சத்தியமா நீ நினைக்கிற மாதிரி எதுவுமே நடக்கல 4 Like

“ இல்ல மீரா அவன் மேல தப்பு இல்ல. அவனுக்கு இதுல துளியும் விருப்பம் இல்ல, இப்போ வரைக்கும். இதுல அவனை குறை சொல்லி என்ன பிரயோஜனம். “

“ அப்போ ஏன் ராஜி அவனுக்காக இவ்ளோ கஷ்டபடுற நீ. “

“ லவ். அவன் மேல நான் வச்சிருக்குற உண்மையான காதல். இன்னைக்கு இல்லாட்டாலும் அவன்கூட ஒரு நாள் என் வாழ்க்கை சந்தோசமா இருக்கும் மீரா. “

“ ராஜி முதல்ல நீ உங்க அத்தைகிட்ட சொல்லி சீக்கிரமா இதுக்கு ஒரு முடிவு கட்டு. “

“ யாரையும் போர்ஸ் பண்ணியோ, பிளாக்மெயில் பண்ணியோ லவ் பண்ண வைக்க முடியாது. அவனுக்கும் ஒரு நாள் லவ் வரும். அது வரைக்கும் நான் எந்த கஷ்டத்தை வேணும்னாலும் தாங்கிகிடுவேன். “

“ ராஜி உன்ன நினைச்சா எனக்கு பாவமா இருக்கு. நீ என்ன முடிவு எடுத்தாலும் நான் அதுக்கு சப்போர்ட்டா இருப்பேன். நீ தைரியமா இரு. எல்லாம் மாறும். “

“ நானும் அந்த நம்பிக்கைல தான் இருக்கேன். “

“ என்ன மன்னிச்சிடு ராஜி. நான் தேவை இல்லாம உன்ன கஸ்டபடுத்திட்டேன்.உன்ன தப்பா வேற பேசிட்டேன். சாரி ராஜி. “

“ நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும். என்னோட கஷ்டத்தை யாரிடமாவது சொல்லி அழணும் போல இருந்துச்சு. இப்போ அழுதுட்டேன். இனி நிம்மதியா இருப்பேன். ஆனா நீ எனக்கு பண்ணின சத்தியத்தை மறந்துடாத. இந்த விஷயம் உன்னையும் என்னையும் தவிர யாருக்கும் தரிய கூடாது. “

“ சரி ராஜி. லேட் ஆகிடுச்சு. சீக்கிரம் ஆபிஸ் கிளம்பலாம் வா. “

இருவரும் சாப்பிட்டு விட்டு ஆபிஸ் கிளம்பி செல்ல காலை வேலைகள் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. இடைவேளை நேரத்தில் மீராவும் அரவிந்து எதிர் எதிர் டேபிளில் அமர்ந்திருக்க அரவிந்த் மீராவிடம் கேட்டான்.

“ என்ன சொல்ற மீரா. அவுங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இவ்ளோ விஷயம் நடந்துருக்கா. என்னால நம்பவே முடியல. “

“ ஆமா அரவிந்த். உனக்கு இந்த விஷயம் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத. அவுங்க ரெண்டு பேரயும் நாம தான் எதாச்சும் பண்ணி சேர்த்து வைக்கணும். “

“ நீ சொல்ற மாதிரி நாம சேர்த்து வைக்க ட்ரை பண்ணலாம் தான். ஆனா ஒருத்தர் மட்டும் லவ் பண்ணி என்ன பண்றது. கார்திக்க எப்படி லவ் பண்ண வைக்கிறது. அவன்தான் எந்த பொன்னையும் மதிக்கிறது இல்லையே.”

“ இல்ல அரவிந்த் அவனுக்கு ஈகோ தான். மற்றபடி அவன் கேரக்ட்டர்லா நல்லா தான் இருக்கு. “

“ இப்போ என்ன பண்ணனும்னு சொல்ற மீரா. “

“ அவன் நடிக்கிறான்னு நான் நினைக்கிறேன். ஒன்னு பண்ணுவோம். “ ஏற்ன்று தன்னுடைய பிளானை அரவிந்திடம் சொன்னாள் மீரா.

