சத்தியமா நீ நினைக்கிற மாதிரி எதுவுமே நடக்கல 3 Like

“ ஆங். ஆமா ஆமா.

“ கட் பண்ணு. எல்லாம் முடிஞ்சுதுள்ள. போகலாமா. “

“ இல்ல ஒன்னே ஒன்னு.”

“ இன்னும் என்ன. “

“ நீங்க எனக்கு செலக்ட் பண்ணின மாதிரி நான் உங்களுக்கு ஒரு ஷர்ட் செலக்ட் பண்ணனும். “

“ எனக்கு எடுத்துக்க எனக்கு தெரியும். நீ ஒன்னும் எனக்கு செலக்ட் பண்ண வேண்டாம்.”

“ ப்ளீஸ் ப்ளீஸ். “

“ அம்மாக்கு போன் அடிச்சி பேசு. டைம் இப்போவே 9 ஆகிடுச்சு. சீக்கிரம் கிளம்பனும்.”

“ ம்ஹூம் மாட்டேன். ஒரு ஷர்ட் ஒரே ஒரு ஷர்ட் ப்ளீஸ். பில் கூட நான் பெ பண்றேன். ப்ளீஸ் இதுக்கு மேல நான் ஒன்னும் கேட்க மாட்டேன். அடுத்த செகண்ட் கால் பண்ணி பேசிடுறேன். ப்ளீஸ். ஒரு பிரெண்டா நினைச்சிக்கோங்க. ப்ளீஸ் ப்ளீஸ். “

“ ஸ்ஸ்ஸ்ஸ்.” பெருமூச்சு விட்டு வா என்றான்.

இது நாள் வரை பார்மல் ஷர்ட் மட்டும் அணிந்திருந்த கார்த்திக்கை பார்த்தவளுக்கு அவளை கேசுவல் ஷர்ட் மற்றும் ஜீன்ஸில் பார்க்க ஆசைப்பட்டு அவனுக்காக ஒரு ஹால்ப் ஹேன்ட் ஷர்ட், அதற்கு மேட்சாக ப்ளூ ஜீன்ஸ் ஒன்றையும் எடுத்தாள்.

“ இந்தாங்க இது உங்களுக்கு நல்லா இருக்கும். “

“ இதெல்லாம் நான் போட மாட்டேன். எனக்கு இது செட்டும் ஆகாது.”

“ நான் சொல்றேன். உங்களுக்கு இது நல்லா இருக்கும். வாங்கிகோங்க. “

கார்த்திக் ஒன்றும் பேசாமல் வாங்கி கொண்டான்.

பில் கவுண்டரில் ராஜி பேன்ட் ஷர்ட் மட்டும் பில் கொடுத்து விட்டு சாரிக்கு என் ஹஸ்பேண்ட் கொடுப்பாங்கன்னு சொல்லி விட்டு கார்த்திக்கிடம் வந்தாள்.

“ பில் கவுண்டர்ல உங்கள கூப்பிடுறாங்க. “

“ உங்க ஹஸ்பண்ட வர சொல்லுங்கன்னு சொன்னாங்க. ஏன்னு தெரியல. “

“ சரி இரூ வரேன். “

ராஜி அவன் போவதையே பார்த்து கொண்டிருந்தாள்.

பில் கவுண்டர் சென்று அங்கு இருந்த பெண்ணிடம் “ சொல்லுங்க. என்ன ப்ராப்ளம். “ என்றான்.

“ மொத்தம் பில் 9999.00 சார். உங்க வொயிப் நீங்க பே பண்ணுறதா சொன்னாங்க சார். “

“ என்னது 9999.00 யா.

“ ஆமா சார்.”

“அவளா எடுத்திருந்தா கூட ஆயிரத்துல முடிச்சிருப்பா. என்னைய செலக்ட் பண்ண சொல்லி ஒரே நாளுல 10000 க்கு ஆப்பு வச்சிட்டாலே. 1000 க்கு சட்டையும் பேண்ட்டும் வாங்கி கொடுத்து 10000 க்கு செலவு இழுத்து விட்டுட்டா.”

“ ம்ம்ம்ம் . இந்தாங்க கார்டை கொடுத்தான். “

ஒரே தேய்ப்பில் அவன் அக்கவுண்டில் இருந்து 10000 எடுக்கப்பட்டது.

ராஜியிடம் வந்து அவளை முறைத்து கொண்டே “ இந்த பிடி. ஒரு நாள் இல்ல இல்ல 4 மணி நேரம் உன்கூட இருந்ததுக்கு எனக்கு 10000 செலவு இழுத்து விட்டுருக்க. உன்கூட வாழ்நாள் முழுக்க இருந்தா நான் மொட்டை தான் அடிச்சிக்கனும். “

“ கண்ணு வைக்காதீங்க மாமா. நீங்க வாங்கி தராம வேற யாரு எனக்கு வாங்கி தர போறாங்க. ஒரு நாள் தான. அதுவும் இல்லமா நீங்க தான எடுத்து கொடுத்தீங்க.”

