சத்தியமா நீ நினைக்கிற மாதிரி எதுவுமே நடக்கல 5

5 நிமிடத்தில் கார்த்திக் கையில் மெடிசின் கவர் மற்றும் ஜூஸ் உடன் வந்தான்.
சிரித்த முகமாக அவளிடம் வந்து “ ஒன்னும் பெரிய பிரச்சனை இல்ல. லைட்ட பீவர் தான். டேப்லெட் மெடிசின் சாப்பிட்டா சரி ஆகிடுமாம். நேத்துல இருந்து ஒன்னும் சாப்பிடல. இந்தா இந்த ஜூசை குடி என்றான்.

ராஜி அவனை பார்க்காமல் பேசாமல் முகத்தை திருப்பி கொண்டாள். அவனை விட்டு தள்ளி சென்று பேட்டின் ஓரமாக அமர்ந்து கொண்டாள்.

கார்த்திக் அவளை பார்க்க அவன் நிழல் அவள் மீது விழாமல் பெட்டில் விழுந்தது.

“ ஒஹ் நேத்து சொன்னத பாலோ பண்றியா. சரி இருக்கட்டும். முதல்ல இந்த ஜூசை குடி. “

அவளை நோக்கி ஜூசை நீட்ட அவள் வாங்காமல் சுவரை பார்த்து கொண்டிருந்தாள்.

“ இப்படியே எவ்ளோ நேரம் இருப்ப. சரி இங்க வைக்கிறேன். எடுத்து குடி. “

டேபிளில் ஜூசை வைத்து விட்டு அவளை விட்டு தள்ளி அமர்ந்து கொண்டான்.

ஆனால் ராஜி அதை எடுக்காமல் வெறுப்பாக சுவரை பார்த்து கொண்டிருந்தாள்.

கார்த்திக் அவள் ஜூசை குடிக்கிராளா என பார்த்து கொண்டிருந்தான். அனால் ராஜியிடம் எந்த அசைவும் தெரியவில்லை. சிரித்து கொண்டே போனை எடுத்து தனது அம்மாவிற்கு கால் செய்தான்.

ராஜி அவன் போன் செய்வதை பார்த்த உடன் அவன் போன் பேசிக்கொண்டே வெளிய சென்று விடுவான் என நிம்மதி அடைந்தாள். ஆனால் அவன் எதிர் முனையில் போனை எடுத்ததும் அம்மா என்று அவன் சொன்னதும் உடனடியாக ஜூசை எடுத்தாள்.

“ அம்மா நல்லா இருக்கேன். உன் மருமக தான் நல்லா இல்லை. “

“…………”

“ இல்லமா சின்னதா காய்ச்சல் தான். “

“………”

“ ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கோம். “

“………..”

“ சாப்பிட மாட்டேங்குரா. ஜூஸ் கொடுத்தேன். குடிக்கல. “

“………..”

“ இதோ கொடுக்குறேன். “ போனை கொண்டு வந்து அவன் அருகில் வைத்தான்.

ராஜி அதை எடுக்கவா வேண்டாமா என யோசித்தாள். பேசாமல் இருந்தாள் அத்தை தவறாக நினைக்க கூடும் என யோசித்து விட்டு போனை எடுத்து பேசினாள்.

“ அத்தை நான் நல்லா தான் இருக்கேன். ஜூஸ் குடிச்சிட்டேன் அத்தை. அவுங்கதான் தேவை இல்லாம உங்களுக்கு போன் பண்ணிட்டாங்க. “

“……….”

“ நான் பார்த்துகிடுறேன் அத்தை நீங்க கவலை படாம இருங்க. “

“……….”

“ சரிங்க அத்தை.. “

சில பல சம்பிராதய நலம் விசாரிப்புகளுடன் போன் இணைப்பு துண்டிக்கப்பட ராஜி கோவமாக கார்த்திக்கை பார்த்தாள்.

“ நானும் நீ குடிப்பனு பார்த்தேன். ஆனா நீ குடிக்கிற மாதிரி தெரியலை. அதான் அம்மாக்கு கால் பண்ணேன். “

“ எதுக்கு தேவை இல்லாம இப்படி செய்யுறீங்க. நான் உங்க கிட்ட வந்து கேட்டேனா. எனக்கு உடம்பு சரி இல்ல. வந்து ஹெல்ப் பண்ணுங்கன்னு. “

“ முதல்ல உன்கிட்ட சாரி சொல்லிக்கிடுறேன். நேத்து நான் பேசினது தப்பு தான். “

“ எனக்கு நீங்க எந்த விளக்கமும் கொடுக்கணும்னு தேவை இல்லை. நேத்து நீங்க சொன்ன வார்த்தைக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா. நான் ஒரு ப்ப்ப்பப்ப்ப். சொல்லவே அசிங்கமா இருக்கு. “ அழுத முகத்துடன் அவள் கூற

“ ராஜி நான் . “ அவன் எழுந்து அவள் அருகில் செல்ல

“ இல்ல நிறுத்துங்க. கிட்ட வராதீங்க. நீங்க நீங்களாவே இருங்க. உங்கள கட்டாயபடுத்தி கல்யாணம் பண்ணிகிட்டதுக்கு சாரி. இப்போ எனக்காக ஒரு ஹெல்ப் பண்றீங்களா. “

“ சொல்லு ராஜி நான் எதுவேனாலும் பண்றேன். “

“ உங்க கிட்ட இதை கேட்கவே அசிங்கமா இருக்கு. என் வாழ்க்கைளையே மனசே இல்லாம கேட்குற உதவி இதுவாக தான் இருக்கும். என்ன ரூம்ல விட்டுட்டு நீங்க திரும்பி பார்க்காம போய்டுங்க. ஆபிஸ் வந்தா கூட நீங்க எனக்கு பாஸ்ங்கற முறைல மட்டும் நம்ம ரிலேஷன் இருக்கட்டும். “

கார்த்திக் ஒன்றும் பேசாமல் அமைதியாக வெளியேறினான். ராஜி கண்ணீரை துடைத்து விட்டு அவன் போவதையே பார்த்தாள்.