“ மீரா இது சரி வருமா. “

“ வரும் டா. நாம ட்ரை பண்ணி பார்க்கலாம். “

“ ம்ம்ம்ம்ம்ம். சரி நான் பண்றேன். தப்பா எதுவும் நடக்காம இருந்தா சரி தான். “

“ நீ பண்ணு அரவிந்த் சக்செஸ் ஆகும் . “

பேசியபடி இருவரும் கேபின் சென்றனர். மீரா ராஜியிடம் சென்று ராஜி உன் போன கொஞ்சம் கொடேன். என்னோட போன்ல பேக் முடிஞ்சிச்சு. ஆபிஸ் விட்டு போனது தான் பண்ணனும். வீட்ல நைட் கிளபுற விஷயத்தை சொல்லணும் என்றாள்.

அரவிந்த் கார்த்திக் கேபிணிற்கு சென்று அதே பொய்யை சொல்லி கார்த்திக்கின் போனை வாங்கினான்.

திட்டமிட்டபடி ராஜியின் போனில் இருந்து கார்த்திக் நம்பருக்கு மெசேஜ் செய்தாள்.
“ உங்களுக்காக டேரேசில் காத்திருக்கிறேன். உங்களிடம் பேச வேண்டும். நீங்கள் வரவில்லை என்றாள் சத்தியமா மாடில இருந்து குதிச்சிடுவேன். “மெசேஜ் டைப் செய்து அனுப்பினாள்.

கார்த்திக்கின் போனில் இருந்து ராஜியின் நம்பெருக்கு அரவிந்த் மெசேஜ் செய்தேன்.

“ ராஜி எல்லாத்துக்கும் சாரி. உங்கிட்ட நான் கொஞ்சம் பேசணும். நீ என்ன கட்டிபிடிச்சி எனக்கு முத்தம் கொடுத்தா உனக்கு சம்மதம்னு நான் புரிஞ்சிகிட்டு நாம புது வாழ்க்கைய ஆரம்பிக்கலாம். உனக்க காத்திருப்பேன். “

கார்த்திக்கின் போனில் இருந்து ராஜி நம்பருக்கு மெசேஜ் செய்தான்.

அனுப்பி விட்டு கார்த்திக்கிடம் போனை கொடுத்தான்.

மீரா மெசேஜ் வந்தவுடன் ராஜியிடம் போனை கொடுத்து விட்டு ராஜி மெசேஜ் வந்த மாதிரி இருந்துச்சு என்று சொல்லி விட்டு ஒன்றும் தெரியாததை போல வேலைய பார்க்க தொடங்கினாள்.

ராஜி மெசேஜை பார்த்து விட்டு மீராவிடம் சிரித்த முகமாக “ ஹே மீரா. ஒரு குட் நியூஸ் டி. “

“ என்ன ராஜி.”

“ அவன் தான் மெசேஜ் பண்ணிருக்கான். நான் ஒரு இடத்துக்கு போறேன். போயிட்டு வந்து நான் அந்த விஷயத்தை சொல்றேன்” என்று சொல்லி விட்டு வேகமாக எழுந்து ஆபிஸ் டெரேசிற்கு ஓடினாள்.

கார்த்திக் எதேச்சையாக தனது போனை பார்க்க அதி இருந்த மெசேஜ் எடுத்து படித்தான்.

“ ச்சை இவள் என்ன லூசா. “ ராஜி சீட்டை நோக்கி பார்க்க அவள் இல்லாததை கண்டு வேகமாக எழுந்தான்.

இதை பார்த்து கொண்டிருந்த மீராவும் அரவிந்தும் பிளான் சக்சஸ் என்று தம்சப் செய்து கொண்டு அவர்களை பின் தொடர்ந்தனர்.

கார்த்திக் வேகமாக மொட்டை மாடி நோக்கி செல்ல அங்கு ராஜி அவனுக்காக காத்து கொண்டிருந்தாள். பின்னால் வந்த மீராவும் அரவிந்தும் அவர்களுக்கு தெரியாத வண்ணம் மறைந்து கொள்ள, ராஜி சிரித்த முகத்துடன் வேகமாக ஓடி வந்து கார்த்திக்கை கட்டி பிடித்து அவன் உதட்டில் முத்தம் இட்டாள்.

இதை சற்றும் எதிர் பார்க்காத கார்த்திக் “ ஏய் ச்சீ. “ என்று அவளை தள்ளி விட்டு அவள் கன்னத்தில் பளார் என்று ஒரு அரை விட்டான்.

இதை சற்றும் எதிர் பாராத ராஜி கன்னத்தில் கை வைத்து கொண்டு அவனை மலங்க மலங்க பார்த்தாள்.
மீராவிற்கும் அரவிந்திற்கும் இது சற்று அதிர்ச்சியாக இருந்தது. மீரா அவர்களிடம் செல்ல நகர அரவிந்த் அவள் கையை பிடித்து தடுத்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *