‘நோ ப்ராப்ளம் சுதா. அதான் சிவா இருக்கானே. அவன் கூட போயிடுவேன். யூ டேக் கேர்.
ம்ம். ஓகே.’
‘நான் வரேன் சுதா மிஸ்.’ (நான் சொன்னதும் புன்னகையுடன் எழுந்தாள்.)
‘ஓகே சிவா. ரொம்ப தேங்ஸ் வந்ததுக்கு.’
‘இதுல என்ன இருக்கு. டேக் கேர்.’
‘ம்ம். ஓகே.’
நானும் மாலதியும் கிளம்பினோம். லேசாக இருட்டத் தொடங்கியிருந்தது. அவளுடைய வீட்டுக்கு அடுத்த தெருவின் அருகில் இறக்கி விட்டேன். அவள் கண்களில் காதலுடன் என்னிடமிருந்து விடைபெற்று தெருவில் திரும்பி நடந்தாள்.
நான் மீண்டும் அலுவலகம் சென்று வேலைகளை முடித்துவிட்டு 8 மணிக்கு மேல் கிளம்பினேன். கிளம்பும் போது சுதாவிடமிருந்து போன் வந்தது.
‘சொல்லுங்க சுதா.’
‘ஹலோ சிவா.’
‘ம்ம்ம். அம்மா வந்துட்டாங்களா?’
‘ஆமா சிவா. வந்துட்டாங்க.’
‘ஓ. குட். இப்போ எப்படி இருக்கு உடம்பு?’
‘யா. நவ் ஐ பீல் பெட்டர்.’
‘ம்ம்ம்’
‘உங்களத்தான் சரியா கவனிக்க முடியல. வீட்டுக்கு முதல் தடவ வந்திருக்கீங்க. ஒரு காபி கூட போட்டுத்தர முடியல.’
‘இட்ஸ் ஓகே சுதா.’
‘அதுதான் சங்கடமாயிருந்துச்சு. அதான் போன் பண்ணி சாரி சொல்லலாம்னு நெனச்சேன்.’
‘ஓகே ஓகே.. இதுல என்ன இருக்கு? கூல்.’
‘ம்ம்ம். தேங்ஸ் சிவா.’
‘ஓகே சுதா. டேக் கேர்.’
‘ஓகே.’
‘பை.’
‘பை சிவா.’
போனை கட் பண்ணிவிட்டு வெளியில் சில நண்பர்களை சந்தித்துவிட்டு நான் வீட்டுக்கு சொல்ல 11 மணியாகியிருந்தது. போனில் மெசேஜ் டோன் கேட்டு எடுத்துப் பார்த்தேன். சுதாவிடமிருந்து வந்திருந்தது.
‘குட் நைட் சிவா.’
நான் போனை வைத்துவிட்டு கை, கால் முகம் எல்லாம் கழுவி விட்டு சாப்பிட்டேன். என் அறைக்கு வந்தபோது மணி 12 ஐ தொட்டிருந்தது. சுதாவின் மெசேஜ் நினைவுக்கு வர, ‘குட் நைட் சுதா’ என்று டைப் செய்து அனுப்பினேன். இரண்டு நொடிகள் கழித்து ‘மெசேஜ் டெலிவர்டு டூ மாலதி’ என்று வந்தது. அதிர்ந்தேன்.
‘சே.. பழக்க தோசத்துல மாலதி நம்பருக்கு அனுப்பிட்டேனே..’ என்று என்னை நானே நொந்துகொண்டு கட்டிலில் சாய்ந்தேன். மாலதிக்கு போன் பண்ணி சொல்லலாமா என்று நினைத்தேன். ஆனால் நள்ளிரவு என்பதால் அவள் கேட்டால் சொல்லிக் கொள்ளலாம் என்று களைப்புடன் கண்ணை மூடினேன். சில நிமிடங்கள் கழித்து மெசேஜ் டோன் ஒலிக்க, எடுத்துப் பார்த்தேன். மாலதிதான்.
‘யூ ச்சீட். ஐ ஹேட் யூ. குட் பை பார் எவர்.’