அப்படி இருந்த போதுதான் ஷோபனாவின் அப்பாவுக்கு உள்ள கடனை அடைக்க முடிந்தது. ஷோபனாவை கல்யாணம் செய்த பின்பு லாட்ஜில் ஒரு கொலை நடந்து விட, போலிஸ் கேஸ் அது இது என்று வாழ்க்கை பீஸ் போட்ட பீட்ஸாவாகிப் போனது. கேஸ் இன்னும் நடக்கிறது. லாட்ஜும் முன்பு போல் பணத்தை வாரிக் கொட்டவில்லை. ஷோபனா வேலைக்குப் போவது இது ஒரு காரணம். குடும்பத்தில் ஒரு ஆள் போலிஸில் இருந்தால் இது போல் கோர்ட் கேஸ் என்றால் உதவியாய் இருக்கும் என பாண்டியனுக்கு தோன்றியதால் வினோத் இவர்கள் வீட்டில் தங்கி இருக்கிறான்.
கார் விற்கும் அந்த டீலர் ஆபிஸில் வினோத் கேட்ட அண்ணியின் கொஞ்சல் குரல் தான் இது: “ம்ம்ம்ம்…வாவ்…..வாட் எ ஸ்வீட் எஸ்பீர்யன்ஸ்…..ஜ லவ் திஸ்……” என்று சொல்லி விட்டு கல கல வென கண்ணாடி ஜாடிக்குள் முத்துக்களை கொட்டும் சிரிப்புச் சத்தம் கேட்டது. அது ஷோபனாவின் சிரிப்பு தான். வினோத் சற்று குழம்பிப் போனான். கதவைத் தட்டலாமா என்று நினைத்ததும் “..ம்ம்ம்ம்..சூப்பர்..யெஸ்….இன்னும் கொஞ்சம் ஸ்பீடைக் கூட்ட முடியுமா?…கமான்…ஊ…ஊ……..யா ” மீண்டும் அண்ணி ஷோபனாவின் விநோதமான குரல்….அவனைத் தடுத்தது.
“..என்ன ஒரு சுகம்?….அய்யோ நிறுத்தாதிங்க…. வானத்தில பறக்கிற மாதிரியே இருக்கே…..ம்ம்ம்” என்று கொஞ்சலான அவள் குரல் கேட்டதும் வினோத் நிதானமின்றி மெதுவாய் கதவைத் தட்டினான். உள்ளே இருந்து ஒரு ஆண் வெளியே வந்து பார்த்து “கார் விளம்பரத்துக்கு ஆடியோ ரிகர்சல் போய்க்கிட்டு இருக்கு. இன்னும் டென் மினிட்ஸ்ல முடிஞ்சிடும்” என்றதும் அவனுக்கு விஷயம் புரிந்தது. இங்கு சேல்ஸ் டிபார்மண்ட்டில் தான் ஷோபனாவுக்கு வேலை.
ரிசப்ஷன் ஏரியாவுக்கு மீண்டும் வினோத் வந்த போது அங்கே ஷோபனாவின் தோழி அம்பிகா இருந்தாள். அவளைப் பார்த்ததும் ‘இவள் நாம் வரும் போது இல்லையே’ என்று நினைத்தாலும், கடலை போடலாம் என்ற குஷியோடு ‘ஹலோ ஆண்ட்டி’ என்றான். கையில் ஒரு வாரப் பத்திரிக்கையை புரட்டிக் கொண்டிருந்தவள் இவனைப் பார்த்து சிரித்தாள். நெருங்கியதும் பெர்ப்யூம் மணம் ஆளைத் தூக்கியது. அம்பிகாவுக்கு வயது 39. கணவருக்கு வெளிநாட்டில் வேலை. 15 வயதில் ஒரே ஒரு பையன் இருக்கிறான். அம்பிகாவுக்கு வினோத் மேல் ஒரு கண் உண்டு! தனியாய் இருக்கும் போது ‘என்னை எப்படா படுக்கையில் தள்ளப் போற?’ என்பது போல் தான் பார்ப்பாள். அம்பிகா கொஞ்சம் வெயிட் போட்டிருந்தாலும் சொர்ணமால்யா போல் கவர்ச்சி பிரதேசங்களை அளவுக்கு அதிகமாய் வைத்திருந்தாள்.
“டெய்லி ஒரு பாட்டில் பெர்ப்யூம் காலி பன்ணுவீங்க போல தெரியுதே?” என்று கேட்டு புன்னகைத்தான். அவள் “நான் சம்பாதிக்கிறேன்..வாங்குறேன்…..நீயா பே பண்ணுற? உன்னை எத்தனை தடவை சொல்லி இருக்கேன்…ஆண்ட்டின்னு கூப்பிடாதேன்னு…” என்று போலி சண்டைக்கு வந்தாள்.
“அண்ணியைப் பார்க்க வந்தேன். உள்ளே ஏதோ ரிகர்சல் போகுதுன்னாங்க..வெளியே இருந்து கேட்டால் வேறு ஏதோ நடக்குதோன்னு நினைச்சேன்”
“அப்படியா….என்ன நடக்குதுன்னு நினைச்சே?…”