ராஜியை ரூமில் கொண்டு போய் சேர்த்து விட்டு அவள் கூறியதை போல திரும்பி பார்க்காமல் அங்கிருந்து தனது பிளாட்டிற்கு வந்து விட்டான்.

ரூமிற்கு வந்தவன் சாக்ஸை கூட கழட்டாமல் சோபாவில் அமர்ந்தான்.

அவனுடைய வாழ்க்கையில் எத்தனையோ பெண்களை அலட்சியமாக கடந்து வந்திருக்கிறான். ஆனால் ராஜியை அவனால் அலட்சிய படுத்த முடியவில்லை. அவளுடன் இருந்த பழைய காலங்களை நினைத்து பார்த்தான்.

அவளுடன் முதல் முதலாக பஸ்ஸில் நெருக்கமாக அமர்ந்து வந்தது, வீட்டில் அவள் செய்த குறும்புகள், அவளது சிரித்த முகம், அவன் வீட்டிற்கு வந்து அவன் வாமிட் செய்ததை கைகளில் அவள் ஏந்தியது, கல்யானத்தன்று அவள் கழுத்தில் தாலி கட்டியது, முதல் இரவு அறையில் அவள் செய்த ரகளை முதல் இறுதியாக நேற்று நடந்தது வரை நினைவலைகளில் அசை போட்டான்.

இது தான் காதலா. இது சுகமா வலியா. இது என்னவிதமான அவஸ்தை. அவன் பார்க்கும் இடமெல்லாம் இப்போது ராஜி நின்று கொண்டிருந்தாள். ராஜியுடன் பைக்கில் சென்றது நினைவிற்கு வர வேகமாக பெட் ரூம் சென்று அன்று அவள் அவனை கட்டி கொண்டு பைக்கில் செல்லும் போது அவன் அணிந்திருந்த சட்டையை, துணிகளை கலைத்து தேடி எடுத்தான். அதை கண்டதும் சந்தோசத்தில் அதை எடுத்து தான் மார்போடு அனைத்து அந்த சட்டை வாசத்தை முகத்தில் வைத்து ஆழமாக சுவாசித்தான்.

அப்படியே பெட்டில் சரிந்து விழுந்து அதை தன்னோடு அணைத்து கொண்டான். ராஜி சாரி ராஜி. இனி நீயே என்னை விட்டு விலகி போனாலும் உன்ன விட்டு நான் போக மாட்டேன். ஐ லவ் யூ ராஜி. பொண்ணுங்கன்னா ஏமாத்திட்டு போய்டுவாலுக. அவங்க லவ்வெல்லாம் உடல் சார்ந்ததுன்னு தான் நான் இவ்ளோ நாட்களா நினைச்சிட்டு இருந்தேன். ஆனா நீ வேற ராஜி. நீ எனக்காக பண்ணின ஒவ்வொரு விஷயத்துலயும் அவ்ளோ லவ் இருக்குன்னு இப்போ தான் எனக்கு புரியுது. இப்போ தான் நிராகரிப்பின் வலி என்னனு எனக்கு புரியுது. நீ ஆசைப்பட்ட கார்த்திக்கா, உன்னோட கார்த்திக்கா நான் வரேன் ராஜி.

அந்த சட்டையை எடுத்து வைத்து விட்டு இளையராஜா பாடல்களை கேட்க தொடங்கினான். இளையராஜா இசையை மீட்டி அதில் லயிக்க தொடங்கினான். இது வரை குத்து பாடல்களாக கேட்டு கொண்டிருந்த கார்த்திக் முதல் முதலாக இளையராஜாவிற்கு அடிமை ஆனான். நா முத்துகுமாரின் அதி தீவிர ரசிகன் முதல் முறையாக அவர் எழுதிய காதல் பாடல்களை தேடி கொண்டிருந்தான். முத்துக்குமார் சாதாரண பாடல்களை கூட மெய் சிலிரிக்க வைக்கும் கலைஞன் காதல் பாடல் என்றாள் கேட்கவா வேண்டும். அதிலும் ஸ்ரேயா கோஷலின் குரலில் உச்சத்தில் சென்று

காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்.

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே

7 Comments

  1. Poda thevidaya payable, unnala oru story olunga poda mudiyatha ne la ethuku uyirodu eruka poi sagu quikq

  2. Bro/sis,please continue posting of this love story,i really liked the story apart from lust i enjoy their care and moments,everyday i check only for this story instead of reading another lust stories im addicted to this one so make post everyday,i hope you receive…

  3. Bro please continue panunga bro story nalla poguthu bro it was soo intresting

  4. Bro please continue panunga bro story nalla poguthu bro it was soo intresting sekiram upload panunga bro

  5. it was soo intresting sekiram upload panunga bro

  6. it was soo intresting sekiram upload panunga bro please

  7. Continue pannunga bro story nalla irukku

Comments are closed.