“ எல்லாம் என் தலை எழுத்து. “

அந்நேரம் மீண்டும் போன் அடிக்க ராஜி போனை பார்த்து விட்டு “ அத்தை தான் “ என்றாள்.

“ பேசு பேசு “ என்றான்.

“ அத்தை எப்படி இருக்கீங்க அத்தை. நல்லா இருக்கீங்களா. மாமா எப்படி இருக்காங்க. “

“ நான் நல்லா இருக்கேன்மா. என்னமா ஊருக்கு போனதும் எங்களை எல்லாம் மறந்துட்டியா. போன் பண்ணவே இல்லமா. அங்க சந்தோசமா தான இருக்கீங்க. “

“ உங்க பிள்ளை கூட தான இருக்கேன். சந்தோசமா தான இருப்பேன். நீங்க எப்படி இருக்கீங்க அத்தை. “

“ இங்க எல்லாரும் நல்லா இருக்கோம்மா. என்னமா சாயங்காலத்துல இருந்து போன பண்றேன் எடுக்கவே இல்ல. வேலையா இருக்கியாமா. “

“ அய்யோ அதெல்லாம் இல்லை அத்தை நான் அவுங்க கூட தான் வெளியே ஷாப்பிங் வந்தேன். அதான் எடுக்க முடியல. அவுங்களும் இங்க பக்கத்துல தான் இருக்காங்க. “ ராஜி பேசிக்கொண்டே கார்த்திக்கை பார்த்து கண் அடித்தாள்.

( அடிப்பாவி. அப்போ கடைசியா ரெண்டு தடவை கால் பண்ணினது அந்த சனியன் இல்லையா. அம்மா தானா. இது உலக மகா நடிப்புடா சாமி. கொஞ்ச நேரத்துல என்ன கிறுக்கன் ஆக்கிட்டாலே. கார்திக்கிருக்கு தலை சுற்றியது.)

“ கார்த்திக் உன்கிட்ட விஷயத்தை சொன்னானாமா . “

“ ஆமா அத்தை. சொன்னாங்க. நாங்க ரெண்டு பேரும் கண்டிப்பா வந்துடுறோம்.”

“ அவன்கிட்ட கொடுமா போனை. “

“ இந்தாங்க அத்தை உங்க கிட்ட பேசணுமாம். “

போனை அவளிடம் இருந்து பிடுங்கி காதில் வைத்தான். அதன் பின் இருவரும் சிறிது நேரம் பேசி விட்டு இறுதியாக போன் கட் செய்தவுடன் தான் கார்த்திக்கிற்கு நிம்மதியாக இருந்தது.

“ பாவி பாவி. என்ன எப்படிலா ஏமாத்திட்ட உன்ன. “

“ மாமா சாரி மாமா . இன்னைக்கு ஒரு நாள் தான் நீங்க என்க்கோடா இப்படி இருப்பீங்க. அப்புறம் என்னைக்கோ. அதான் கூட கொஞ்ச நேரம் இருக்கலாம்னு ஒரு சின்ன பொய் சொன்னேன். சரி இப்போ கிளம்பலாமா.”

“ எங்க போக. உன் ரூம்க்கு போக உனக்கு வலி தெரியும்ல. இவ்ளோ நேரம் என்ன அழைய விட்டல்ல. தனியாவே ரூம்க்கு போ.”

“ ஆமா. இவ்ளோ தூரம் நான் பண்ணினதெல்லாம் கண்டு பிடிக்க தெரியல. இப்போ என்ன பழி வாங்குறாங்களாம். போங்க மாமா. உங்களுக்கு புத்தியே இல்ல. நீங்க கடைசில இதை தான் சொல்லுவீங்கன்னு எனக்கு தெரியும். அதான் நீங்க பில் கொடுக்க போன நேரத்துல கேப் புக் பண்ணிட்டேன். அங்க பார்த்தீங்க OLA எனக்காக வெய்ட்டிங். “

“ நீங்க போயிட்டு வாங்க மாமா.. கோவத்துல கூட அழகா இருக்க. என் செல்லம்.. பாய் அழகா “. சிரித்து கொண்டே அவனுக்கு டாட்டா காட்டி விட்டு கேப்பில் ஏறினாள்.

கார்த்திக் கோவத்தில் பைக்கை எட்டி உதைத்தான். ராஜி அவனை பார்த்து சிரித்து கொண்டே கார் ஜன்னல் வழியாக அவனை பார்த்தாள்.

