உனக்கு எல்லாம் பீலிங்ன்னு ஒன்னு இருக்கா என்று கேட்டாள் கடுப்போடு . சரி சரி நான் பீலிங் இல்லாத மிருகமாவே இருக்கேன் .நீ வேணும்னா பிலிங் உள்ள தியாகிய இரு என்றான் பதிலுக்கு .
ஓகே நாளைக்கு அவங்க சொன்ன நேரத்துல சீக்கிரம் வந்து அபார்சென் பண்ணிடு என்றான் .
ஏன் நீ வரமாட்டியா என்றாள் . நாளைக்கு எனக்கு கம்பெனில ஒரு முக்கியாமான மீட்டிங் இருக்கு அதனால நான் நாளைக்கு வர மாட்டேன் நீயா போயிட்டு வா
நீ இத பண்ணதுக்கு அப்புறம் உனக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்ல .எந்த போனும் பண்ண கூடாது என் ஆபிஸ் பக்கமும் வர கூடாது . புரிஞ்சுச்சா என்றான் .
அவன் அவ்வாறு கேட்க சுவாதி ஒரு வித பயத்தோடும் குழப்பத்தோடும் அமைதியாக இருந்தாள் ,அதை பார்த்த விக்கி என்ன சுவாதி நான் சொல்றது புரிஞ்சுச்சா என மறுபடியும் கேட்டான் .
அவள் ஒரு குழப்போதொடு சரி என்றாள் பின் அவனிடிம் விக்கி.
என்னையே என் ஹோஸ்டல மட்டும் இறக்கி விட்ரு என்றாள் .அவனும் அவளை அழைத்து சென்றான் . அவளை இறக்கி விட்டு அப்பா இன்னைக்கோட இவ சங்காத்த முடிச்சுக்கணும் அப்படின்னு நினைச்சுகிட்டு கிளம்பினான் விக்கி .
ஆனால் சுவாதி மட்டும் ஒரு குழப்பமான நிலையில் அங்கேயே நின்று கொண்டு இருந்தாள்
பின் சுவாதி ஒரு வித குழப்பத்தோடு ஹோஸ்டல் போனாள் .அங்கு போனதும் அவளுக்கு அடுத்த நாள் அவள் அபர்சென் பண்ண போவதை எண்ணி பயந்து கொண்டு இருந்தாள் . அப்போது ஹாஸ்டலில் அவளுக்கு இருக்கும் தோழிகளில் ஒருவரான அஞ்சலி அக்கா வந்து பேசினார் .
என்னடி ரொம்ப டல்லா இருக்க இன்னும் உன் பழைய லவர் டேவிட்யே நினைச்சுகிட்டு இருக்கியா என கேட்டார்கள் .அவள் இல்லக்கா அவனாலாம் மறந்து பல மாசம் ஆச்சு என்றாள் சுவாதி .
அது அப்படின்னு இருக்கணும் பொன்னுகன்னா எதுக்கு எடுத்தாலும் அழுதுகிட்டு மட்டும் இருக்க கூடாது . அவன் முன்னாடி நீயும் ஒரு நல்ல பையனா கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை குட்டின்னு சந்தோசமா வாழனும் என்றார் .
நல்ல பையனா என்று சொல்லி மெல்ல சிரித்து விட்டு நல்ல பையன்லாம் இந்த காலத்துல கிடைப்பானுகளக்கா என்றாள் ஒரு விரக்தியோடு .ஏண்டி அப்படி சொல்ற என கேட்டார்கள் .இல்லக்கா இந்த காலத்துல எல்லா பசங்களும் லேடிஸ் விசயத்துல கொஞ்சம் வீக்கா இருக்க மாதிரியே எனக்கு தோணுது என்று அவள் விக்கியை மனதில் நினைத்து கொண்டு சொன்னாள் .
அது இந்த காலத்துல மட்டும் இல்ல எப்பயுமே பசங்க அப்படித்தான் ஏன் மன்னர் காலத்துல எடுத்துக்கோ நாம இப்ப ஆஹா ஓஹோன்னு சொல்ற எந்த மன்னர் ஆச்சும் ஒரு பொண்டாட்டியோட இருந்து இருக்காங்களா அதுக்குன்னு ஒரு அந்தபுரம்ன்னு ஒன்ன வேற வச்சுருகாங்கேசரி அத விடு இந்த காலத்து பசங்கள பத்தி கேட்டியே இந்த காலத்து பசங்க ரொம்ப ஒன்னும் கெட்டவெங்கெ இல்லடி
அவங்கே நம்ம மேல காதல விளுகுரதுக்கு முன்னாடி வேணா அப்படி இப்படி இருப்பாங்கே நம்மள லவ் பண்ண ஆரம்பிசுட்டாங்கே அவளவு சீக்கிரம் நம்மள விட்டு கொடுக்க மாட்டேங்கே
நாம கூட நமக்கு கல்யாணம் ஆன பிறகு நம்ம பழைய லவர மறந்துருவோம் ஆனா அவங்கே கல்யாணம் பண்ண கூட நம்மள மறக்க மாட்டங்கே .
அப்புறம் இந்த பொண்ணுக விசயத்துல வீக்கா இருக்க எல்லா ஆம்பிளையும் அவனுக்கு குழந்தை பொறந்ததுக்கு அப்புறம் பொறுப்பா மாறிடுவாங்க .குழந்தைன்கிற வார்த்தையே கேட்டதும் சுவாதிக்கு ஆர்வம் தோற்றி கொண்டது . நிஜமாவே குழந்தை பிறந்ததும் மாறிடுவாங்களா ஆம்பிளைக என்றாள் .
என்னடி அப்படி கேக்குற குழந்தைகதாண்டி நம்ம புருசனா நம்ம கூட தக்க வைக்க ஒரே வழி குழந்தைக மட்டும் நமக்கு பிறக்காட்டி நம்மள நாய் கூட மதிக்காது என்றார் .
என்ன டாக்டர் சொன்ன அதே வார்த்தைய அக்காவும் சொல்றாங்கன்னு சுவாதிக்கு ஒரு மாதிரியாக மனம் இளகியது .
என் வீடுகாரரையோ எடுத்துக்கோ ஆரம்பத்துல அவருக்கு என்னையே பிடிக்கவே பிடிக்காது ஆனா குழநதைக பிறந்ததுக்கு அப்புறம் ஆளே மாறிட்டாரு இப்ப என்னைய ரொம்ப விரும்பராறுன்னா அதுக்கு காரணம் அவருக்கு நான் குழந்தை பெத்து கொடுத்துதான்
இன்னைக்கு நான் மும்பைலயும் என் வீட்டுக்காரார் டெல்லிலயும் தனிதனியா இருக்கோம் ஆனா இன்னைக்கும் என் வீட்டுக்காரர் நான் என் குழநதைக எல்லாரும் வாரத்துல ரெண்டு நாள் மீட் பண்ணாலும் நாங்க எவளவு சந்தோசமா இருக்கோம் தெரியுமா அதாண்டி வாழ்க்கை
அது எல்லாம் இந்த காலத்து பசங்களுக்கும் பொண்ணுகளுக்கும் எங்க புரிய போகுது .உங்களுக்கு எல்லாம் பார்ட்டி செக்ஸ்ம் லவ்வும் மட்டும்தான் வாழ்கைன்னு நினைக்கிறிங்க சரி நான் போயி தூங்குரென் நீயும் தூங்கு என்று சொன்னார்கள் .
ஆனால் சுவாதிக்கு தூக்கம் வரவில்லை ,அவள் அந்த அக்கா சொன்னதையும் காலையில் ஆஸ்பத்திரியில் டாக்டர் சொன்னதையும் நினைத்து அவள் குழம்பி போனாள் .கருவை அழிப்பதா வேண்டாமா என்று இரவு முழுதும் யோசித்தாள் .
அடுத்த நாள் அவர்கள் சொன்னது எல்லாம் வைத்து நைட் சுவாதி கருவை அழிக்க வேண்டாம் என்றுதான் நினைத்து இருந்தாள் .ஆனால் காலையில் எழுந்த போது அவள் விக்கி சொன்னதுபடி யோசித்தாள் அவன் சொன்னது
படியும் பார்த்தால் குழந்தை பெறுவதிலும் வளர்ப்பதிலும் உள்ள சிக்கலை யோசித்து பார்த்தால் ஏன் மாடர்ன் குந்தி தேவியாக மாற வேண்டும் என்று நினைத்து கொண்டு அவள் கருவை கலைக்க முடிவு செய்து ஆஸ்பத்திரி சென்றாள் .
ஆஸ்பத்திரிக்கு போனாள் .அங்கு கொஞ்சம் நேரம் ஆகும் என்று சொன்னாதால் வெளியே காத்து இருந்தாள் .அவள் முதல் முறை அபர்சென் பண்ண போவாதால் பயத்தில் தலையில் கை வைத்தவாறே குனிந்து இருந்தாள் .
அப்போது யாரோ அவள் பின்னால் இருந்து அவள் முடியை மெல்ல பிடித்து இழுப்பது போல் இருந்தது யார் என்று அவள் கடுப்பில் திரும்பி பார்த்தாள் அங்கு ஒரு ஆறு மாத குழந்தை அவள் அம்மாவின் தோளில் சாய்ந்து கொண்டு இவளின் முடியை அதன் பிஞ்சு கைகளால் பிடித்து இழுத்து கொண்டு இவளை பார்த்து சிரித்தது .
இவளும் பதிலுக்கு சிரித்தாள் ,அந்த குழந்தையின் கையில் சிக்கிய தன் முடிகளை விலக்கினாள் சுவாதி . அப்போது அந்த பிஞ்சு விரலின் சபரிசம் அவளுக்கு ஏதோ ஒரு சொல்ல முடியாத தாய் உணர்வை தந்தது
அப்போது அக்குழந்தையின் அம்மாவும் திரும்பி பார்த்தாள் ,என்ன உங்க முடியையும் பிடிச்சு இழுத்துட்டானா என்று சிரித்து கொண்டே அந்த குழந்தையை ரவுடி பையலே எத்தன தடவ சொல்றது அடுத்தவங்க முடிய பிடிச்சு இழுக்க கூடாதுன்னு என்று அந்த குழந்தையை அந்த தாய் கொஞ்சினாள் ,