதுவும் சொல்லவில்லை அவனும் அவள் அபார்சன் பண்ணி இருப்பாள் என நினைத்து கொண்டு அவளுக்கு போன் எதுவும் பண்ணவில்லை .

மேலும் விக்கிக்கு வார நாட்களில் அவன் கம்பெனியில் வேலை அதிகமாக இருக்கும் அதனால் அவன் மற்ற விசயங்களில் கவனம் செலுத்த மாட்டான் .ஏன் அவன் பலவினமாக இருக்கும் பெண்கள் விசயம் கூட முன்பே சொன்னது போல் அவன் வார இறுதி நாட்களில் மட்டும்தான் வைத்து கொள்வான் .

அதனாலே அவன் மற்ற விசயங்களை ஞாபகம் வைத்து கொள்வதில்லை .

இப்படியாக ஒரு வாரம் சென்றது அவன் அன்று வழக்கம் போல வேலை முடித்து விட்டு வீட்டில் களைப்பில் படுத்து இருந்தான் .பின் அவன் வீட்டிற்கு வள்ளியும் மணியும் அவனை பார்க்க வந்தார்கள் .

என்ன இந்த பக்கம் ரெண்டு பேரும் வந்துருக்கிங்க என கேட்டான் விக்கி .சும்மாதாண்டா எனக்கு 6 மாசம் ஆச்சுல அதான் டாக்டர் கிட்ட போயி டெலிவரி டேட் கேட்டுட்டு வந்தோம் அப்படியே வர வழிலேயே உன் புது வீடு இருக்கறது ஞாபகத்துக்கு வந்துச்சு அதான் உன்னையே பாத்துட்டு அப்படியே அடுத்த மாச வளைகாப்புக்கு கூப்பிடலாம்னு வந்தேன் என்றாள் வள்ளி .

நல்லது என்னைக்கு டேட் சொல்லிருக்காங்க என கேட்டான் . அநேகமா ஜனவரி மாசம்னு சொல்லிருக்காங்க ஓரளவு கரெக்ட்டா எட்டாவது மாசம் சொல்லுவாங்க

ம்ம் என் பிள்ளை புது வருசத்துல பிறக்க போகுது என்று வள்ளி சிரித்து கொண்டு சந்தோசத்தோடு சொன்னாள் .

ஒரு வாரம் வேலைப்பளுவில் இருந்ததால் இந்த கர்ப்பம் ,குழந்தை என்கிற வார்த்தைகளை எல்லாம் சுத்தமாக மறந்து இருந்தான் விக்கி . இப்போது வள்ளி வந்து குழந்தை டெலிவரி என்று பேசவும் அவனுக்கு அப்போதுதான் சுவாதி ஞாபகம் வந்தது . அவள் இந்நேரம் கருவை கலைத்திருப்பாலா இல்லையா என்று யோசித்து கொண்டு இருந்தான் . கலைத்திருப்பாள் ஏன்னா என் மூலம் வர குழந்தையே எந்த பொண்ணு சுமப்பா அப்படின்னு நினைச்சு கிட்டு இருந்தான் .

மணி வந்து உன் வீட்ல திங்க எதாச்சும் இருக்கடா அப்படின்னு கேட்டப்பதான் அவன் நிஜ உலகத்துக்கு வந்தான் . கிச்சன்ல இருக்குடா சாப்பாட்டு ராமா என்றான் விக்கி சிரித்து கொண்டே

அவன் கிச்சன் போனதும் வள்ளி அவனிடிம் டேய் சுவாதி உன் ஆபிஸ்க்கு எல்லாம் வராலமே என்ன விஷயம் என்ன உங்க ரெண்டு பேருக்கும் லவ் வந்துருச்சா என்று கிண்டலடித்து சிரித்தாள் .

அத எல்லாம் ஒன்னும் இல்லை என்றான் வேகமாக .பின் அந்த பக்கம் இருந்து மணி எதையோ தின்னு கொண்டே வந்தான் . மணி வந்ததும் டேய் ஓட்ட வாயா சும்மா இருக்க மாட்ட எல்லா விஷயத்தையும் வீட்ல போயி உலறிடுவியா ரகசியமாவே எதையும் வச்சுருக்க மாட்டியா என்று அவனை திட்டினான் .

சாரி மச்சி ஆம்பிளக யார்கிட்ட வேணும்னாலும் ரகசியம் காக்கலாம் பொண்டாட்டிகிட்ட மட்டும் ரகசியம் காக்க முடியாது அது ரொம்ப கஷ்டம் என்று சொல்லி சிரித்தான் மணி .