ராஜி ரூமிற்கு சென்று வாங்கி வைத்தவற்றை மீராவிற்கு தெரியாமல் மறைத்து வைத்து கொண்டிருந்தாள். அந்நேரம் மீரா வரவும் சரியாக இருந்தது. ராஜி அவளை கண்டதும் சூட்கேசை மூடி விட்டு அவளை பாரதி இயல்பாக திரும்பினாள்.

“ என்ன ராஜி. எதையோ உள்ள எடுத்து வைக்கிற. ஏன் இவ்ளோ நேரம். என்ன ஆச்சு. “

“ ஒன்னும் இல்ல மீரா. அப்பா சொன்னவங்க வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. அதுவும் இல்லமா ட்ராபிக் கொஞ்சம் அதிகமா இருந்துச்சு. அதான் லேட் ஆகிடுச்சு. “

“ சரி ஆள் பார்க்க எப்படி இருந்தான். தேருவானா தேரமாட்டானா. “

“ எனக்கு 50/50. தான். பேசினதுல வச்சி பார்க்கும் போது ஓகே தான். ஆனா கேரெக்டர் எப்படி இருக்கும்னு தெரியல. வீட்ல என்ன சொல்லணும் தெரியல. அதான் அப்பகிட்ட நாளைக்கு கிளம்பி வந்து பதில் சொல்றேன்னு சொல்லிருக்கேன். “

( நாளை சொன்னால் மீரா துருவி துருவி கேள்வி கேட்க கூடும் என்பதால் இன்றே நாளை செல்வதற்கும் சேர்த்து இன்றே போய் சொல்லி வைத்தாள். )

“ என்ன ராஜி இப்படி சொல்ற. இது உன் வாழ்க்கை. நீதான் சரியா எடுக்கணும். “

“ எனக்கு தான் ஆல்ரெடி நல்ல வாழ்க்கை அமைஞ்சிடுச்சே. “

“ என்ன சொல்ற நீ. எனக்கு ஒண்ணுமே புரியல. நாளைக்கு போய் அப்பாகிட்ட என்ன தான் சொல்ல போற. “

“ பிடிக்கலன்னு சொல்ல போறேன். “

“ எனக்கு என்னமோ நீ சரி இல்லன்னு தோணுது. சரி நீ ஊருக்கு போயிட்டு வா. அப்போதான் நீ குழப்பத்துல இருந்து வெளிய வருவ. ஆமா எத்தனை நாள் கழிச்சி வருவ. “

“ எப்படியும் 5 நாள் ஆகும்.”

“ சரி ராஜி போயிட்டு வா. நானும் நீ வந்த ஒரு வாரம் கழிச்சி ஒர்ருகு போயிட்டு வரணும். சோ நீ வந்ததும் நான் போயிட்டு வரேன். “

“ ம்ம்ம் சரி மீரா. “

“ ராஜி எதையும் போட்டு குழப்பிக்காத. எல்லாம் நல்லதாவே நடக்கும் சரியா இப்போ படுத்து நல்லா தூங்கு. நாளைக்கு பேசிக்கலாம். “

“ ஓகே மீரா. “

அவளிடம் பேசி விட்டு ராஜி மெத்தையில் படுத்து பெட்ஷீட்டை எடுத்து மூடினாள். அதுவரை முகத்தை சோகமாகவும் குழப்பமாகவும் வைத்திருந்தவள் பெட்ஷீட்டால் மூடியதும் சந்தோசமாக மாற்றினாள்.

( “அய்யோ கடவுளே இன்னைக்கு எவ்ளோ சந்தோஷம். எல்லா கிரேடிட்சும் அத்தைக்கு தான் சொல்லணும். அவுங்க இல்லை என்றாள் இன்னைக்கு இவ்ளோ சந்தோசமாகவே இருந்திருக்க முடியாது. கார்த்திக் உன்கூட இருந்த ஒரு ஈவினிங் இவ்ளோ ஹேப்பினா வாழ்க்கை முழுதும் இருந்தா சூப்பரா இருக்கும்ல. 5 நாள் இன்னும் உன்கூட இருக்க போறேன். நினைச்சாலே வானத்துல பறக்குற மாதிரி இருக்கு. எப்படியோ மீராவையும் சமாளிச்சிட்டேன். சாரி மீரா உன்கிட்ட இதை மறைச்சதுக்கு. உன்கிட்ட சொல்றதுக்கு ஒரு நேரம் வரும் அப்போ நான் சொல்றேன். என்ன மன்னிச்சிடு. “ தனக்குள்ளே சொல்லிக்கொண்டே தூங்கியும் போனாள். )

கார்த்திக்கின் நிலைமையோ அங்கு கவலையிலும் கவலை. ராஜியுடன் இருந்த நினைவுகள் அவனை பாடாய் படுத்தி கொண்டிருந்தது. மனித மனம் ஒரு குரங்கு. நாம் எதை நினைக்க கூடாது என்று நினைக்கிறோமோ மனம் அதையே திரும்ப திரும்ப ஞாபகத்திற்கு கொண்டு வரும். கார்த்திக் அந்த குரங்கின் அவஸ்தையில் துடித்து கொண்டிருந்தான். கண்ணாடிக்கு முன் நின்று தன்னை தானே கேள்வி கேட்டான்.

“ டேய் கார்த்தி என்னடா ஆச்சு உனக்கு. ஏன்டா அவளை பத்தி நினைக்குற. நினைக்காதடா. “

“ த்தூ, உனக்கு இந்த அவஸ்தை தேவையாடா. என்ன மயிருக்கு கல்யாணம் பண்ணின. “ அவன் மனசாட்சி கேட்டது.

“ நான் எங்கடா பண்ணினேன். பண்ணி வச்சிட்டாங்க. “

“ நீதான தாலி கட்டின. அப்புறம் என்ன கசக்குது உனக்கு. இன்னைக்கு அவ உன் பின்னாடி உக்காரும் போதும் உரசும் போதும் சுகமா இருந்துச்சுல்ல. “

“ ச்சீ. அசிங்கமா பேசாத. நம்மள மயக்க பொண்ணுங்க எடுக்குற ஆயுதமே இந்த அடல்ட் ஒன்லி விஷயம் தான்.“

“ அப்பாடி. ம்ம்ம்ம். ஒன்னுமே தெரியாத அப்பாவி மாதிரி ஏன் நடிக்குற. சரி அவளை பத்தி இபோ ஏன் நினைச்சிட்டு இருக்க. அதுக்கு பதில் சொல்லு. “

“ டேய் நான் எங்கடா நினைச்சேன். நீதான் அவளை என்னோட மைண்ட்க்கு அடிக்கடி நியாபக படுத்துற. “

“ நான் எங்கடா நியாபகப்படுத்தினேன். நீதான நினைக்க. சரி நீ என்ன நினைச்சன்னு யோசிச்சி பாரு. “

“ அவளை பத்தி நினைக்க கூடாதுன்னு யோசிக்க கூடாதுன்னு நினைச்சேன். “

“ அட மரமண்டையா அவளை பத்தி நினைக்க கூடாதுன்னு நீ யோசிக்கும் போதே அவ வந்துட்டா. சோ என்னோட நான் அவளை உன்னோட மைண்ட்க்கு நான் அதை மட்டும் தான் உன்னோட மைண்ட்க்கு அனுப்புவேன். “

“ நீ ஒரு ஆணையும் புடுங்க வேணாம். அவளை எப்படி போஹா வைக்கனும்னு எனக்கு தெரியும். உன்னையும் எப்படி போக வைக்கனும்னு தெரியும். “

“ என்னடா பண்ணுவ நீ. சரக்கு அடிப்ப. அவ்ளோ தான. சரக்கு அடிச்சா நான் முழுசா உன்ன விட்டுட்டு போயடுவேனா. இன்னைக்கு போதை தெளியுர வரை நான் வேலை செய்யாம இருப்பேன். போதை தெளிஞ்சதும் நான் வந்துடுவேண்டா. “

“ இப்போதைக்கு உன்ன விரட்டினா போதுண்டா. முதல்ல உன்ன விரட்டுறேன். அப்றம் அவளை விரட்டுறேன். “

“ போடா போ. “

கார்த்திக் கண்ணாடியை விட்டு வந்து போனை எடுத்தான். சந்த்ருவிற்கு கால் செய்தான். அவன் கால் செய்ய அதில்
“ கண்ணம்மா உன்ன
மனசில் நினைக்கிறேன்
பார்வை பாரடி பெண்ணே
என்னென்னமோ கொஞ்சி
பேச துடிக்கிறேன்
நீயும் பேசினா கண்ணே…”

பாடல் படிக்க “ ச்சை “ என்று வெறுப்புடன் போனை கட் செய்தான்.

போனை ஆப் செய்து விட்டு சட்டையை கழட்டினான்.

சட்டையை மீண்டும் ஒரு முறை பார்க்க ராஜி அவன் முதுகில் மோதியது நினைவிற்கு வந்தது.

சட்டை கலட்டி மூலையில் தூக்கி எறிந்தான். டி ஷர்ட் மற்றும் ஷார்ட்ஸ் எடுத்து மாட்டி கொண்டு பைக்கை எடுத்து கொண்டு ஒயின் ஷாப் சென்றான். தேவையான சரக்குகளை வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்து போதை ஏறும் வரை அடித்தான். மட்டையாகும் வரை அடித்து விட்டு அப்படியே உறங்கியும் போனான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *